விலைவாசிஉயர்வு...
வேலையின்மைக்கு எதிராக...
வேலையின்மைக்கு எதிராக...
சேலம் மாநகரில் துவக்கம்!
சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் ஜங்சனில் மாவட்டக்குழு செயலாளர் தோழர். பி தங்கவேலு அவர்கள் துண்டறிக்கை வினியோகம் நிகழ்வை இன்று 13.7.16 மாலை தொடங்கி வைத்தார்.
#
சேலம் மாநகரம்: விலைவாசி உயர்வு... வேலையின்மை எதிர்ப்பு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்டோ பிரச்சாரம்!
சேலம் மாநகரம் வடக்கு சார்பாக கோரிமேடு பகுதியில் இன்று 14.7.16 காலை 11.30க்கு சேலம் மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு அவர்கள் ஆட்டோ பிரச்சாரத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார்!
#
விலைவாசி உயர்வுக்கு எதிராக... வேலை வாய்ப்புகளை உருவாக்கிட...
வாழ்க்கை தரம் பாதுகாத்திட...
மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட்கட்சி நாடுதழுவியபிரச்சாரஇயக்கம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு சார்பில் 15.07.16 இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
சேலம் மாவட்டக்குழு செயலாளர்
பி. தங்கவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மாநில குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்திரி ஆகியோர் விளக்கவுரையாற்றினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிஐடியூ, மாதர், வாலிபர் சங்கத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
.vimala
[15:11, 7/15/2016] +91 94441 40563: Good!!!
[15:19, 7/15/2016] +91 94865 96641: Thanks Comrades!
[16:52, 7/15/2016] +91 94420 60775: 👏👏👏
••விலைவாசி உயர்வு... வேலையின்மை.. ஆனால் மோடி அரசு ஈராண்டு கொண்டாட்டம்..! லேடி அரசோ வெற்றிவிழாவில்..!
••ஆம் மோடியோ வெளிநாட்டில்..! லேடியோ கொடைநாட்டில்..! தமிழ் மக்கள் கையில் மதுபாட்டில்..! வாக்களித்த மக்களோ நடுரோட்டில்...! விளக்கி
••சிபிஎம் நங்கவள்ளி மற்றும் சேலம் மாநகரம் மேற்கு 17.7.16., மேட்டூர் 18.7.16 தேதிகளில் தெருமுனை பரப்புரை..!
----\\\\
----\\\\
மக்கள் மன்றம் சென்றால்...
அதுவும் திமுக வலுவாக உள்ள நிலையில் அதிமுக தொகுதி மேம்பாடு நிதியில் பாகுபாடு காட்டுமா? என்பது கேள்விக்குறியே! திமுக நீதிமன்றம் சென்றால் உண்மை வெளியாகும்.
*திமுக நீதிமன்றம் செல்வதைவிட மக்கள் மன்றம் சென்றால் அதிமுகவை அதிகமாக அம்பலப்படுத்தலாமே...
ஏன்? என்ன? தயக்கம் திமுகவுக்கு!
---\\\
யாரும் வையாதீர்!
இன்று 13.7.16 காலை சிபிஐ சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.மோகன் அவர்கள், சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம் வந்திருந்தார்.
அப்போது ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, நானும் (சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு) அவரும் அலுவலக சுற்றுச்சுவர் பகுதியில் நின்று கொண்டு, மேட்டூர் முதியோர் கண்சிகிச்சையில் ஏற்பட்ட பாதிப்போருக்கு ஆதரவாகவும், சேலம் மாநகராட்சி மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) ஆகியவற்றின் அலங்கோலங்கள் குறித்தும் இயக்கம் நடத்தலாமா? என்று பேசிக் கொண்டிருந்தபோது...
தீக்கதிர் நிருபர் தோழர் எழில் கேமிராவின் குறும்புத்தனத்தில்..! சரி... போடுவோமே... என போட்டுள்ளேன்!
யாரும் வையாதீர்! சரிங்களா?
----\\\
நிச்சயம் சீர்திருத்தம் வேண்டும்...
*அத்துமீறலா? அராஜகம்! சட்டமீறலும்கூட! நீதிமன்றம் கண்டனம் மிகச் சரியானது! காவல்துறை... அதிமுக ஆட்சியில் ஈரலும் கெட்டுவிட்டது.
*தற்போது இருக்கும் போலீசை அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
*காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள் போல்தான் காவல்துறை செயல்பாடு இருக்கிறது.
*இவர்களின் ஜம்பம் பூராவும் சாதாரண அப்பாவி மக்கள் மீதுதான். சமூக விரோத கும்பல்களுடனோ, பணக்கார பேர்வழிகளுடனோ பவ்வியமாக நடந்துக் கொள்வதுதான் தமிழ்நாடு காவல்துறை.
இதில் நிச்சயம் சீர்திருத்தம் வேண்டும். இதுபோன்று காட்டுமிராண்டி போலீசுகளை வேலையை விட்டு நீக்கினால் மட்டும் போதாது; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பி த்து விடாமல்!
*இதற்கெல்லாம் காரணம் அரசும், அதன் கொள்கைகளும்தான்! தமிழத்தில் ஆட்சிகள் மாறியதே தவிர கொள்கைகள் மாறவில்லையே!
*அதிகாரம் துஷ்ப்பிரயோமும், லஞ்ச ஊழலும் தலைவிரித்தாடும் துறை காவல்துறையே!
*அந்த வீடியோ காட்சி மட்டும் இல்லையென்றால் ஊத்தி மூடியிருப்பார்கள் காவல்துறையும், ஆட்சியாளர்களும்!
*இன்று 14.7.16 PTTV நேர்படபேசுக்கு! இதில் ஒரு வரி பதிவேற்றமானது!
[22:43, 7/14/2016] Vemala Vitha Nkl: Your comment is 100000%correct comrade...vimala Vidya
[23:18, 7/14/2016] +91 94865 96641: Thanks Comrade!
----\\\
எதை அளவுகோலாக...
தோழரே, வணக்கம்!
எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்? அல்லது தாங்கள் நகர்புற கட்சிக்காரர்களாக பணியாற்றியதால், அல்லது தொழிற்சங்க அரங்கம் சார்ந்து பணிகளை செய்து வந்ததால், இந்த நிலைபாட்டுக்கு வந்தீர்களா? என்றும் தெரியவில்லை. இன்னொருத்தர் அந்த 7% பேர்தான் லெவி தருகிறார்கள் என கேலி செய்கிறார்.
இந்தியாவில் 'புரட்சி' பாதை எது? என்பதில் இருந்தே தங்களுக்கு இருக்கும் நிலைபாட்டில் இருந்து, இவ்வண்ணம் நிலை எடுக்கிறீர் போலும்! அது உங்கள் இஷ்டம்! இந்தியாவில் முதலில் துவங்கிய வெகுஜன அமைப்பு அஇவிசவும், மாணவர் அமைப்பும் தான்! இது ஒரு புறம். இன்னொரு புறம் தற்போது நாடு முழுவதும் நடந்துவரும் பிரச்சார இயக்கம் யாருக்கானது? கடந்த செப் 2ல் 10 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனரே! அதே இன்னும் கொஞ்சம் கூடுதலாக பங்கேற்றிருந்தால்... ஒரு நாள் என்பது பல நாட்களாக தொடர்ந்திருக்க முடிந்திருக்குமேயானால், என்ன நடந்திருக்கும்?
இதைதான் மாமேதை லெனின் இவ்வாறாக கூறுகிறார்... "இந்த சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறு சிறு போராட்டங்களும் புரட்சிக்கான ஒத்திகைகளே".
ஆம், அதைதான்-- இதற்குமுன் எந்த முன்மாதிரியும் இல்லாத இந்தியாவில் சிபிஐஎம் மும், இடதுசாரி அமைப்புகளும், தங்களின் புரிதலில் இருந்து செய்து வருகின்றன. ஏகடியம் செய்வது எளிது! இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு மதம், சாதி, இனம், மொழி என தன்னகத்தே கொண்டுள்ள நாட்டில் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரம் வருவது அவ்வளவு எளிதா? மக்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் இலக்கை எட்டாதென தெரிந்துதான் சிபிஐஎம் செயலாற்றி வருகிறது! அந்த தளராத நம்பிக்கையுடன்தான் பயணித்து கொண்டிருகிறோம்!
சண்டையில் கிழியாத சட்டை ஏதென தமிழ் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு; அதுபோல் குற்றம் குறை இல்லாத புரட்சிகர இயக்கம் எங்கும் இருந்தது இல்லை; இருக்கப்போவதுமில்லை! வரலாற்று அனுபவங்கள் நிச்சயம் அதை சரி செய்யும்; புரட்சிகர சக்தி நிச்சயம் இலக்கை எட்டும்! அதுவே சிபிஐஎம் ன் நம்பிக்கை! நன்றி!
(இன்றைய 14.7.16 தோழர் ஜிஆர் அறிக்கையை ஒட்டியும், வெட்டியும் அதாவது- "7% உள்ள தொழிற்சங்கத்தையே கட்டிப்பிடித்துக் கொண்டும், மீதமுள்ள 93% பேரை கண்டு கொள்ளாமலும் இருப்பதாக" முகநூலில் பதிவிட்ட ஒரு தோழருக்காக..!)
----\\\\
உரிமை பெற்றவர்களே... பெண்கள்..!
இப்பூலகில் அனுபவிக்க உரிமை பெற்றவர்களே... பெண்கள்..!
#
••மீண்டும் பழைய நூறாண்டுகளுக்குப் போகச் சொல்லி ஒரு பழைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களா?
••பெண்களை தாய்வழி சமுதாயத்தைத் தவிர (நானறிந்த வகையில்) போகப்பொருளாக, அதாவது ஆணின் உடமையாகத் தான் பார்க்கப்பட்டு வந்துள்ளது.
••எல்லா கால உடையிலும் கவர்ச்சியாகவோ, கவர்ச்சியின்றியோ இருப்பதென்பது நாம் பார்க்கும் பார்வையில் இருந்தே வந்துள்ளது. ••ஆகவே பெண்களும் ஆசா பாசம் கொண்ட ஒரு உயிரினம். ஆணுக்கு இருக்கும் அனைத்து குணாதிசயங்களும் உண்டு.
••ஆனால் ஆண்களைப் போன்ற 'சுதந்திரமாக' இருக்க அதாவது விருப்பப்பட்ட உடை அணிதல் உள்ளிட்டு அனைத்தையும் இப்பூலகில் அனுபவிக்க உரிமை பெற்றவர்களே!
••பிச்சை எடுத்து பிழைக்கும் பெண்ணைக் கூட 'பழுதான' பார்வையில் பார்த்து கொடுமை படுத்தும் உலகம் இது!
••ஆம், இது சுரண்டல் அமைப்பின் கோளாறு! ஆண்களின் அடிமை பெண் என்று பார்க்கும் கோளாறு! நன்றி!
#
(இந்த இரு இமேஜ் ல் ஒன்றை முதலில் போட்டு, இரண்டையும் இழுத்து மூடினால்தான் நாடு உருப்படும்! என்கிற அர்த்தத்தில் வலைதள நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தார்! 'அது தவறான பார்வை' என்ற அர்த்தத்தில் பதில் பதிவை நான் உள்ளிட்டு, சிலர் போட்டிருந்தோம்! அதற்கு அவர், நான் பெண்மையைப் போற்றுபவனே என்ற அர்த்தத்தில் பதிவு ஒன்று மீண்டும் போட்டுவிட்டு, இன்னொரு பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்! அதனை தொடர்ந்து இந்த பதிவு; அவரின் வலைப்பக்கத்தில் பதிவிட அவரின் பெயர் நினைவிலில்லை! அதனால்..!)
---\\\
காவிமயக் கொள்கையே!
#புதிய கல்விக் கொள்கை காவிமயக் கொள்கையே! அது ஏற்கவோ ஆய்வு செய்வோ தேவையில்லை; நிராகரிக்க வேண்டியதே!
#புதிய கல்விக் கொள்கை காவிமயக் கொள்கையே! அது ஏற்கவோ ஆய்வு செய்வோ தேவையில்லை; நிராகரிக்க வேண்டியதே!
#காங்கிரஸ் ஆட்சியில் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்திற்கு ஏற்ற மாதிரி அப்பொழுது புதிய கல்வி கொள்கை வகுத்தனர். #தற்போது அந்த மூன்று பீடைகளோடு, நான்காவது பீடையாக காவியை புகுத்துகின்றனர்; அதற்கு தோதாக சமஸ்கிரதத்தைப் பயன்படுத்துகின்றனர்! ஆகவே இது காவிமயத்தின் ஒரு பகுதியே!
#ஆம், இது- பிஞ்சிலே நஞ்சைக் கலக்கும் களவாணித்தனம்! #இதன்மூலம் நாட்டை நாசமாக்கும், இந்துத்துவமயமாக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மறைமுக அஜண்டா தற்போது நேரமுக அஜண்டாவாக மாறியுள்ளது.
#தாய்மொழிக் கல்விக்கு சாவுமணி ஓசையே இந்த சமஸ்கிரதத்துடன் கூடிய காவிமயக்கல்வி! இது புதிய மொந்தையில் 'பழங்கள்ளு!' இந்திய இளைஞர்களை பாழும் கிணற்றில் தள்ளும் ஏற்பாட்டின் 'புதியவடிவம்!'
----\\\\
பயிற்சி முகாம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னணி ஊழியருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று 16.7.16 சேலத்தில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னணி ஊழியருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று 16.7.16 சேலத்தில் நடைபெற்றது.
மாவட்டம் தழுவிய இந்த பயிற்சி முகாமில் என்.குணசேகரன் (மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர், சிபிஐஎம் மாநில செயற்குழு) சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வேல்முருகன், Dyfi மாநில தலைவர் செந்தில்குமார் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
மாவட்ட செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்டு பங்கேற்றனர்!
---\\\
---\\\
குற்றச்சாட்டு சரியே!
••கருணாநிதியின் குற்றச்சாட்டு சரியே! ஆனால் ஒன்று- 'ரைட் மேன் ராங் பார்ட்டி' என்று அன்று வாஜ்பாய் பற்றியும், பாஜக பற்றியும் சொன்னாரே... அதை தற்போதாவது திரும்ப பெறுவாரா?
••கருணாநிதியின் குற்றச்சாட்டு சரியே! ஆனால் ஒன்று- 'ரைட் மேன் ராங் பார்ட்டி' என்று அன்று வாஜ்பாய் பற்றியும், பாஜக பற்றியும் சொன்னாரே... அதை தற்போதாவது திரும்ப பெறுவாரா?
••பாஜகவின் குருகுலமான ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அன்று முதல் என்றுமே நாட்டின் 'மதச்சார்பற்ற நிலை'யின் அர்த்தத்தை மாற்றுவதில் குறியாகத்தான் இருக்கிறது; இருந்தும் வருகிறது!
••கருணாநிதி விமர்சனம் இரண்டிற்கும்தான்! ஆம், மதச்சார்பின்மை க்காகவும், அரசியலுக்காகவும்தான்!
••பாஜக அரசின் மதவாத விஷக்கொடுக்கு மிகுந்த வேகத்தில் இந்த மக்களின் மதச்சார்பற்ற தன்மையைத் தாக்கி வருகிறது! அதுதான் ஒருபகுதிதான் கங்கைக் (கழிவு) நீரை மோடி அரசு மூடிப்போட்டு தபால் ஆபீசில் விற்கத்துடிப்பது!
••அரசு இயந்திரத்தை இப்படி பட்டவர்த்தனமாக இந்துத்துவாக்குப் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது! அடுத்தடுத்து பூஜை புனஸ்காரம் என்று ஒவ்வொன்றாக விரைவில் அரங்கேற்றும்; அதற்கான 'படி'யும் வழங்கக்கூடும்!
---\\\\
சோரகை தியாகி பெருமாள் நினைவாக...
இன்று 16.7.16 (ஆடி 1) நிலமீட்பு போராளி சோரகை தியாகி பெருமாள்
68 வது நினைவுநாள்!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சோரகை கிராமம். இதில் 1948 ஆம் ஆண்டு, கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாகி, தங்களின் துண்டு துக்காணி நிலத்தை, தாங்கள் பட்டக்கடனுக்கு அன்றைய கந்துவட்டி கும்பலிடம் பறிகொடுத்து விட்டு மைசூர் போன்ற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களை செங்கொடி அமைப்பு ஒன்று திரட்டி, செங்கொடியின் நிழலில் போர் முழக்கமிட்டு, சுமார் 3000 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அந்த வீரம் செரிந்த போரில் சுதந்திர இந்திய போலீசு குண்டுக்கு பலியானவர் தியாகி பெருமாள்!
••
இன்று 16.7.16 நங்கவள்ளி ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்பி.தங்கவேல், ஒன்றிய தலைவர் எம்எஸ்.வெங்கடாசலம், செயலாளர் எஸ்வி.வேம்பன் உள்ளிட்டோர் தியாகி பெருமாள் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி 11 கிளைகளில் செங்கொடி ஏற்றி, நினைவு கூர்ந்தனர்!
••
அந்த கால தியாகிகளின் புகைப்படம் கூட இல்லாமல் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் ஏராளம்! அந்த வரிசை பட்டியலில்தான் இவரும்!
••
சோரகை தியாகி பெருமாள் நினைவைப் போற்றுவோம்! தியாகி சோரகை பெருமாள் போன்ற எண்ணற்ற வீரத்திருமகன்கள் கட்டிக் காத்த இந்திய மண்ணை, இன்று அன்னிய கம்பெனிகளிடம் அடகுவைக்கும் பாஜக அரசை வீழ்த்திட சபதமேற்போம்!
---\\\
காவி அரசே... மோடியரசு..!
காவி அரசே... மோடியரசு..!
••டவுசர் பாய்ஸ்...
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் (சாராயம்) விற்பனை செய்வது...
1. காசு கள்ளாப்பெட்டி நிரப்புவதற்கு!
2.மக்களை போதையின் பிடியில் சீரழிப்பதற்கு! அதுமாதிரிதான் கங்கைநீரையும் விற்கிறீர்களா?
••அப்படி என்றால் சரி! அதைத்தான் மதச்சார்பற்ற வாதிகளும் கூறுகிறார்கள்!
1. காசு கள்ளாப்பெட்டி நிரப்புவதற்கு!
2.மக்களை போதையின் பிடியில் சீரழிப்பதற்கு! அதுமாதிரிதான் கங்கைநீரையும் விற்கிறீர்களா?
••அப்படி என்றால் சரி! அதைத்தான் மதச்சார்பற்ற வாதிகளும் கூறுகிறார்கள்!
••ஆனால், 'டாஸ்மாக்'கால் (நீரால்) மக்கள் மதரீதியாக பிளவுபடுத்தும் சதி இருப்பதாக தெரியவில்லை; 'கங்கைநீரால்' நாடு முழுவதும் கலகம் மூட்டும் களவாணித்தனம் இருக்கிறது தெரிகிறதே!
••ஓட்டுக்கும், நோட்டுக்கும் கங்கைநீரா? கங்கைநீரை விற்பதற்குத்தான் மத்திய அரசா? அதற்கு ஒரு பிரதமரா? காவி அரசே... மோடியரசு என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
••(இன்று 16.7.16 PTTV நேர்படபேசு விவாதத்தை ஒட்டிய பதிவு!)
முனியாண்டி செல்லப்பன் அவர்களே.! (முகநூல் நண்பர்)...
••எம்எல்ஏ சம்பளத்தை முழுவதும் அவரே (ஒரு வாதத்திற்காக) வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் "வறுமையின் பிடி" யாரை வேண்டுமாலும் தாக்கும்! அது எந்த ரூபத்தில் வருகிறதென்று தெரியாது! ஆகவே தோழர் என்.என்., அவர்கள் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து அதற்குரிய உபாயத்தைக் கட்சி தேடி தரும்; அவரை கைவிடாது!
••அதற்காக தாங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதுபோல் கம்யூனிஸ்ட்களின் மக்கள் தொண்டை "எதோ உலகமகா சுரண்டல்" போல் சித்தரிக்க முயலாதீர்! இதர முதலாளித்துவ-மதவாத-சாதிவாத கட்சிகள் போன்றதல்ல கம்யூனிஸ்ட் கட்சி!
••அதற்காக தாங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதுபோல் கம்யூனிஸ்ட்களின் மக்கள் தொண்டை "எதோ உலகமகா சுரண்டல்" போல் சித்தரிக்க முயலாதீர்! இதர முதலாளித்துவ-மதவாத-சாதிவாத கட்சிகள் போன்றதல்ல கம்யூனிஸ்ட் கட்சி!
••உங்களுக்கு ஒன்று தெரியுமா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நானும்கூட வேட்பாளராக நிறுத்தப்பட்டேன்; எனக்கு ஒரு பைசா கூட செலவு கிடையாது; எல்லாம் கட்சி பார்த்துக் கொண்டது; பல லட்சம் செலவானது; நான் ஜெய்த்தாலும், தோற்றாலும் அது கட்சி ஜெயித்தது அல்லது தோற்றதென அர்த்தம்! அன்றும், இன்றும் எனக்கு கட்சி தரும் அலவன்ஸ் தந்துக் கொண்டு தான் இருக்கிறது! என்னை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்கவில்லை! இப்படிப்பட்ட கட்சி சிபிஐஎம்; மனதில் பதியுங்கள்! இதுதான் கம்யூனிஸ்ட்கள்! இருப்பதைக் கொண்டு சிறப்பு வாழும் சாதாரண குடிமக்கள்!
••ஆம், 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த திரிபுரா நிருபன் சக்கரவர்த்தி 2 தகர பெட்டிகளுடன் (ஒன்றில் உடை இன்னொன்றில் புத்தகங்கள்) கட்சி அலுவலகத்திற்கு வந்தாரே ஒழிய "பங்களா"விற்கு போகவில்லை! என்னை எதிர்த்து நின்ற அமைச்சர் ரூ40 கோடி செலவு செய்ததாக தகவல் இருக்கிறது! அவர் மக்களுக்கு சேவை செய்வாரா? கை காசு செலவு செய்யாத கம்யூனிஸ்டுகளா? யார்?
••கம்யூனிஸ்ட் கட்சியின் (முழுநேர) பணியாளர்கள் தான் உண்மையான தவ வாழ்வு வாழ்பவர்கள்; அந்த தவப்புதல்வர்களில் ஒருவர்தான் அன்பு தோழன் என்என்! மக்களுக்காக கம்யூனிஸ்ட்கள்; மக்களுக்காகவே கம்யூனிஸ்டகள்! மக்களை சகலத்திலும் சுரண்டும் இன்றைய முதலாளித்துவ சமுதாயம் முடியட்டும்; மக்களுக்கான அரசாக நாளைய பொழுது விடியட்டும் என கைமாறு கருதாது உழைப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள்! நன்றி!
(தோழர் என்.நன்மாறன் அவர்கள் சொந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறியதாக முகநூல் பதிவுக்கு, ஒருவரின் நீலிகண்ணீர் பதிவுக்கு, பதிவு இது!)
---\\\
••அதற்காக திருமா கூற்றையும் புறம் தள்ளிடவும் முடியவில்லை!
••ஆனால் சம்பவங்களைப் பார்க்கிறபோது, சுவாதிக் கொலையில் மர்மமுடிச்சு இருப்பதுபோலவும் தெரிகிறது!
••வழக்கம்போல் இந்த மர்மமுடிச்சைச் சென்னை உயர்நீதி மன்றம்தான் அவிழ்க்க வேண்டும்!
••ஆனால் சம்பவங்களைப் பார்க்கிறபோது, சுவாதிக் கொலையில் மர்மமுடிச்சு இருப்பதுபோலவும் தெரிகிறது!
••வழக்கம்போல் இந்த மர்மமுடிச்சைச் சென்னை உயர்நீதி மன்றம்தான் அவிழ்க்க வேண்டும்!
••ஆனால் ஒன்று- இந்த சுவாதி கொலையை வைத்து இந்துத்துவா வாதிகள் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க பார்ப்பது மட்டும் நன்கு தெரிகிறது.
••ஆம், இதன்மூலம் தமிழகத்தில் ஒரு மதமோதலுக்கு பாஜக தூபமிட முயற்சிக்கிறது.
••சேலம் மாநகரின் இதயமான லீ பஜாரில் தினந்தோறும்...
••பனிரெண்டாயிரம் வாகணம் (பஸ், லாரி, டெம்போ) கடந்து போகிறது! ஆனால் மக்களும் நடந்து போக முடியவில்லை; டூ வீலரும் ஓடமுடிய வில்லை!
••ஆனால் மாநகராட்சி அதிமுக நிர்வாகமோ ஆழந்த உறக்கத்தில்..!
••18.7.17ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், வர்த்தகர்கள் சங்கம் நடத்திய வாய்மூடி மௌனி போராட்டத்தால், கண் திறந்தது காவல்துறையும், மாநகராட்சியும்! உடனே சாலை செப்பனிடப்பட்டது!
••ஆம்! போராட்டமே புதுவழியை பெற்றுத்தரும்!
----\\\
மங்கி மறைந்துவிடுமென...
மக்கள் நலக் கூட்டணி மங்கி மறைந்துவிடுமென
ஆரூடம் செய்தவர்களுக்கு ஆப்பு!
தொடருமென அறிவிப்பு! ஆம் மக்கள் நலக் கூட்டணி நிரந்தரம்...
மாற்றை விரும்பும் ஜனநாயக சக்திகள் யாரும் வரலாமென அழைப்பு! உள்ளாட்சி தேர்தலில் ஆதரிப்பீர் மக்கள் நலக் கூட்டணியென அறைகூவல்!
மங்கி மறைந்துவிடுமென...
மக்கள் நலக் கூட்டணி மங்கி மறைந்துவிடுமென
ஆரூடம் செய்தவர்களுக்கு ஆப்பு!
தொடருமென அறிவிப்பு! ஆம் மக்கள் நலக் கூட்டணி நிரந்தரம்...
மாற்றை விரும்பும் ஜனநாயக சக்திகள் யாரும் வரலாமென அழைப்பு! உள்ளாட்சி தேர்தலில் ஆதரிப்பீர் மக்கள் நலக் கூட்டணியென அறைகூவல்!
---\\\
நிதிநிலை சீராக இல்லை!
••தமிழகத்தில் நிதிநிலை சீராக இல்லை! ஏற்கனவே ரூ2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது!
••ரூ2,470 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
••போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறையும் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
••இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் என்பது மக்கள் மீது சுமையை சுமத்தும் என்றே தோன்றுகிறது!
நிதிநிலை சீராக இல்லை!
••தமிழகத்தில் நிதிநிலை சீராக இல்லை! ஏற்கனவே ரூ2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது!
••ரூ2,470 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
••போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறையும் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
••இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் என்பது மக்கள் மீது சுமையை சுமத்தும் என்றே தோன்றுகிறது!
செருப்படியா..?
[21:00, 7/21/2016] +91 94437 76263: 👍
[21:01, 7/21/2016] +91 94882 60401: 👍🏻
---\\\
உள்ளாட்சி தேர்தலுக்கான...
••உள்ளாட்சி தேர்தலுக்கான நிதிநிலை அறிக்கையே இது.
••நிர்வாக உத்தரவு மூலம் விலைவாசிகளை ஏற்றி, மக்களை ஏமாற்றி விடுவார்கள்.
உள்ளாட்சி தேர்தலுக்கான...
••உள்ளாட்சி தேர்தலுக்கான நிதிநிலை அறிக்கையே இது.
••நிர்வாக உத்தரவு மூலம் விலைவாசிகளை ஏற்றி, மக்களை ஏமாற்றி விடுவார்கள்.
••வரியில்லா பட்ஜெட் என்பது மக்களின் மதியை மயக்கவே!
••ரூ2.50 கோடி கடனை வைத்துக் கொண்டு வளர்ச்சியா? அது கானல்நீரே! ••இது வழக்கமான தேர்தல் பட்ஜெட்! 12 மாநகராட்சி என்பது பாதி தமிழகம் அல்லவா?
••அதனால்தானே தேர்தல் முறையில் தனக்கு சாதமாக மாற்றம் கொண்டு வந்தது அதிமுக சென்ற சட்டமன்றத்தில்!
••அப்படி நிலவரம் இருக்கும்போது வரி போட்டு பட்ஜெட் போடு தைரியம் இந்த ஆண்டில் இல்லை ஜெயலலிதாவுக்கு!
---\\\
ஊது ஊதுன்னுஊதுகின்றன..!
// பள்ளி தீ விபத்தில் கருகி இறந்த குழந்தைகளுக்கு இன்னும் ஒழுங்கா நீதி கிடைக்கவில்லை.
// பள்ளி தீ விபத்தில் கருகி இறந்த குழந்தைகளுக்கு இன்னும் ஒழுங்கா நீதி கிடைக்கவில்லை.
நேற்று போட்ட காபாலி வழக்குக்கு தீர்ப்பு வந்துருச்சி..!
நாடாடா இது......😡😡 //
இதுதான் முதலாளிகளின் நீதி என்பது..! இதைத்தான் மாற்ற வேண்டும் என்கிறது மார்க்சீயம்! நீதி என்று வந்தால் பொதுவில் வைப்போம்!
இப்படித்தான்... முதலாளிகளின் ஒரு சமூக சேவகருக்கு அநீதி நேர்ந்து விட்டதாக ஊடகங்கள் ஊது ஊதுன்னு ஊதுகின்றன சேலத்தில்..!
---\\\
சந்துல சிந்து..!
சந்துல சிந்து..!
//....தமிழர்களும் காசுமீரிகளும் இந்தியர்களல்ல. காசுமீர் போலவே தமிழ்நாடு தமிழருக்கே என்று ஒருமித்து முழங்கினால் நாமும் அவர்களும் ஒருமைப்பாடு கொள்வோம். அதன் வழி இந்தியா அண்டை நாடாகும். விடுதலைத் தேசங்கள் பிறக்கும். இதற்கு தமிழகத்தைத் தொடர்ச்சியான கருத்துப் பரப்புரை மூலம் அணியப்படுத்தும் பொறுப்பிலுள்ள போராட்ட ஆற்றல்களுக்கு உடனடியாக அதற்கான பணியைத் தொடங்கும் பொறுப்பைத் தந்தது நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் ஆகச் சிறந்த பயன். - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்//
(-வாட்ஸ்அப் இல் படித்தது! பார்த்தது!)
இதற்கு பெயர்தான் சந்துல சிந்து பாடறது என்பது! தனிநாடு பிரச்சனைக்கு தீர்வாகாது! சோவியத் ஒன்றியத்தில் இப்படித்தான் கூத்தாடித் கூத்தாடிப் போட்டு உடைத்தார்கள்! உடைந்துபோன அந்த நாடுகள் எல்லாம்... எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து எல்லாம் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்களா தற்போது?
இந்த மாதிரியான குரல்கள் எல்லாம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழி வகுக்கும் என்பதற்கு சோவியத் ஒன்றே போதுமான சான்று! ஆனால், இதை- தோழர் தியாகு போன்ற தமிழ்தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள்! இவர்கள் எல்லாம் "தனிநாடு பைத்தியங்கள்!" வேறென்ன சொல்ல? மார்க்சீயத்தை "ராவா" (எதையும் கலக்காமல் முழு வீரியத்துடன் அப்படியே சாப்பிடுவது; ஆம் மண்ணுக்கேத்த மார்க்சீயத்தை மறுதளிப்பது) உட்கொண்டவர்கள்! அல்லது உட்கொள்ளத் திணிப்பவர்கள்! திணிப்பு சரியான வினையாற்றாது!
----\\\\
சேலம் மாநகரத்தில் இருப்பது காவல் துறையா?
கொலைவெறி பிடித்த வெறிநாய் துறையா?
சேலம் மாநகரத்தில் இருப்பது காவல் துறையா?
கொலைவெறி பிடித்த வெறிநாய் துறையா?
#
••17.7.16 இரவு 11 மணி அளவில் ஹெல்மெட் பிடிப்பதாக மரவனேரி பகுதியில் ஒரு இளைஞனை (வெங்கட்ராஜ் வயது 25 வீராணம்) சேலம் மாநகரம் போலீசும், ஹோம் காடு போலீசும், இரண்டே அடியில் கொன்றே விட்டார்கள்!
••வேகத்தடையில் விழுந்து செத்துவிட்டான் என கதையை ஜோடித்து விட்டார்கள்! ஆனால் அந்த ஹோம் காடு போலீசை வீட்டிற்கும், அந்த காவலரை ஆயுதப்படைக்கும் அனுப்பி விட்டார் சேலம் காவல் ஆணையர்! இந்த கொலைவெறி பிடித்த போலீசுக்கு ஆயுதபடையல்ல புகழிடம் சேலம் மத்திய சிறைச்சாலையும் அதிகபட்ச தண்டனையும்தான்!
••இதற்கான நேர்மையான விசாரனை தேவை! தமிழக
அரசு செய்யுமா? சேலம் போலீசின் கொலைவெறியை கண்டிப்போம்! கொலைக்கு நியாயம் பெறுவோம்! குடும்பத்திற்கு உதவுவோம்!
அரசு செய்யுமா? சேலம் போலீசின் கொலைவெறியை கண்டிப்போம்! கொலைக்கு நியாயம் பெறுவோம்! குடும்பத்திற்கு உதவுவோம்!
••இன்று 22.7.16 மதியம் வெங்கட்ராஜ் பெற்றோரை Dyfi மாவட்டச் செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்டு தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோதுதான் அமுக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான உண்மை வெளியே தெரிய வந்துள்ளது!
---\\\
வரமல்ல சாபமே!
••சந்தேகம் வேண்டாம் வரமல்ல சாபமே!
வரமல்ல சாபமே!
••சந்தேகம் வேண்டாம் வரமல்ல சாபமே!
••இது மாதிரியான ராஜஷப்படம் எதற்கு? யாருக்கு பயன்?
••கள்ள டிக்கெட் கொள்ளை பெரும் கொள்ளை!
••நாடு எங்கே போகிறது! 12000 பிரிண்டா? இது உலகமகா கொள்ளையன்றோ!
••விடியற்காலை 4 மணிக்கு திரை அரங்குகளில் திரைப்படம் (விடிய விடிய காத்திருந்து) பார்க்கும் கேவலம், அவலம் உலகில் வேறெங்கும் உண்டா?
••விடியற்காலை 4 மணிக்கு திரை அரங்குகளில் திரைப்படம் (விடிய விடிய காத்திருந்து) பார்க்கும் கேவலம், அவலம் உலகில் வேறெங்கும் உண்டா?
••என்ன போதை இது? டாஸ்மாக் போதையைவிட கொடியது அல்லவா?
••இதற்கு யார் எங்கே விழிப்புணர்வு பரப்புரை செய்வது?
••ரூ2.50 லட்சம் கடனிருக்க, ரூ40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை பட்ஜெட் தமிழத்தில் தாக்கல் ஆகி இருக்கிறது. இதற்கு சிறு எதிர்ப்புகூட இல்லை. ••ஆனால் தியேட்டர் முன் உள் ரகளையோ ரகளை!
••ஏ..! தமிழகமே உன் வீரம் எல்லாம் எங்கே? ஏன் இப்படி விரயம் ஆகிறது?
••'விளங்க முடியாத தமிழன்' நானாகி போனதற்கு யார் காரணம்?
••ரூ20 கோடி 'ஒயிட் மணி' சம்பளத்தில் அப்படி என்ன உழைப்பை உழைத்து விட்டார் கபாலி ரஜினிகாந்த்!?
----\\\
நினைவேந்தல்..!
நினைவேந்தல்..!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்வராயன் மலை (சேலம்) இடைக்குழு உறுப்பினர் அர்ச்சுணன் நினைவேந்தல் நிகழ்ச்சி...
இன்று 23.7.16 மதியம் இடைக்குழு செயலாளர் ஏ.பொன்னுசாமி தலைமையில் கருமந்துரையில் நடைபெற்றது. சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு அர்ச்சுணன் புகைப்படத்தைத் திறந்து, அவரின் பணிகளை நினைவு கூர்ந்தார்!
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிஆர்.மாதேஷ்வரன், ஆத்தூர் வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராமசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி, பழனியம்மாள் அர்ச்சுணன் உள்ளிட்டு ஏராளமான மலைவாழ் மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்...
••குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக கூறி தலித் இளைஞர்களை தாக்கிய இந்துத்துவா வெறியர்களைக் கண்டித்தும்...
••உ.பி முன்னால் முதல்வர் மாயாவதியை இழிவாக பேசிய BJP எம்பியைக் கண்டித்தும்...
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 23.7.16 மாவட்ட தலைவர் A.கலியபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
---\\\
அரசியலின்றி வேறென்ன?
அரசியலின்றி வேறென்ன?
••நூலக பராமரிப்பில் அரசியலின்றி வேறென்ன? எல்லாம் அரசியலே! ••அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் சர்சை அய்ந்து வருடத்தை கடந்து அரசியலாகி வருவதுதான் வேதனை!
••நீதிமன்றம் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறதோ என எண்ணும் அளவுக்கு அதிமுக ஆட்சி போய் கொண்டு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
••'அம்மா' ஆட்சியில் 'அண்ணா'வுக்கு என்ன வேலை? பேசாமல் அம்மா நூலகம் என மாற்றி விட்டால், தற்போதைக்கு சரியாக இருக்குமோ?
••டாஸ்மாக் கடை பிரச்சனையில் விரைந்து செயல்படும் அதிமுக அரசு, நூலகம் பிரச்சனையில் தள்ளாடுவதில் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஒன்றுமில்லை!
••இன்று 23.7.16 PTTV நேர்படபேசுக்கு!