Friday 28 October 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு! 
மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே!  
சேலத்தில் 18.10.16இல் நடந்த ரயில் மறியல் போது... 
கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையை கண்டித்து... 
26.10.16இல் ஆவேச ஆர்ப்பாட்டம்! 

தலைமை: பி.தங்கவேலு
சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர்
கண்டன உரை: இரா.முத்தரசன் 
சிபிஐ மாநிலச்செயலாளர், கே.ஜோதிலட்சுமி சிபிஎம் மாநிலக்குழு, ஆ. ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர், நாவரசு விசிக மண்டல அமைப்பு செயலாளர், கோ.மோகனசுந்தரம் சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர், நன்றி உரை: எம். ராமன் சிபிஐ மாவட்ட பொருளாளர்.

மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ந.மகேந்திரவர்மன், விசிக மண்டல தேர்தல் பொறுப்பாளர் சௌ. பாவேந்தன், சேலம் மக்களவை தொகுதி பொறுப்பாளர் இமையவர்மன், மேற்கு மாவட்ட செயலாளர் செ. அய்யாவு, வடக்கு மாவட்டச்செயலாளர் அ.வசந்த், சிபிஎம் மாவட்ட செயற்குழு ஆர். வெங்கடபதி, சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர்கள் எம். முனுசாமி, டி.கண்ணன் உள்ளிட்ட 500 க்கும் மேலானோர் பங்கேற்றனர்.                                     ----\\\
மக்கள் நலக் கூட்டணி கடும் கண்டனம்! 
சேலம் ஜங்ஷன் 2 மணி நேரம் ஸ்தம்பிப்பு! 
போலீஸ் தடியடி! சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ. மோகன் கால்முறிவு! 

##
சேலம் ஜங்ஷனில் 18.10.16 மக்கள் நலக் கூட்டணி சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது. சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பி. தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ. மோகன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆனந்தராஜ், மகேந்திரன், விசிக மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், அய்யாவு, வசந்த் உள்ளிட்ட சுமார் 1000 பேர்கள் கோவை ரயிலை மறியல் செய்ய திரண்டு சென்றனர்.

அப்பொழுது சேலம் சரக காவல் உதவி ஆணையர் விஜய் கார்த்திக் ராஜா, சேலம் மாநகர காவல் ஆவண காப்பக உதவி ஆணையர் கந்தசாமி, சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ், பள்ளப்பட்டி உதவி ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் போராளிகளை தடுப்பு அமைத்து தடுத்தனர்.

அப்பொழுது உதவி ஆணையர் கந்தசாமி தோழர் மோகனை தாக்கியதால் அவரின் இடது கால் முறிவு ஏற்பட்டது. காவல்  ஆய்வாளர் பொன்ராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஞானசௌந்தரியை நாகூசும் வகையில் ஆபாசமாக திட்டினார். ரயில்வே போலீஸ் தண்டவாளத்தில் அமர்ந்த போராளிகள் மீது லத்தி சார்ஜ் செய்தனர். இதனால் நிலைமை பதட்டமானது. 2 மணி நேரம் ரயில் நிலையம் போர்களம் ஆனது.

அராஜகமாக நடந்த, ஆபாசமாக பேசிய, தடியடி நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மறியல் நடத்தது. மாநகர காவல் இணை ஆணையர் ஜார்ஜ் போராட்ட தலைவர்களுடன் பேசியதை தொடர்ந்து அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட தோழர் மோகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காவிரி உரிமைக்கு உயிர் துச்சமென போராடிவர்கள் மீது தடியடி நடத்தியதை, ஆபாசமாக பேசியதை போன்ற சேலம் மாநகரம் மற்றும் ரயில்வே காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.

அதோடு, தோழர் மோகன் உள்ளிட்ட தோழர்களை தாக்கிய ஆபாசமாக திட்டிய காவல் அதிகாரிகள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி கேட்டு கொள்கிறது.

மேலும் ரயில் மறியலின் போது aiyf மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 13 பேர் ரயில்வே போலீஸ் போட்ட வழக்கையும் வாபஸ் பெற கேட்டு கொள்கிறது.                      
[23:45, 18/10/2016] விமலாவித்யா: Pl give a written police complaint with actual words and unlawful actions of police mentioning all names..we have to do legally.
Then only JUSTICE will get..
... Vimalavidya                      
[00:01, 19/10/2016] +91 94865 96641: நன்றி தோழரே                      
[00:15, 19/10/2016] விமலாவித்யா: Our hearty congrats to Salem comrades brave struggle and sacrifice... Vimalavidya                      
[00:15, 19/10/2016] விமலாவித்யா: Tremendous struggle... fantastic                                               ---\\\                        
மக்கள் நலக் கூட்டணி, சேலம் மாவட்டம்
2 வித்தியாலயா ரோடு, ராமகிருஷ்ணா பார்க், சேலம்-7.
------------------------------------------------20.10.16

பெறுநர்
உயர்திரு.மாநகரக்காவல்ஆணையர் 
சேலம் மாநகரம்.

அய்யா, வணக்கம்.

பொருள்: ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு; மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே’ என 18.10.16 அன்று சேலம் ஜங்ஷனில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மறியல் போது அத்துமீறி போராளிகளை தாக்கிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சம்மந்தமாக.

சேலம் ஜங்ஷனில் 18.10.16 அன்று மக்கள் நலக் கூட்டணி சார்பில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு; மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே’ என்ற கோரிக்கையை முன் வைத்து, ரயில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர்) பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆ.ஆனந்தராஜ் மாநகர மாவட்டம், நா.மகேந்திரவர்மன் மேற்கு மாவட்டம், விசிக மாவட்ட செயலாளர்கள் ஜி.ஜெயச்சந்திரன் மாநகர மாவட்டம், செ.அய்யாவு மேற்கு மாவட்டம்,
அ.வசந்த் வடக்கு மாவட்டம் உள்ளிட்ட சுமார் 1000 பேர்கள் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்ய திரண்டு சென்றனர்.

அப்பொழுது சேலம் சரக காவல் உதவி ஆணையர் திரு.விஜய் கார்த்திக் ராஜா, சேலம் மாநகர காவல் ஆவண காப்பக உதவி ஆணையர் திரு.கந்தசாமி, சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.பொன்ராஜ், பள்ளப்பட்டி உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் ஆகியோர் உள்ளிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் போராளிகளை தடுப்பு அமைத்து தடுத்தனர்.

அப்பொழுது உதவி ஆணையர்  திரு.விஜய்கார்த்திக்ராஜா தோழர் ஏ.மோகனை தாக்கியதால் அவரின் இடது கால் முறிவு ஏற்பட்டது. காவல்  ஆய்வாளர் திரு.பொன்ராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஞானசௌந்தரியை நாகூசும் வகையில் ஆபாசமாக திட்டினார். ரயில்வே போலீஸ் தண்டவாளத்தில் அமர்ந்த போராளிகள் மீது உதவி ஆணையர் திரு.கந்தசாமி, உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் கண்மூடித்தனமாக லத்தி சார்ஜ் செய்தனர். இதனால் நிலைமை மிகவும் பதட்டமானது. 2 மணி நேரம் ரயில் நிலையத்தில் மறியலும், மறியலை ஒட்டி காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலும் நடந்துக் கொண்டே இருந்தது; தொடர மறியலும் நடந்துக் கொண்டிருந்தது.

‘அராஜகமாக நடந்து கொண்ட, ஆபாசமாக பேசிய, தடியடி நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மறியல் போது கோரிக்கை வைக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் திரு. ஜோர்ஜி.ஜார்ஜ் (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் போராட்ட தலைவர்களுடன் ‘புகார் கொடுங்கள்; விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என கூறியதைத் தொடர்ந்து, அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டு இடது கால் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு தோழர் ஏ.மோகன் சிபிஐ மாவட்டச்செயலாளர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காவிரி உரிமையை நிலைநாட்டி, தமிழகத்தின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த வேண்டுமென தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது போராடிய மக்கள் நலக் கூட்டணி போராளிகள் மீது தடியடி நடத்தியது; பெண்களை ஆபாசமாக திட்டியது போன்ற அத்துமீறல்கள், அநாகரியக செயல்களில் ஈடுப்பட்ட சேலம் மாநகரம் மற்றும் சேலம் ரயில்வே காவல்துறையின் மனித நாகரிகமற்றச் செயலை  சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அதோடு, தோழர் ஏ.மோகன் உள்ளிட்ட தோழர்களை தாக்கிய, பெண்களை ஆபாசமாக திட்டிய காவல் அதிகாரிகள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், ரயில் மறியலின் போது aiyf மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது ரயில்வே போலீஸ் போட்டுள்ள வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் தங்களையும், தமிழ்நாடு அரசையும், சேலம் மாவட்ட வருவாய் நிர்வாகத்தையும் சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி சார்பில் கேட்டு கொள்கிறோம். நன்றி.

இப்படிக்கு,

ஏ.மோகன்,
சிபிஐ மாவட்டச்செயலாளர்,                    ஜி.ஜெயச்சந்திரன்,  
விசிக மாநகர மாவட்டச்செயலாளர்,                ஆ.ஆனந்தராஜ்,  
மதிமுக மாநகர மாவட்டசெயலாளர்,               பி.தங்கவேலு,
சிபிஐஎம் மாவட்டச்செயலாளர்.
                                             
கண்டித்தும், தாக்குதல் நடத்திய போலீஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் 21.10.16இல் விண்ணப்பம் கொடுத்தனர்.    
---\\\
சூதும் சூழ்ச்சியும்!

இன்று 10.10.16 காலை 9 மணிக்கு PTTV பார்க்க நேர்ந்தது. பாஜக சேகர், விசிக ஷாநவாஸ் நெறியாளர் கார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தனர்.

சு.சாமி தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர சொல்கிறாரே! இதுதான் கேள்வி.

இதற்கு சேகர் நேராக பேசவில்லை. அதற்கு 'வைகோ' அப்படி பேசினார். 'திருமா' இப்படி பேசினார் என சுத்த ஆரம்பித்து விட்டார்.

நான் நினைத்து பார்க்கிறேன். முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சில நாட்கள் ஆகிறது. உண்மை நிலை தெரியவில்லை. இது அரசின் சிக்கல். இந்நிலையில் உண்மை நிலை கோரப் படுகிறது. அந்தச் சமயத்தில் ஆளுநர் விரைகிறார். பாஜக சூதும் சூழ்ச்சியும் அப்பொழுது யாருக்கும் புரியவில்லை. அப்புறம் சில நாள் கழித்து ராகுல் திடீர் என வருகிறார்.

அப்பொழுது தான் புரிகிறது. 'என்னமோ நடக்கிறது' என்று தமிழகத்தின் கட்சிகளுக்கு. அந்த சமயத்தில் தான் சு.சாமி என்ற குட்டியை விட்டு பாஜக என்ற குரங்கு ஆழம் பார்த்தது.

அதன்பின் கொள்ளைப்புற வழியில் காய் நகர்த்தும் பாஜகவின் சதியும் சூழ்ச்சியும் தெரிய வந்தது.

அதன்பின் உசாராகின தமிழக கட்சிகள்.

பாஜக பின் வாங்கியது. குப்புற கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சேகர் ஜால்ஜாப்பு பேசுகிறார். பாவம்.
இது ஒன்னும் அருணாசலப் பிரதேசமல்ல. தமிழகம் என்பதை தெரிந்ததும் தற்போது சீறுகிறார் போலும்.

தமிழக கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியும் 'பல குரலில்' பேசுகின்றனவாம்.

அதற்கு தகுந்த பதிலைத் தந்தார் ஷாநவாஸ். என்றாலும் இன்னும் ஷாப்பாக தந்திருக்கலாம்.

பாஜக மிக பிரமாண்ட கட்சியாம். இப்படி சு. சாமி போல் பேசுவது சகஜமாம்.

பாஜகவே 'நேர்மை' உமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை அல்லவா? ஆனால், 'அது' தான் உமது 'ஜீவிதம்' என்பதை தமிழகம் 'லேட்டாக'வாவது புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!
                                             
[11:26, 10/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: பி ஜே பி யின் கருத்துக்கள் செயற்கையானது கபடம் நிறைந்தது என்பதை சேகரின் பேச்சு உணர்த்தியது
---\\\                      
முதல்வரும் அதிமுகவும்! 
அரசியல் காரணங்கள் இல்லையென ஒதுக்கிவிட முடியாது.

இந்நிலைக்குக் காரணம் முதல்வரும் அதிமுகவும்!

நிர்வாகம் செம்மையடைய வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை!

இச்சூழலைப் பயன்படுத்தி கொள்ளைபுறத்தில் குடியேறப் பார்க்கிறது பாஜக. இதை அனுமதிக்கக் கூடாது.

அதிமுக பலவீனம் ஆவதை திமுக பயன் படுத்தவே செய்யும்; அது புரிகிறது.

ஆனால் பாஜக சு.சாமி கவர்னர் ஆட்சி கோருவது- அதில் உள்ள சதியும், சூழ்ச்சியும் தெரிகிறது.                                              
----\\\\
 முத்தலாக்கும், விவாகரத்தும்!

மனிதன் வாழும் பூவுலகில் நீர் நிலம் நெருப்பு காற்று வானம் தவிர மற்ற யாவும் மனிதனால் படைக்கப்பெற்றதே.

'மதம் மக்களுக்கு அபின்; இதயமற்றவர்களின் இதயம்' என்பார் மாமேதை மார்க்ஸ்.

நான் மார்க்சியம் இம்மண்ணில் மனபரப்ப வேண்டும் என உழைத்து கொண்டு இருப்பவர்களில் ஒருவன்.

மனிதன் படைத்தவற்றில் நல்லவைகளும் உண்டு.
தீயவைகளும் உண்டு.
'மனித சமுகம்' தீயவைகளைப் புறம் தள்ளியே வந்துள்ளது.

அப்படிதான் மதம் சார்ந்த சடங்குகளும் சட்டங்களும்; அரசு சார்ந்த சட்டங்களும்.  மதம் சாதி இனம் மொழி பிரதேசம் என கடந்து வாழும் 'தேவை மிக்க உலகில்' வாழுகிறோம்.

இன்றைய விஞ்ஞான உலகில் 'மனிதனின் தேவை' விரிந்துக் கொண்டே வருகிறது.

இந்த 'தேவை'யை நிறைவு செய்து கொள்ள இதில் 'எது' குறுக்கே வந்து நின்றாலும், அதை எளிதில் கடந்து செல்லும் 'மனபக்குவம்' மனிதம் பெற வேண்டும் அல்லவா?

அதை இன்று மதங்களும், அரசுகளும் செய்கிறதா? இல்லை!

இதுதான் இன்றைய தொல்லை.

இந்த தொல்லையைக் கடந்திட மதம், அரசு சார்ந்த சட்டங்கள் தங்களை புனரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தும், பதிவும்.
நன்றி.
#
(இது மிக சுருக்கப்பதிவு; முத்தலாக், விவாகரத்து குறித்த முகநூல் நண்பர் ஜெகபதீன் கத்தார்..! க்கு... அவரின் அந்த பதிவும் கீழே தரப்பட்டுள்ளது)
#
8.10.2016 நேர்படப்பேசு விவாதத்திற்கு அளித்த விளக்கம்:
தலாக், தலாக், தலாக் என்று சும்மா மூன்று முறை கூறானால், விவாக ரத்து ஆகாது. இது வீண் பழி. மனமுறிவு ஏற்பட்டால், விவாகரத்திற்கு படிப்படியாகத் தான் செல்ல முடியும்.

1.குடும்பத்தில் உள்ளவர்கள் சமாதானம் செய்வார்கள். 
சரியாகவில்லை என்றால்.

2.ஜமாத்தில்(ஊர் பெரியவர்களிடம்) முறையிடலாம். சமாதானத்திற்கு அவர்களும், திருமண சாட்சிகளும் முயல்வார்கள். இதிலும் சரியாகவில்லை என்றால், ஜமாத்தார்கள் முன்னிலையில் முதல் தலாக் கூறலாம். 

விரும்பினால் ஒரே வீட்டில் பேச்சு வார்த்தை இல்லாமல் வாழலாம். மூன்று மாத இடைவெளியில் இருவரில் ஒருவர் தனது தவறை உணர்ந்து இணைய விரும்பினால் சேர்ந்து வாழலாம். இன்னும் கால அவகாசம் கொடுக்க விரும்பினால், கொடுக்கலாம். 

சரிவர வில்லை என்றால், ஜமாத்தார்கள் முன்னியைில் இரண்டாவது தலாக் சொல்லி விட்டால் பிரிந்துதான் வாழ வேண்டும். அடுத்த மூன்று மாதத்திற்குள் ஒன்று சேர விரும்பினால், சேரலாம். சேர்ந்து பிரிய நேர்ந்தாலும் மூன்றாவது தலாக் மட்டுமே நிலுவையில் இருக்கும்.

3.எதுவும் சரியில்லாத பட்சத்தில் ஜமாத்தார்கள் முன்னிலையில் மூன்றாவது தலாக் கூறி நிரந்தரமாக பிரியவேண்டியதுதான்.

ஒரே நேரத்தில் மும்முறை 'தலாக்' கூறினாலும், போனில் கூறினாலும் அது, முதல் தலாக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மீதி இரு தலாக் நிலுவையில்  இருப்பதால் விவாகரத்து ஆகாது.

பிடிக்காத கணவனை, மனைவியும் விவாகரத்து செய்யலாம். தலாக் கோரும் உரிமை இஸ்லாத்தில் ஆண் பெண் இருவருக்கும் சமமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். ஆண் விவாகரத்தை கோரினால் கொடுத்த மகரை திரும்ப பெற முடியாது. முன்பே மகர் கொடுத்த படியால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியது இல்லை. பெண் கோரினால் வாங்கிய மகரை ஆணிடம் திருப்ப கொடுக்க வேண்டும். (தலாக் கூறிக் கூறி பல ஆண்களை ஏமாற்றாமல் இருக்க)

இறுதியாக, மூன்று தலாக் கூறி பிரிந்து விட்டலும் கூட சேர்ந்து வாழ சந்தர்ப்பம் உள்ளது. அந்த பெண் வேறு ஒருவரை மணந்து,  அந்த கணவரிடம் (முன்பு போல) முத்தலாக் பெற்று பிரிய வேண்டும். அதன் பினபு தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியும். கூடுமானவரை அநாவசியமாக விவாகரத்து நடக்காமல் இருக்க இப்படி ஒரு நிபந்தனை.

கூடுமானவரை இஸ்லாத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை விபரமாக கூறிவிட்டேன் என்று, நினைக்கிறேன். அவசரத்தில் ஏதாவது விடுபட்டு இருக்கலாம். இதில் அரசு தலையீடு இல்லை என்பது கவனிக்க தக்கது.

தேவை இருந்தால், அனைவரையும் சமமாக, எல்லா விடயத்திலும் பராமரிக்க சக்தி இருந்தால் மட்டும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. யாரும் செயல்படுத்துவதாக தெரியவில்லை. 

தங்களுக்கு தெரிந்த இஸ்லாமியர்களில் எத்தனைப் பேர் தலாக் கூறி உள்ளார்கள், எத்தனைப் பேர் ஒரு மனைவிக்கு மேலாக திருமணம் முடித்துள்ளார்கள்? மனசாட்சியை தொட்டுப் பாருங்கள்.

சட்டத்தை மீறுபவர்கள் எல்லா மதத்திலும் இருப்பது போல இஸ்லாத்திலும் இருக்கலாம். மறுக்க வில்லை. அவர்களைத்தான் குறை சொல்ல வேண்டுமே தவிர, இஸ்லாத்தையோ, சட்டத்தையோ குறை சொல்வது என்ன நியாயம்?

ஆணுக்கோ பெண்ணுக்கோ அநீதியாக இதில் ஏதாவது  இருந்தால் கூறுங்கள்.

நன்றி!

முறையாக தலாக் சொல்லப்பட வில்லை என்றால், நீதிமன்றம் குறுக்கிடலாம்.(ஹாஜா கனி அவர்கள் சுட்டி காட்டியது போல)

இதில் ஏதாவது முடத்தனம் இருந்தாலும் , தாராளமாக கூறலாம்.
#                                                            
----\\\\
அதிர்ச்சியே..!
 #7 நொடிக்கு ஒரு பெண் குழந்தை திருமணம் என்பது நம்பும்படி இல்லாவிட்டாலும், அது அதிர்ச்சியே.

#குழந்தைத் திருமணம் நூறு சதவீதம் சொந்தத்தில், 'சொந்தம் விட்டு'ப் போகக் கூடாதென நடப்பதே.

#மரபின் தொடர்ச்சித்தான். மாற்றத்தின் உந்துதல் என்றால் குழந்தைத் திருமணம் நடக்காதே.

#பெண் குழந்தை பாதுகாப்பு தினம் விவாதம் பாராட்டுக்குரியது.

#இன்றும் 11. 10. 16 PTTV நேர்படபேசு பேசுவில் வீரா, சிலம்பரசன், சிவப்பிரகாஷ் பெயரில் எமது கருத்து பதிவேற்றம் ஆகியுள்ளது.                                              
----\\\\
தலித் மக்கள் மயாணம் ஆக்கிரமிப்பு! 
கொலை மிரட்டல்! வருவாய்துறை, காவல்துறை உடந்தை!
சிபிஐஎம் மற்றும் தநாதீஒமு, மாதர் சங்கம் 
கடும் கண்டனம்!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் கருங்கல்லூர் பெத்தான்வளவு என்கிற குக்கிராமம் உள்ளது. இதில் 50 ஆண்டுகளாக 25 க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இம் மக்கள் பயன்பாட்டில் இருந்த குழந்தைகள் மயானம் மற்றும் அனைத்து மக்கள் பயன்பாட்டில் இருந்த செம்மலை ஏரி வாய்க்கால் உள்ளிட்டு இருந்த அரசு நிலத்தை,  ஆதிக்க சாதியை சார்ந்த குழந்தையப்பன் கும்பத்தினர் சமூக விரோதிகளை வைத்து அடாவடித்தனம் செய்து,  தீண்டாமை கம்பி வேலி அமைத்து ஆக்கிரத்து உள்ளனர்.

குடிநீர் வசதி செய்திட போர்வெல் போட வந்த போவெல் போடும் வாகணத்தைக் கூட திருப்பி அனுப்பி விட்டனர். குடிநீர் தொட்டியையும் தகர்த்து விட்டனர்.

அரை நூற்றாண்டு காலமாக தங்களின் அனுபவத்தில் இருந்த (அருந்ததியர் மக்களின் குழந்தைகள் மயானம் உள்ளிட்டு) சுமார் 8 சென்ட் அரசு நிலத்தைக் கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்தப் போது, அதை எதிர்த்து நியாயத்தையும், உரிமையையும் கேட்ட அருந்ததியர் மக்கள் மீது அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் தாக்குதல் செய்துள்ளனர்.

இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் அக்கிராம மக்கள் புகார் கொடுத்தனர். எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இதனால் தற்போதும் இக் கிராம அருந்ததிய மக்கள் அனுதினமும் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் 27. 9. 2016 அன்று மேட்டூர் வட்டாட்சியரிமும் மனு கொடுத்து முறையிட்டனர்.

ஆனால் அரசின் வட்ட வருவாய்துறை, கொத்தூர் காவல்துறை உள்ளிட்டு மேட்டூர் வட்ட அரசு நிர்வாகம் தீண்டாமைக்குக் கொடுமைக்கு உடந்தையாகவும், அநீதிக்கு ஆதரவாகவும் இதுநாள் வரை இருந்து வருகின்றனர் என்றே தெரிகிறது.

காவல்துறை மற்றும் வருவாய் துறைகளின் இத்தகைய தலித் அருந்ததிய மக்கள் விரோதச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தகவல் அறிந்து, 11.10. 16 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர். குழந்தைவேல், மாவட்டத் தலைவர் ஏ.கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி. தங்கவேலு, மேட்டூர்-கொத்தூர் ஒன்றியச் செயலாளர் லட்சுமிசிதம்பரம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ராஜாத்தி, மேட்டூர்-கொத்தூர் ஒன்றியச் செயலாளர் தேவி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு, அருந்ததிய-தலித் மக்கள் ஆண்டாண்டு கால உரிமையை நிலை நிறுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும்; தலித் குழந்தைகள் மயாணம் உள்ளிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் செய்து வரும் குழந்தையப்பன் குடும்பத்தார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                            
---\\\
 குடிபோதையில்...
#குடிநீர் லாரிகள் பெரும்பாலும் குப்பை அள்ளும் வண்டி போல் தான் இருக்கின்றது.

#'தண்ணி' லாரிகள் யாவும் 'கன்டிசனின்றி'தான் இருக்கின்றன.

#அரசியல் தலையீடின்றி எதுவும் நகருவதில்லை நம் நாட்டில்.

#குடிபோதையில் ஓட்டுவதும் விபத்துக்கு காரணம்.

#போக்குவரத்து விதிகள் 'தள்ளாடு'வதே 'தண்ணி'லாரிகள் கவிழ்வதும் மூழ்குவதுமாய் இருக்கின்றன.

#சாலைகள் மரண சாலைகளாகவே காணப்படுகிறது. சாலை பராமரிப்பு இல்லாததும் விபத்துக்கு காரணம்.                      

---\\\
இல்லா காலத்தில்...
தமிழக சமூக சூழலில் திரைப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்துள்ளன. வருகின்றன.

சமூகத்தில் பிரதிபலிப்பல்ல திரைப்படம். திரைப்படத்தின் பிரதிபலிப்பே சமூகம். இதுதான் தமிழகம்.

திரைப்படங்களே சமூக சீரழிவுக்கு முக்கியக் காரணம்.

நிஜ வாழ்க்கையில் எங்கே பாட்டு பாடுகிறார்கள்? எங்கே திரைப்படத்தில் வருவதுபோல் சண்டை நடக்கிறது?  இப்படி நிறைய சொல்லலாம்.

தமிழ் உள்ளிட்டு இந்திய திரைப்படங்கள் பெரும்பாலும் தடைச் செய்யப்பட வேண்டியவைகளே.

திரைப்படம் இல்லா காலத்தில் இத்தகைய சீர்கேடுகள் இருந்ததில்லை.

திரைப்படம் மட்டுமல்ல, அதன் மறுப்பதிப்பாக இருக்கும் தொலைக்காட்சிகளும் அதன் நிகழ்ச்சிகளும், தொடர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

நடிகர்கள் நிஜ வாழ்விலும் நடிக்க ஆரம்பித்து அனேக வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது சிவகார்த்திகேயன்.

அத்திப் பூர்த்தாற்போல் ஒரிரு திரைப்படங்களும் நடிகர்களும் சமூக நலனுக்கு உதவிடும் வண்ணம் இருப்பதைப் பார்க்கவும் முடிகிறது.                       ---\\\
வீரம் விளைவிக்கும்...
வீரம் விளைவிக்கும்... சிலிர்த்தெழ செய்திடும்...
பாடல்! அருமை! பாருங்கள்! கேளுங்கள்!                                                                      
---\\\
 தமிழிசை அம்மாவுக்கு 48 மணி நேர ரயில் மறியல் எதற்கு எனவும், ரயில் பயணிகள் பாதிப்பு வராதா? என வினவி உள்ளார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கய்யா!                                              
----\\\\
சுகாதார இன்மை!
மர்மக் காய்ச்சலுக்கு சுகாதார இன்மை!

உயிர் இழப்புக்கு சுகாதார துறை!

சுகாதார இன்மைக்கும், உயிர் இழப்புக்கும் பொறுப்பு தமிழக அரசும், மத்திய அரசும் அவற்றின் கொள்கைகளும்!

எல்லாவிதமான நோய்களுக்கும் அரசுகள் பொது சுகாதார த்தை பேணாமல் அதை தனியாருக்கு தாரை வார்த்ததே!

அரசு மருத்துவமனைகள் செயலிழக்கப்பட்டு, ராஷச தனியார் மருத்துவமனைகள் வானளாவ முளைத்ததே!

மிகப்பெரிய அரசு பொறுப்புகளை அலங்கரிப்போர் அரசு மருத்துவமனைகளை மதிக்காமல் நம்பாமல் தனியார் மருத்துவமனையில் தஞ்சம் அடைவதே!                      
----\\\
இலங்கை தமிழர் தடவழி...
இலங்கை தமிழர் தடவழியை உறுதி படுத்துக! உரிய பாதுகாப்பு தந்திடுக!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலம் ஒன்றியம் சிக்கம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 1982இல் இலங்கை அகதிகள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் நிலம் வாங்கி கிரயம் செய்து சுமார் 50 குடியிருப்பு கள் கட்டி வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஒரு வருடமாக இவர்களின் தடவழி பாதையை அடைக்கலயம்மாள் வகையறாக்கள் தடுத்து தொடர்ந்து தகராறு செய்து வருகின்றனர். ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திலும் தாரமங்கலம் காவல் நிலையத்திலும் பலமுறை முறையிட்டும் தீரவில்லை. அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ய சிபிஐஎம் சார்பில் தோழர்கள் சென்றனர். அவர்களை வழிமறித்து மேற்படி வகையறாக்கள் கவிதா, கண்ணன், செல்வி போன்றோர் அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகளில் திட்டி மிரட்டினர்.

அது குறித்து ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது.

ஓமலூர் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் உடனே தலையிட்டு சட்டப்படியான உரிமையை மீட்டுத் தந்திட வேண்டும் என சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.                      
----\\\\
இடைத் தேர்தலில்.... 
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலாக இருக்கும்.

எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.

தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணிக்க வாய்பில்லை.

மக்கள் இவ்விரு தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தர வேண்டும்.

அதிமுக திமுக வெற்றி பெறுவதால் தாக்கம் எதுவும் ஏற்படுத்தாது.

மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உள்ளாட்சி தேர்தலில் ஒரு வேளை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் திமுக வெற்றி பெற்றால்! அவ்வளவே.                    
கணேஷ் தீஒமு கோவை: 👌👌👌  
---\\\                    
எந்த முட்டாள் சொன்னது?
பாஜக ஆர்எஸ்எஸ் வேறு வேறு என்று எந்த முட்டாள் சொன்னது? இரண்டும் ஒன்றுதான்! நடப்பது ஆர்எஸ்எஸ் ஆட்சி தான் என்று அடித்துக் கூறி விட்டார் அருள்மிகு நாரவாய் நாராயணன் இன்று 18.10.16 காலை pttv புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... டும் டும் டும்!                      
----\\\\
பாஜக இரட்டை வேடம் 
மத்திய அரசின் வாதம் தமிழகத்திற்கு விரோதமானது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.

பாஜக அரசு தமிழ் மக்கள் விரோத அரசு என்பதை இன்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வாதத்தின் மூலம் நிருபித்து விட்டது.

கர்னாடக தேர்தலில் ஆதாயம் பெறவே காவிரியில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

இங்கே தண்ணீர் வேண்டும் என்பதும் அங்கே தண்ணீர் விடாதே என்பதும், உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும் அப்பட்டமான தமிழகத்திற்கு பாஜக செய்யும் துரோகம்.
                    
[21:28, 18/10/2016] விமலாவித்யா: CASE IS GOING ON IN SUPREME COURT.                       ----\\\\
பாஜக தான்! 
கண்டிப்பாக மதச்சார்பற்றவராக பிரதமர் இருந்திட வேண்டும்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா?.

பிரதமர் மட்டும் மதச் சார்பாளராக எப்படி இருக்க முடியும்?

தேவையில்லாமல் அரசியல் ஆக்குவது பாஜக தான்!

பெயரை உச்சரிப்பதில் மதம் சார்பு இருப்பதாக அர்த்தப்படுத்துவதும் பாஜகவே.                                              
---\\\
எப்பொழுது..? 
ஆம், நீண்ட கால அஜண்டாவான ராமர் கோயில் கட்டுவதை தற்போது தீவிரமாக்கி உள்ளது.

உ. பி. தேர்தலில் பாஜக ஜெயித்தாக வேண்டும் என வெறி கொண்டு அலைகிறது பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும்.

எப்பொழுது ராமர் கோயில் கட்டுவதை கைவிட்டு இருந்தது பாஜக?

ராமர் கோயில் பிரச்னை கீரி பாம்பு சண்டை கதை போல்தான்.

அவ்வளவு சீக்கிரத்தில் அதை தீர்த்துக் கொள்ள விரும்பாது சங் பரிவார்.

அது அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகும்.                                              
----\\\\
பொதுத்துறையின் மகிமை!

இன்று 20.10.16 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், "சேலம் இரும்பாலை யை பொதுறையிலேயே பராமரிக்க வேண்டும் தனியாருக்கு தாரை வார்த்ததே" என்ற தர்ணா போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றிவிட்டு திரும்பினோம்.

அப்பொழுது அலுவலகம் திரும்பும் போது முல்லுவாடி ரயில்வே கேட்டில்தான் இந்த அரிய காட்சியைக் கண்டோம்.

ரயில் வரும் போது பாதை தடுத்து போடப்படும் கேட் டின் ஒரு பகுதியில், 'தடுப்பு' மேலே உயர வெயிட் இருக்கும் கீழே இறங்குவதற்கு அல்லவா, அந்த வெயிட் டின்  இரும்பிலான வட்ட வடிவ வெயிட் களை துண்டு துண்டாக இருப்பதை, கட்டு கம்பிகளைக் கொண்டு கட்டும் காட்சிதான் இது.

பாவம் மோடி அரசும், அதன் ரயில்வே துறையும்! எவ்வளவு ஏழைகளாக இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? இரும்பு ஆலைகள் பொது துறையில் இருக்கும் போதே இவ்வளவு 'பஞ்சம்!?' என்றால், அது தனியாருக்கு போய்விட்டால், ரயில் வரும் போது பஸ் பயணிகள் இறங்கி சென்று அந்த தடுப்பை இனி தாங்களாகவே தூக்கி பிடிக்க வேண்டிய நிலை என்றால் அது மிகையாகுமா?!

பொதுத்துறையின் மகிமையை நமக்கு உணர்த்தும் பாடம் இதைவிட வேறு சாட்சியும் காட்சியும் வேண்டுமா?                                              
----\\\\
தேர்தல் சீர்திருத்தம்
ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?

அரசியலில் ஆன்மீகம் கலப்பதும், ஆன்மீகத்தில் அரசியல் கலப்பதும் தான் நம் நாட்டின் சிக்கலே.

அரசியலும், ஆன்மீகமும் அதனதன் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலவாமல் பயணிப்பதே நாட்டுக்கு என்றும் நல்லது.

தேர்தல் சீர்திருத்தம் தேவைதான்.

அது சாமானியனும் நின்றிட வகை செய்திட வேண்டும்.

தமிழகத்தில் பணம், பரிசு, சாதி க்கு முடிவு கட்டும் சீர்திருத்தம் தேவை.                      
----\\\\
உணவுக்கு...
பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ விளைநிலங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதற்கு இந்த உத்தரவு பயன்பட்டால் நன்று.

ரியல் எஸ்டேட் கொள்ளை கட்டாயம் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

விளைநிலங்கள் மனைநிலங்கள் ஆவது நாட்டுக்கு ஆபத்து. உணவுக்குக் கையேந்த வேண்டும்.

விளைநிலங்கள் மனைநிலங்கள் ஆவதே அரசுகளின் விவசாயிகள் விரோதக் கொள்கைகளே. இதுவும் மாறினால் தான் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். விவசாயிகளும் பட்டினி சாவில் இருந்து பாதுக்கப்படுவர்.

இந்த சட்டம் அன்னிய நில திமிங்கலங்களுக்கு பயன்படா வண்ணம் அமைந்திடல் அவசியம்.

மக்களுக்கான வீட்டுமனை பயன் பாட்டுக்கு அரசு உரிய முறையில் விவசாயம் பாதிக்கா வண்ணம் வழிவகைகளை உருவாக்க வேண்டும்.                      
---\\\
ப்புல்பேன்ட் பாய்ஸ்?
*பசுமாடும், பாபரும், சேதும் எந்த நம்பிக்கையில் வருகிறது
ப்புல்பேன்ட் பாய்ஸ்?*
#
"தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்
தீண்டத்தகாதவர் என்பது என்னுடைய நம்பிக்கை என்று ஒருவர் கூறுவாரேயானால், அதனை தனிப்பட்ட சுதந்திரம் என விட்டுவிட முடியுமா? அதுபோலத்தான் 'தலாக்' விவகாரத்தையும் அணுக வேண்டும்"

என்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். (தினமணி 21.10.16)

இதை கேட்கிறபோது பருத்தியே புடைவையாக காய்த்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படும்! மகிழ்ச்சி தவழும்!

நமக்கு ஒரு டவுட் வந்து தொலைக்கிறதே ப்புல்பேன்ட் பாய்ஸ்!

பசுமாடு தெய்வம் என போற்றப்படுதும், அதன் மாமிசத்தை சாப்பிட்ட தலித்களை அடித்து கொன்றதும் என்ன நம்பிக்கை?அது மதம் சார்ந்த நம்பிக்கை இல்லையா ப்புல்பேன்ட் பாய்ஸ்? அதெற்கெல்லாம் சட்டம் என்ன சொல்கிறது ப்புல்பேன்ட் பாய்ஸ்?

அப்புறம் ராமர் பாலமென சேது கால்வாய் திட்டத்தை கெடுத்ததும், ராமர் பிறந்த இடமென பாபர் மசூதியை இடித்ததும் எல்லாம் எந்த நம்பிக்கையில் பஃபுல்பேன்ட் பாய்ஸ்?

ஓ..!
பசுமாடும், பாபரும், சேதும் எழுந்து போய் சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிஷன் போடணுமா ப்புல்பேன்ட் பாய்ஸ்!?  
---\\\                    
வங்கிதான்...
மக்கள் பணத்திற்கு வங்கிதான் பொறுப்பு!

டெபிட் கார்டுகளை திரும்ப பெறுவதல்ல முக்கியம். பணம் பாதுகாப்பு தான் முக்கியம்!

மின்னணு வாக்குப்பதிவுக்கு பதிலாக மீண்டும் வாக்கு சீட்டு கோருவதும் போல் தானியங்கி ஏடிஎம் களுக்கு பதில் மீண்டும் வங்கிகளில் சென்று பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டியதுதான்.

ஏடிஎம் டெபிட் கார்டு பாதுகாப்பு இல்லை எனில் பழைய முறைக்கு போக வேணடும்.                      
----\\\
நிலம் ஒரு பிரச்சினையாக இருக்காது. மாநில அரசின் மெத்தனமும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனபோக்குமே இருக்கும்.

தனியார் கம்பெனிகளுக்கு நிலத்தை வாரி வாரி வழங்கும் மாநில அரசு இம்மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தித் தராத மர்மம் புரியவில்லை.

AIIMS போன்ற தரமிக்க அரசு மருத்துவமனை அமைவதில் சென்னையில் உள்ள பகாசூர தனியார் மருத்துவமனைகளின் 'செல்வாக்கு' தமிழக அரசு மீது இருக்குமென்றே தோன்றுகிறது.                                                                      
----\\\
இரண்டுமே 
அரசியல் இன்றியோ அரசியல் நோக்கம் இன்றியோ எந்த அரசியல் கட்சியும் செயல்படாது.

கட்சிகளின் செயல்பாடுகள் நோக்கமுடையதே! அதில் கட்சி நலனும் இருக்கும். மக்கள் நலனும் இருக்கும்.

அதற்கு திமுக மட்டும் விதிவிலக்கா என்ன!?

ஒவ்வொரு கட்சியும், கூட்டணியும் அதனதன் முடிவுக்கும் ஏற்பவே செயல்படும்.

இவ்வளவு நாளும் பொறுமையாக இருந்த திமுக தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது ஏன்?

ஜனநாயகத்தில் முரண்பாடு சகஜம்தானே! முரண்பாடு ஜனநாயகத்தில் ஏற்புடையது தானே!

ஒரு பிரச்சனையில் ஒரு கட்சியின் நிலைப்பாட்டை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என்பது  ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

ஒத்து போவதில் ஒத்து போகலாம், மாறுபாடு உள்ளதில் மாறுபடுவது தவறில்லையே!

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே குற்றவாளிகள்.

காங்கிரஸ், பாஜகவை வைத்து- மறைமுகமாகவோ நேரடியாகவோ பல சமயங்களில் அதிமுக திமுக காவிரி சிக்கலில் அனுசரித்து சென்றவைகளே!                      
[22:25, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: ஆகவே திமுக நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது எதிர்கால மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை வலுப்படுத்தாது..காவிரிப் பிரச்சனையை சிக்கலாக்கிய நால்வரில் ஒருவர் கூட்டும் கூட்டமிது..
                    
[22:33, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: அப்படியானால் அரசு கூட்டியிருந்தாலும் கலந்து கொள்ள முடியாதே. ?? அதுவும் நால்வரில் ஒருவர் தலைமையில்தானே அமைந்திருக்கிறது..!!
                    
[22:35, 24/10/2016] தாரைப்பிதா: மொத்தத்தில் இடியாப்பம் சிக்கலில் காவிரி சிக்கல் தமிழகத்தில்!    
                 
[22:37, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: உண்மைதான். அரசு அதைச் செய்யாத நிலையில் பிரதான எதிர்க்கட்சிதான் இத்தகைய வேலைகளைச் செய்ய வேண்டும். என்ன செய்வது.. திமுகதான் அந்த இடத்தில் இருக்கிறது..                      
[22:38, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: சரிதான்.ஆனால் அதிமுக நடத்தும் என்றில்லாமல் அரசாங்கம் நடத்துவதாக அமையும் தோழர். நால்வரில் ஒருவராக அதிமுக இருந்தாலும் அரசு நிர்வாக பொறுப்பில் இருப்பது அவர்களின் செயலுக்கு நியாயம் கற்பித்துவிடும்  
                   
[22:39, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்து கொண்டவர்தானே..?  
                   
[22:41, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: இருக்கலாம் கூட்டத்திற்கான அழைப்பு திமுக விடமிருந்து நடக்கும் இடம் அறிவாலயம் தோழர்
                     
[22:44, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: வேறெங்கு நடத்துவது..?
                    
[22:45, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: எதிர் கட்சி தலைவர் அலுவலத்தில் நடத்தட்டும்  
                  
[22:47, 24/10/2016] தாரைப்பிதா: திமுக தற்போது நடத்துவதில் நோக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பதே மைய கேள்வி. மற்றப்படியான விவாதம் தனி.  
                   
[22:48, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: அப்படி நடத்தினால் பங்கேற்கலாமா.. அங்கு போதுமான இடம் இருக்கிறதா..?
                    
[22:48, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: நோக்கம் இருக்கிறது..    
                
[22:52, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: கண்டிப்பாக பொது நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் இடைத் தேர்தல் வேட்பார்களை அறிவித்த கையோடு அழைப்பு விடுக்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் நடத்த நிர்ப்பந்தம் உருவாக்க வேண்டும் தோழர்
                     
[22:52, 24/10/2016] தாரைப்பிதா: தோழரே, அரசும் ஒரு கட்சியின் கருவிதான். என்றாலும் அதை கட்சி நடத்துவதாக பார்க்க முடியாது. ஆனால் எதிர் கட்சி நடத்துவது அரசின் அங்கமாக கொள்ள முடியாதல்லவா?  
                   
[22:54, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: PT சொல்வது சரி  
                   
[22:56, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: தனிமைப்படுவது அதிகரிக்கும்..                      
[23:00, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: அதனால் அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை அனைத்து தரப்பினரின் குரலாக எதிரொலிக்க செய்ய வேண்டும்.காரம் இடியாப்ப சிக்கலை தீர்க்கும் வலிமை நமக்கில்லை.அதே சமயம் திமுக வின் தந்திர வலையில் நாம் சிக்கி கொள்ள வேண்டியதில்லை  
                   
[23:02, 24/10/2016] தாரைப்பிதா: அரசு நடத்தி புறக்கணித்தால் மட்டுமே தனிமை படுவதுபோல் தோன்றும். இதில் அப்படி வருவதற்கான வாய்பே இல்லை. இது முழுக்க முழுக்க அதிமுக திமுக பாலிடிக்ஸ் என்பதை மக்கள் அறிவர்.  
                  
[23:04, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: ஏற்கெனவே அப்படித்தான் இருக்கிறோம்.திமுக வோடு இணைந்து செயல்படுவதின் வாயிலாக தனிமை போய்விடாது தோழர்  
                   
[23:04, 24/10/2016] தாரைப்பிதா: பயனுள்ள விவாதம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.                      
[23:05, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: நன்றி தோழர் PT  
                   
[23:23, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: எதிர் கட்சித் தலைவரும் அரசாங்கம்  அனைத்து கட்சி கூட்டம் நடத்த நிர்ப்பந்தம் செய்யட்டும்.                                              
---\\\
அழுத்தம் தவறாது
திமுக கூட்டிய கூட்டம் மத்திய அரசுக்கும் அழுத்தம் தவறாது, மூன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும் கை கொடுக்காது.

திமுகவிற்கு பொதுத்தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் கண் மக்கள் நலக் கூட்டணி மீதுதான்.

ஆளும்கட்சி எதிர்கட்சி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கும்? இது எந்த உலகில் நடக்கும்.

ஆளும் கட்சி இல்லாத கூட்டம் எப்படி அனைத்து கட்சி கூட்டமாகும்.

அதிமுக போன்ற ஆளும்கட்சி அமெரிக்காவில் கூட கிடையாது. அவ்வளவுக்கு இறுமாப்பில் இருக்கிறது அதிமுக தமிழகத்தில்.

இடைத்தேர்தலில் ஆதாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தான் திமுக இந்த கூட்டத்தைக் கூட்டியதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

காவிரிக்கு கண்ணீர் வடிப்பது போல் ஒரு தோற்றமே இது. தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் போன்றது இந்த கூட்டம்.

சுப்ரீம் கோர்ட்டில் பாஜக பல்டி அடித்த தருணத்தில் கூட்டி, தமிழகத்தை தட்டி எழுப்பி இருந்திருக்க வேண்டும்.

இது காலம் கடந்த நடவடிக்கை. இதனால் காவிரில் நீர் வரப்போவதில்லை.

----\\\
உண்மை இருக்கவே... 
ஸ்டாலின் பேச்சில் மேலோட்டமான உண்மை இருக்கவே செய்கிறது.

ஆம், 3 சட்டமன்ற இடைத்தேர்தல் சில கட்சிகளை இன்றைய கூட்டத்தில் பங்கேற்க செய்யாமல் செய்திருக்கிறது.

அதிமுகவும் 18ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அதிசயம் நிகழும் என எதிர்ப்பார்த்து ஏமாந்த அதிர்ச்சியில் இருக்கிறது.

இதில் இருந்து மீள்வதற்குள், மத்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்து, திசையைத் திருப்பிவிட்டு விட்டது.

பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழ் மக்களை ஏமாற்றியதை, இழைத்த துரோகத்தை இடைத்தேர்தல் அறிவிப்பால், தற்காலிகமாக மக்கள் கண்களில் மண் துவியுள்ளது.

இடைத்தேர்தலுக்குப்பின் நிச்சயம் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் முழ்கவேச் செய்யும்.

ஆளும் அதிமுக முன்கை எடுக்காமல் இனிமேலும் சட்டத்தை நம்பி இருந்தால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்.

அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதை அதிமுகவும் தமிழக அரசும் இனியும் செய்யத் தவறினால், வெற்றிடத்தைக் காற்று (திமுக) நிரப்பவே செய்யும்.

அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு 1% மட்டுமே வித்தியாசம் என்பதை அதிமுக உணர வேண்டும்.

இன்று பங்கேற்காத கட்சிகள் காவிரி பிரச்சனையில் நாளையும் பங்கேற்காமல் இப்படியே இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.

ஏனெனில் இது தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை.                      
[21:57, 25/10/2016] விமலாவித்யா: Very practical assessment and approach... correct... Vimalavidya                      
[22:00, 25/10/2016] +91 94865 96641: நன்றி! தோழரே?                      
[22:01, 25/10/2016] விமலாவித்யா: PEOPLES welfare front has to strengthen it's presence and strength...                      
---\\\
பல்நோக்கிலும்
பல்கலை கழகம் என்றாலே பல்நோக்கிலும் கட்டணம் வசூலித்து கொள்ளலாமென அர்த்தம் தான்.

இதில் பொய் சொல்வதற்கு அவசியமென்ன இருக்கிறது?

அரசும் சரி, தனியாரும் சரி கட்டணக் கொள்ளையில் சளைத்தவர்கள் அல்ல.

தமிழக அரசு இதை எல்லாம் கண்டு கொள்ளவோ கட்டு படுத்தவோ ஏது நேரம்?

அமைச்சர்களுக்கு அலகு குத்த, மண்சோறு சாப்பிட, பன்னீர் கடும், பால்குடம் புஷ்ப காவடி எடுக்கவே நேரம் கிடையாது.

இந்த அன்னக்காவடிகளின் பிரச்னையை கவனிப்பதா அரசின் பணி?

என்று தீருமோ இந்த அடிமை மோகம்?!

மாணவர்களின் போராட்டம் இன்னும் வலுவாகி, அரசு செவிப்பறையை கிழித்தால் ஒழிய கட்டணக் கொள்ளையை தடுக்க முடியாது.                      
----\\\\
கண்டிக்கத்தக்கது
யாழ் பல்கலை மாணவர் சுட்டுக்கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பட்டக்காலே படும், கெட்டக் குடியே கெடும் என்பது இதுதானோ?

இலங்கை அரசின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அரசு இதை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். செய்யுமா?

அறிக்கை வெளியிட்டால் தமக்கு வம்பு வந்து சேருமென விட்டுவிடுமா?

இலங்கை தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு தனது ராஜிய உறவை பயன்படுத்தி உறுதிப்படுத்திட வேண்டும்.                      
----\\\
அநீதிகள்...
அரசுக்கு தெரிந்தேதான் அநீதிகள் நடக்கிறது. ஆம்னி பஸ் கட்டண கொள்ளையும் அப்படித்தான்!

ஆம்னி பஸ் முதலாளிகளின் அரசுதானே இது.

அரசு கட்டண விகிதம் வெளியிட்டது வெறும் கண்துடைப்பு.

அரசு பஸ் அதிகமாக விடாது. அப்படி விட ஆம்னி பஸ் ஓனர்ஸ் அனுமதிக்க மாட்டார்கள்.

அரசுகள் சமூக நலன் சார்ந்தவற்றில் இருந்து விலகி ரொம்ப தூரம் சென்றுவிட்டன.

அதிகாரிகள் அமைச்சர்களை விஞ்சி வெகுதூரம் சென்றுவிட்டனர் ஊழலில்!

அமைச்சர்கள்+அதிகாரிகள்=கூட்டுக்கொள்ளையே>தமிழகம். அதனால் ஆம்னி என்ன... அம்மிகூட லஞ்சமின்றி அசையாது தமிழகத்தில்!

பேருந்துகளை அதிகரிப்பதும், கட்டணங்களை முறைப்படுத்துவதும் தமிழக அரசு செய்தால், அது அதிசயம்!                                              
----\\\\
ஆட்சேபிக்கத் தக்கது
ஆதார் அட்டை பெறும் பேஜார் அட்டையாக மாறிவிட்டது.

அரசு வேண்டும் என்கிறது, கோர்ட்டு வேண்டாம் என்கிறது, நமக்குதான் தலை சுற்றுகிறது.

ஆதாரில் தனியார் நுழைந்து விளையாடி வருகிறார்கள்.

தற்போது தனியார் நிறுவனங்கள் தான் அங்கம் மச்சம் அடையாளங்களை, கண் காது, மூக்கு தொண்டை களை அதன் ரேகைகளை ஸ்கேன் செய்து அனுப்பி வருகிறது.

தனிநபர் ரகசியங்கள் திருடப் படுகின்றன பகிரங்கமாக என்பது தான் உண்மை!

அரசின் செயல்பாடு அச்சம் தருகிறது. ஆட்சேபிக்கத் தக்கது.

அதார் பற்றிய முன்பின் தகவல் வருகின்றன.

அரசும் மவுனம் காப்பதுபோல் பாவலா செய்து கொண்டு, ரேஷன் கடைகளில் ஆதாரை கட்டாயம் ஆகிவிட்டது.

ஆதாரு இல்லை என்றால் அரிசி இல்லை ரேசன் கடைகளில்!                                              
---\\\                            
கரியாக்குவதே...
மகிழ்ச்சியின் வெளிப்பாடுக்கு எவ்வளவோ இருக்கிறது. இது காசைக் கரியாக்குவதே.

பட்டாசு வெடிப்பது தேவையற்றது. வீண். இதன் தொழிலும், இதை வெடிப்பதும் ஆபத்து மிக்கது.

இதை தடைச்செய்வது எம்மைப் பொருத்தவரையில் நன்று. மகிழ்ச்சி.

இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்று ஏற்பாடுகளைக் கண்டறிந்திடல் அவசியம்.

இது தமிழர் பண்பாட்டு விழாவே அல்ல. தமிழர் மீது திணிக்கப்பட்ட விழாக்களில் இதுவும் ஒன்று.

Sunday 9 October 2016

காவித்தினமணியை நினைந்துவிட்டால்..!

இன்று 5.9.16 தினமணியில் மதி யின் கெடுமதியான கார்டூன் என்கிற பெயரில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்! அதில் சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் எச்சூரி "பிரச்சனை அரசியல் ரீதியாக பேசி தீர்வு காணுங்கள்" என்றதை 'பாகிஸ்தான் யாருடன் பேசுவது?' என பட்டியலிட்டுள்ளார் மதி!

கேலிச்சித்திரம் வரைவது சம்மந்தப்பட்ட வர்களும் உணரும்படி, ரசிக்கும்படி இருப்பதுதான் அதன் நியதி! ஆனால் இந்த 'மதி'க்கு அதெல்லாம் கிடையாது!
'நெஞ்சு பொறுக்குதிலையே- இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்..!' என அரிவாள் சுத்தியல் படத்திலிருந்து ரத்தம் சொட்டுவது போலவும், சிதர்வது போலவும் போட்டு அகமகிழ்ந்து உள்ளார் மதிக்கெட்ட மதி!

அதை தினமணியும் வெளியிட்டு தன் ஆர்எஸ்எஸ் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டியிருக்கிறது! இது கேலி சித்திரம் என்கிற பெயரால் வெளியிட்டு இருக்கும் வக்கிரச்சித்திரம்! இது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

இந்தியாவிற்கும், இந்திய பாதுகாப்புக்கும் 'தேசபிதா'வையே கொன்றது முதல் இந்நாள் வரை 'கொலைகார அரசியல்' நடத்தி வரும் இந்த காவிக்கும்பலுக்கு என்ன யோகியதை இருக்கிறது கம்யூனிஸ்ட்களை தரமற்ற வகையில் விமர்ச்சிக்க!? 

பேசாமல் தினமணி இன்று முதல் பாஜக பத்திரிக்கை என அறிவித்து விடுங்களே... தினமணி நிர்வாகமே! அது கட்சி பத்திரிக்கை அப்படித்தானிருக்கும் என மக்கள் கடந்து சென்றுவிடுவார்கள்! 

பாஜக அரசு செய்வதை எல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தால்தான் தேசபற்றா? கேள்வியே கேட்கக்கூடாதா? இந்தியா அரசா? நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது பாகிஸ்தான் போன்று ராணுவ ஆதிக்கம் கொண்ட சர்வாதிகார அரசா? அதற்கு பிரதமர் முதலில் விடை அளிப்பாரா? அல்லது மதியின் மதி பேசுமா?

"எவ்விதமான முறையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டது? அதனால் ஏற்பட்ட விளைவு என்ன?" போன்ற அறிக்கையை வெளியிட மறுப்பதையே மக்கள் சந்தேகிக்கிறார்கள்! இதிலே எங்கே தேசதுரோகமோ பாகிஸ்தான் ஆதரவோ இருக்கிறது?

பாகிஸ்தான் நாம் தாக்குதல் நடத்திய பகுதியில் சர்வதேச நிருபர்களை அழைத்துச் சென்று காண்பித்து, "அப்படி ஒரு தாக்குதலே நடத்தவில்லை என்கிறது'! புதுதில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் கூட தற்போது அது குறித்து கேள்வி எழுப்பி உள்ளதே! 

பாகிஸ்தான் அரசை சீனா மட்டுமா ஆதரிக்கிறது? அமெரிக்கா ஆதரிக்கவில்லையா? மோடி அரசின் மதவாத போக்கை அமெரிக்கக் கண்டித்து தன் கருத்தை சொன்னதே இல்லையா?

சுதந்திரப்போரில் மக்களை தட்டி எழுப்பிய தினமணி எங்கே? மதவாத அரசியலுக்கு வெஞ்சாமரம் வீசும் இன்றைய தினமணி எங்கே? ஆம்! நெஞ்சு பொறுகுதில்லையே இந்த காவி பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்ந இன்றைய காவிதினமணியை நினைந்துவிட்டால்..!?

"தேசபக்திக்கு யாரும் கம்யூனிஸ்ட்க ளுக்கு பாடம் எடுக்க தேவையில்லை" என நாட்டின் சுதந்திரத்திற்குக் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வாரிசுகளாகிய நாம் சொல்லி வைப்போம்! காலம் பதில் சொல்லும் காவிக்கும்பலின் போலி தேசபக்திக்கு!?                         
[11:12, 5/10/2016] +91 94899 25888: சாத்தான் வேதம் ஓதுகிறது                         
[11:12, 5/10/2016] +91 94899 25888: சாத்தான் தினமணி வேதம் ஓதுகிறது 
---\\\
கோயாபல்ஸ் சூரர்கள்...

சொன்னதைச் சொல்லவில்லை என்பதும், ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மெய் என நம்ப வைப்பதும் தான் "கோயாபல்ஸ்" பாணி வேலை என்பது! அதுதான் இந்துத்துவா பாசிசம்! இதற்கு இன்னொரு பெயர்தான் குஜராத் மாடல் என்பது! இதில் கைதேர்ந்தேர்ந்தவர்கள் பாஜக போர்வையில் இருக்கும் ஆர்எஸ்எஸ் விஹெச்பி சூரர்கள்! 
                        
நூற்றுக்கு நூறு உண்மை!
*ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால்தான் ஆணையராக இருக்கிறார்!
*எதிர்கட்சிகள் புகார் நூற்றுக்கு நூறு உண்மை!
*மாநில தேர்தல் ஆணையர் இந்த ஆட்சியில் இருந்தாக வேண்டும்! எதிர்கட்சிகளுக்கோ அல்லது ஆளும் கட்சிக்கு எதிராகவோ அல்லது நியாயமாகவோ நடந்தால் அவருக்கு அவரின் பதவி அற்ப ஆயுசு ஆகிவிடும்!
*மத்திய தேர்தல் ஆணையமே இதையும் நடத்தினால் ஒருவேளை கொஞ்சம் நேர்மையாக நடக்கக்கூடும்!
*பரிசும், பணமும் வாக்காளர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது!
*மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்!                         
---\\\
ஆளுமையல்ல... 
*ஆளுமையல்ல... மதவெறியும் அராஜகமும்! 
*கோவையில் நடந்தது இந்து முன்னணியின் கொலைவெறி ஆட்டம்! 
*கொலையைக் கண்டிப்பவர்கள் கொள்ளை அடிப்பதும், தீ வைத்து கொளுத்துவதும், சூறையாடுவதும் எதற்கு? ஏன்?
*ஓட்டு அரசியலை முன்நிறுத்தியே இந்துமத வெறியர்களின் இந்த கொலைவெறி கொள்ளைவெறி!
*இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
*இதிலே தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கைப் பார்த்ததும், துணையாக நின்றதும் கேவலமும் கொடுமையும்!
*இடதுசாரிகள் (சிபிஎம் சிபிஐ) உள்ளிட்டு ஜனநாயக கட்சிகள் (திமுக, காங்கிரஸ், விசிக) உடனே களம் இறங்கி மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தது ஆறுதல்.
*இன்று 26.9.16 சத்யம் டிவிக்கு!                                                  

அதிசயம்! ஆனால் உண்மை!

நேர்மையான முதல்வர் 
  
இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்....
ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு முறை பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று முறை திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என்றால் நம்பமுடிகிறதா?!!!!?

அவருக்குச் சொந்தமாக வீடோ, வாகனமோ, செல்போனோ கிடையாது என்றால் நம்புவீர்களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

தற்போது 64 வயதாகும் மாணிக்சர்க்கார் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார்.

அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம்.
அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ 46,000-தான்.

இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான்.

சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது. முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா?அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார். கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ 5000 தருகிறது.'இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது' என்கிறார் மாணிக் சர்க்கார்.

‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி...‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.

2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர்.

சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

நண்பர்களே... இந்த உத்தமர்,  நம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வில்லையே!!!

பொறாமை கொள்ளுங்கள் நண்பர்களே... இவரைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே என்று!!!

(இது வலையில் படித்ததில் ''பிடி''த்தது!) 
 ---\\\                                            
நூறு சதவீதம் நேர்மையாக...

'மாறும் கூட்டணி கணக்குகள்' என்றால் அதிமுக திமுக கூட்டணி அமைக்கின்றனவா? 

எந்த கூட்டணியும் நூறு சதவீதம் நேர்மையாக இருப்பதில்லை உள்ளாட்சி தேர்தலில்!

உள்ளூர் தாய்ப்பிள்ளை மாமன் மச்சான் சாதி அதுஇதுன்னுத்தான் போகுது! இது ஒரு கசப்பான உண்மை!

கட்சி சொந்தம் சாதி தாண்டி பணத்திற்கும் பரிசுக்கும் வாக்காளர்கள் அடிமையாகி வருவது சோகத்திலும் சோகம்!

ஒருநாள் கூத்தாக மக்கள் பார்ப்பது அகன்று அய்ந்தாண்டு எதிர்கால நல்வாழ்வு என பார்க்கப்படும் விழிப்புநிலை வரவேண்டும்!

ஓட்டுக்கு பரிசு பணம் தருவோரைப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்! 

மக்களும் பரிசு பணத்தை நிராகரித்து உள்ளூர் அளவில் நல்லவர்களையும் மக்கள் நலக் கூட்டணியையும் ஆதரிக்க வேண்டும்!

நல்லவர்கள் தேர்தலில் குதிக்க வேண்டும்! பயம் கொள்ளல் ஆகாது! கூடாது!   ---\\\                      
ஒருவேளை...
ஆளும், எதிர் கட்சிகளின் பலத்தை நிருபிக்க நியாயமான தேர்தல் நடத்தவேண்டும்! நடக்குமா? நடத்தப்படுமா? நடக்காது!?

ஒருவேளை விகிதாசார தேர்தல் முறை வந்தால் கட்சிகளின் பலத்தை நிருபிக்க வாய்ப்புள்ளது!

கடைக்கோடி மனிதர்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்க, மக்கள் நலக் கூட்டணியிடம் இத்தேர்தலில் அதிகாரம் போகவேண்டும்!

'கவுன்சிலர்கள்' என்கிற குறுநில மன்னர்களின் 'கொட்டம்' அடங்க வேண்டுமானால் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்!

இன்று 27.9.16 சத்தியம் (டிவி) சத்தியமே நிகழ்ச்சிக்கு!                         
---\\\
அறிவுகொழுந்தே ...
இன்று 29.9.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் உலகமகா அறிவுக்கொழுந்து 'காவிரி பிரச்சனையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் நீர் கிடைத்துவிடுமா? சம்மந்தப்பட்ட அரசின் கட்சிகளின் தலைவர்களை சில பல ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்காமல் செய்துவிட்டால் தீர்ந்து விடுமாம்!'

அறிவுகொழுந்தே ... அப்பொழுது மக்கள் கலகம் செய்ய மாட்டார்களா? நீரை திறக்கக்கூடாதென்று!? 

காஷ்மீர் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகள் கையாளும் விதம் சரியில்லையாம்! இந்த அறிவுக்கொழுந் தை அனுப்பி வைத்தால் ஒரு நொடியில் தீர்த்து விடுவாரோ?!  'கலைஞர்களை விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பதும், மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை ஏற்க இயலாது' என விசிக ரவிக்குமார் சொன்னதை இந்த அறிவுக்கொழுந்து காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை! 

எல்லாவற்றையும் எல்லாரையும் குறைச்சொல்லிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வக்காலத்து போடுவதும் ஒருவிதமான பாசிச பாணிதானே!?              ---\\\           
போர் மேகம் தான்!
*பாஜக என்றாலே அக்போர்! அக்கம் பக்கம் போர் மேகம் தான்! அன்று கார்கில்! இன்று உரி ஆக மாறலாம்!
*பாகிஸ்தான் சிறுபான்மை மக்கள் இல்லையெனில் பாஜக இல்லை!
*அண்டை நாடுகளுடன் நட்பு வளர்ப்பு என்பது பாஜகவுக்குப் பிடிக்காத ஒன்று!
*பாகிஸ்தான் இந்தியா நாடுகளின் மக்கள் போரை விரும்பவில்லை! இவ்விரு அரசுகளும் தான் தாங்களின் மக்கள் விரோத செயல்களில் இருந்து திசைத்திருப்பவே போரைத் திணிக்கின்றன!
*போரினால் எந்த சிக்கலும் தீர்ந்ததாக வரலாறு இல்லை! தேவை பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு!
*போரின் வெற்றி தோல்வியால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை!
*சுரண்டும் வர்க்கத்தின் புகழிடம்தான் போர்!
*போரற்ற வாழ்வே மனித சமூகம் உய்ய ஒரே வழி! அதுபோல் சுரண்டல் ஒழிந்தாலே போர் மேகம் கலைந்துப் போகும்!                         
---\\\
ஏகபோகம் உடைபடுவதுதான்...
பலத்தை நிரூபிக்க மக்கள் நலக்கூட்டணி களமிறங்கி உள்ளது!

வேறு வழியின்றி பாஜக பாமக தேமுதிக தமாகா  தனியே நிற்கிறது!

மக்கள் விருப்பம் என்று கூறுவதெல்லாம் 'சும்மா!'

அதிமுக திமுக ஏகபோகம் உடைபடுவதுதான் தமிழக மக்களுக்கும், தேர்தல் ஜனநாயகத்திற்கும் நல்லது!                                                  
---\\\
குறைவென்ன? அதிகமென்ன?
மது அருந்துவதில் குறைவென்ன? அதிகமென்ன?

குடும்பம்தான் சீரழிந்து போகும்!

மது அருந்தும் பழக்கம் ஏழை குடும்பத்தை கடனாளி ஆக்கி அழிக்கிறது!

இன்றும் 30.9.16 PTTV நேர்பட பேசு வில் உதய் பெயரில் எமது பதிவு பதிவேற்றம் ஆகி உள்ளது!                                                                          
----\\\
எங்கே இருக்கிறது!?
தேர்தல் ஆணையமா? எங்கே இருக்கிறது!?

எந்த தேர்தல் விதி எதையும் பின்பற்றவில்லை!

பேசாமல் அதிமுக வே எல்லாவற்றையும் அறிவித்துவிட்டு போகலாமே!

பரிசு, பணம் போன்ற லஞ்ச - லாவண்யமும் கொடிக்கட்டி பறக்கிறது!

ஒருபக்கம் வாக்காளர்களுக்கு லஞ்சம்! இன்னொரு பக்கம் பதவிகள் ஏலம்! அடுத்து தேர்தலில் வெற்றி பெரும் கவுன்சிலர்கள் குதிரைபேரம்! கடத்தல்!

தமிழக தேர்தல் கமிசன் பணி சந்தி சிரிக்கிறது!

இன்று 1.9.16 PTTV நேர்படபேசுக்கு!                         
---\\\
யுவர் ஹனர்! 
குறைவாக குடித்தால் குற்றமில்லை என்றீர் யுவர் ஹனர்! மகிழ்ச்சி!

இவரு மொத்தல்ல கொறைவாத்தான் குடிச்சிப்பாரு யுவர் ஹனர்! அப்படியே படிப்படியாக கொஞ்சம் ஓவரா போயிருச்சி போலிருக்கு யுவர் ஹனர்! குடி குடியைக் கெடுக்காது என்றீர் யுவர் ஹனர்! இப்ப இவருப் போன்றவர் குடியை யார் காப்பது யுவர் ஹனர்? 

நேத்துத்தான் யுவர் ஹனர் கொஞ்சமா குடிங்கன்னு உத்தரவு போட்டீர் ஹனர்! ஆனா 24 மணிநேரம் கூட ஆகல நீங்க உத்தரவு போட்டு யுவர் ஹனர்! உங்க உத்தரவ அமலாக்காம சேலம் அஞ்சு ரோட்டுல சாய்ந்தரம் இப்பிடி கெடக்கிற இந்த குடிமகன் மீது யாரு யுவர் ஹனர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போடுறது யுவர் ஹனர்? சேலம் மாநகர காவல்துறையா? இல்ல டாஸ்மாக் துறையா? 

இந்த மாதிரி பொறுப்பா கெடக்கும் குடிமகனையும் அவரது குடும்பத்தையும் யார் யுவர் ஹனர் காப்பாத்திறது? சொல்லுங்க யுவர் ஹனர்! குடியை காக்க நீதிமன்றமா? குடியைக் கெடுக்க நீதிமன்றமா? யுவர் ஹனர்!?                                  ---\\\                
நடிப்பு சுதேசிகளின் பசப்பு!
எமது தேசபிதாவே இன்று உமக்கு பிறந்த தினம்! உமது அருகே ஓரு கயிறுக்குக் கட்டிலிருக்கு! அது உம்மை அரவணைத்தக் கயிறாக இருந்துள்ளது! ஆனால் அது தற்போது எங்களுக்கு எமனின் பாசக்கயிறாக இருக்கிறது! உங்கள் கனவு நாயகர்களுக்குக் கிராம ராஜ்ஜியத்தில் அந்த கயிறுதான் தூக்குக்கயிறு! 

உமது உடையும் மேலே ஒரு துண்டு! 
கீழே ஒரு துண்டு! ஆனால் எங்கள் பிரதமருக்கோ ஒருமணி நேர உடைக்கு பத்து லட்சம்! அப்புறம் அது ஒரு கோடிக்கு ஏலம்! என்ன கேவலம் இது! 

உம்மை ஒரு குருவியைப்போல் சுட்டுக்கொன்ற கோட்சே வகையறாக்கள் கையில் இன்று உமதுதேசம்! அன்று உம்மை பதம் பார்த்த அந்த துப்பாக்கி குண்டுகள் இன்றும் முற்போக்காளர்கள் இடதுசாரிகள் போன்றவர்கள் மீது பாய்ந்துக் கொண்டுதான் இருக்கிறது!? 

பிதாவே அவர்களும் ராமராஜ்ஜியம் தான் அமைக்கிறார்களாம் அன்னிய இந்திய பெரும் முதலாளிகளுடன் சேர்ந்துக் கொண்டு! ஆம்! உமது கனவை நனவாக்குகிறார்களாம் நடிப்பு சுதேசிகள்! ஆம்! விதேசிகளாக மாறிவிட்ட போலி சுதேசிகளின் பசப்பு வார்த்தைகளுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம்! 
---\\\                        
மக்கள் நலக் கூட்டணி சார்பில் ...
சேலம் மாவட்டத்தில் 30.9.16, 01.10.16 தேதிகளில் உள்ளாட்சியில் போட்டியிடும் சிபிஐஎம் வேட்பாளர்கள்...

சேலம் மாநகராட்சி வார்டுகள்... 24 எம்.கனகராஜ் மேற்கு மாநகர செயலாளர், 26 தேவி வடக்கு மாநகரக்குழு உறுப்பினர், 6 பரமசிவம் கிளைச் செயலாளர் வடக்கு, 
எடப்பாடி நகராட்சி வார்டு 25 லதா, 
ஊராட்சி ஒன்றிய வார்டு 9 நங்கவள்ளி கே.ராஜாத்தி மாவட்டக்குழு உறுப்பினர், வார்டு 3 பெத்தநாயக்கன்பாளையம் பொட்டி, 
பேரூராட்சி வார்டுகள் அயோத்தியாப்பட்டிணம் 8 கந்தசாமி, கன்னங்குறிச்சி 2 தேவி, 
சிற்றூராட்சி தலைவர்... பி.என்.பாளையம்
கல்வராயன்மலை கீழ்நாடு விஜயசாந்தி, கொளத்தூர் சித்திரப்பட்டி புதூர் பிரியா ஜாஸ்மின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மற்றவர்கள் நாளை 3.10.16 தாக்கல் செய்திட உள்ளனர்! அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!                                                  
----\\\\
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் களத்தில் இருக்கும் 
சிபிஐ(எம்) வேட்பாளர்கள்..!

1. சேலம் மாநகராட்சி வார்டுகள்:
வ எ வார்டு வேட்பாளர் 
1 6 பரமசிவம் 
2 9 சம்பத்குமார் 
3 24 எம்.கனகராஜ் 
4 26 தேவி
5 37  பச்சமுத்து 
6 58 வடிவேல் 
7 60 ஆர்.வைரமணி 

2. நகராட்சிகள் வார்டுகள்:
வ எ வார்டு நகராட்சி வேட்பாளர் 
1 25 எடப்பாடி லதா 

3. பேரூராட்சி வார்டுகள்:
வ எ வார்டு பேரூராட்சி வேட்பாளர் 
1 11 கன்னங்குறிச்சி பி.தேவி 
2 6 வீரகனூர் கோவிந்தராஜ் 
3 7 தம்மம்பட்டி வெங்கடாசலம் 
4 8 அயோத்தியாபட்டிணம் கந்தசாம
5 6 சங்ககிரி என்.ஜெயலட்சும
6 2 பெத்தநாயக்கன்பாளையம் சரசு 
7 1 ஜலகண்டாபுரம் எம்.வெங்கடேஷ்
8 2 மேச்சேரி (ஆதரவு சுயேட்சை) டி.ரங்கநாதன் 

4. ஊராட்சி ஒன்றிய வார்டுகள்:
வ எ வார்டு ஒன்றியம் வேட்பாளர் 
1 13 வீரப்பாண்டி அய்த்தம்மாள் 
2 3 எடப்பாடி ஆராயி 
3 4 எடப்பாடி நடராஜன் 
4 5 சங்ககிரி மனோகரன்
5 14 சங்ககிரி விஜயா 
6 6 கெங்கவல்லி பார்வதி 
7 9 நங்கவள்ளி கே.ராஜாத்தி
8 3 பெத்தநாயக்கன்பாளையம் பொட்டி

5. சிற்றூராட்சி தலைவர்கள்:
வ எ ஒன்றியம்  ஊராட்சி வேட்பாளர்
1 ஆத்தூர் புத்தரகவுண்டம்பாளையம் எம்.துளசி 
2 பனமரத்துப்பட்டிச.ஆட்டையாம்பட்டி சாமியப்பன் 
3 கொங்கனாபுரம் குறுவம்பட்டி எம்.சேகரி 
4 அ.பட்டிணம் ஆச்சாங்குட்டப்பட்டி பெரியசாமி 
5 பிஎன்பாளையம் க.மலை கீழ்நாடு விஜயசாந்தி 
6 சங்ககிரி சன்னியாசிப்பட்டி எஸ்கே.சேகர் 
7 கொளத்தூர் சித்திரப்பட்டிபுதூர் பிரியாஜாஸ்மின் 
8 தாரமங்கலம் பணிக்கனூர் செல்வக்குமார் 

குறிப்பு: மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் சிற்றூராட்சி வார்டுகளிலும் களத்தில் உள்ளனர்.

ஆதரிப்பீர்! வெற்றிபெறச் செய்வீர்! மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பளிப்பீர்!

தோழன், பி.தங்கவேலு, சிபிஐஎம் மாவட்டக்குழுச்செயலாளர். சேலம். 4.10.16.    ---\\\                     
அன்று பாபர் மசூதியை...

*சட்டத்தை மதிக்கும் கட்சியாக இருந்திருந்தால் அன்று பாபர் மசூதியை இடித்திருக்குமா? 

*குஜராத் தில் சட்டத்தின் ஆட்சியை மிதித்துத்தானே மூன்றாயிரம் முஸ்லீம்களைக் கொன்று குவித்திருக்குமா?

*கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியும், நீதித்துறை மீதான அலட்சியமும் சேர்ந்து தமிழ்நாடு தானே என்ற ஏனோ தானோ மனநிலையும் தான் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு காரணம்!                            
---\\\
சூழ்ச்சியே...
*கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியே மத்திய அரசின் இந்த நிலை!
*நீதித்துறை மீதான அலட்சியமே இது! 
*காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் 'இரட்டை நாக்கு' வெளியே வந்துவிட்டது!
*தமிழர் சொத்துக்களை எரித்தபோது 2 மாநில மக்களும் அமைதியாக இருங்கள் என்றவர்தான் நம் பிரதமர்!?
*பாஜக என்றைக்கு சட்டத்தையும் நீதித்துறையையும் மதிக்காது;
மிதிக்கும்!
*சட்டத்தை மதிக்கும் கட்சியாக இருந்திருந்தால் அன்று பாபர் மசூதியை இடித்திருக்குமா?
*மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில் மூன்றாயிரம் முஸ்லீம்களைக் கொன்றிருக்குமா?
*பாஜகவும் காங்கிரஸும் காவிரியில் 'இரட்டைப் பிள்ளைகளே!'
இங்கே நீர் விடு; அங்கே விடாதே என்பர்!                                                  
---\\\
எது போக்கிரித்தனம்?

அட நாரவாய் நாராயணா...
பெங்களுரு, கோவை ஆகிய இடங்களில் (அங்கு காவிரிநீர் தராதே என்றும்; இங்கு கொலையைக் கண்டிப்பதாக கூறியும்) தீ பற்ற வைத்தது; சொத்துக்களைக் கொள்ளை அடித்தது) என்ன பெயர்? போக்கிரித்தனமில்லையா?

ஆவடி குமார் பாஜக காவிரியில் போக்கிரித்தனம் செய்தது என்றதற்கு பொத்துக்கிட்டு வந்திருச்சி நாரவாயருக்கு! உண்மையை சொன்னால் ஏன் உதறல் எடுக்கவேண்டும்?

நாரவாயர் என ஏன் குறிப்பிடுகிறோம் என்றால்... ஆவடிகுமார்-- 'கர்னாடகாவில் காவிரி பிரச்சனையில் பாஜக செய்தது செய்வது போக்கிரித்தனம்' என்றார்! அதற்கு பாஜக நாராயணன் சமீபத்தில் கோவையைப் பற்ற வைத்து, கொள்ள அடித்த பாஜக கொடியோடு கலவரத்தில் ஈடுபட்டோர் உள்ளிட்டவர்களை 'போலீஸ் கைது செய்தது போக்கிரித்தனம்' என்கிறார்! 

அவர் சொன்ன போக்கிரித்தனமும், இவர் சொன்ன போக்கிரித்தனமும் ஒன்றா? இதிலே நெறியாளர் கார்த்திகேயன் ஆவடி குமார் சொன்னதைக் 'கண்டிக்கிறேன்' என்கிறார்! உமது நடுநிலை வாழ்க!?

இன்று 4.10.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்...                         
---\\\
வெடிகுண்டுக்கு சமம்!

*வேலையில்லா இளைஞன் வெடிகுண்டுக்கு சமம்! வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் எந்த இளைஞ னும் எந்த அடிப்படைவாதத்திற்கும் ஆட்படமாட்டான்!
*தமிழக இளைஞன் ISIS க்கு ஆட்பட்டிருக்க வாய்ப்பில்லை! இது திசைத்திருப்பலும் அபாண்டமும் ஆகும்! அதே சமயத்தில் பெரும்பான்மை தீவிரவாதம்தான் சிறுபான்மை தீவிரவாதத்திற்கு அடிப்படை!
*இந்துத்துவா தீவிரவாதம் ஒழிந்தால், ஒழிக்கப்பட்டால் ISIS போன்ற முஸ்லீம் தீவிரவாதத்திற்கு வேலையில்லாமல் போகக்கூடும் அல்லவா?
*ஆர்எஸ்எஸ் விஎச்பி இந்து முன்னணி போன்றவை வெறிப்பிரச்சாரமே இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டு செல்கிறது!
*தீவிரவாதம்... பெரும்பான்மையோ சிறுபான்மையோ எந்த ரூபத்தில் அது இருந்தாலும் அதனால் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது! ஜனநாயக ரீதியான போராட்டப் பாதையே தற்போதைக்கு உகந்தது!                                         ---\\\                                                           
நல்லதல்ல!
*நீதிமன்றங்கள் தான் ஜனநாயக நாட்டில் ஆட்சி பரிபாலனம் செய்ய வேண்டிய நிலை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!
*திமுக ஆட்சியில் சென்னை ரத்து; அதிமுக ஆட்சியில் தமிழகம் ரத்து!
*இதுதான் திமுக அதிமுகவின் ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு!
ஆனாலும் ஆளும் கட்சியின் அராஜகத்திற்கு சரியான சாட்டை அடி!
*சிறிய கட்சிகளுக்கு பெரிய வருத்தம்! பெரிய கட்சிகளுக்கு சிறிய வருத்தம்!
*தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அடிமையாக இருக்கும் வரை தேர்தல் என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்!
*மத்திய அரசு காவிரி ஆணையம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் சதிக்கு தற்காலிக திசைத்திருப்பல்!
*எதிர்கட்சி (திமுக)க்குக் கொண்டாட்டம்! ஆளும் கட்சி (அதிமுக)க்குத் திண்டாட்டம்!
*அதிமுகவுக்கு மூக்கறுப்பு!

#என்ன நடக்கிறது முகநூலில்? 
ஒன்றுமே தெரியவில்லை! 
PTTV fbஇல்தான் நான் பதிவிடுகிறேன்! ஆனால் தொடர்ந்து என் பதிவு திருடப்படுகிறது! 
இன்று கூட 4.9.16 நேர்படபேசு வாட்ஸ்-அப் இல் மோகன், சாபியா, சிவா ஆகிய மூவர் பெயரில் என் பதிவின் அச்சு அசல் மாறாமல் பதிவேற்றம் ஆகி உள்ளது!?                                                  
---\\
விலை நிர்ணயம்!
வங்கி அடாவடித்தனமாகட்டும், விவசாயிகளின் விழிப்புணர்வு இன்மையாகட்டும் இவ்விரண்டிற்கும் பொறுப்பு ஆட்சியாளர்களும், அவர்தம் கொள்கைகளும்தான்!

இக்கொள்கைகளில் மாற்றம் இல்லையேல் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியாது!

இந்திய அன்னிய பெரும் முதலாளிகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதும், விவசாயிகளுக்குக் கிள்ளிக் கிள்ளி கொடுப்பதும் சுதந்திர இந்தியாவின்-- மத்திய-மாநில அரசுகளின் வாடிக்கை ஆகிவிட்டது! 

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றார்களே தவிர முதுகெலும்பையும் முறித்ததோடு, உயிரையும் பறித்து வருகிறார்கள்!

விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுகளுக்குமேல் 50 சதவீதம் கணக்கிட்டு அவரது உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்து தந்தால் மட்டுமே தற்போதைக்கு தற்கொலையை தடுக்க முடியும்!                         
---\\\
பாஜக தோற்றால்...
முன்னாள் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே, இந்நாள் பிரதமர் தலையிட்டு வாக்குறுதி கொடுப்பார்!

காவிரி மேலாண்மை வாரியம்... ஒருவேளை கர்னாடகா சட்டமன்ற தேர்தலுக்குப் பின், பாஜக தோற்றால் பிரதமர் அமைப்பார்! 

காங்கிரஸ் தோற்றால் முன்னாள் காங்கிரஸ் பிரதமர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார்!

தமிழக மக்களின் கட்சி, சாதி, மதம், இனம், வேறுபாடு அற்ற ஒன்றுபட்ட உருக்குப் போன்ற போராட்டமே நமக்கான உரிமையை பெற்று தரும்!

பாஜக, காங்கிரஸ் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்துக் கொண்டால் சரி! 

தமிழக மக்கள் எதைத்தான் கவனிப்பார்கள்? முதல்வரின் உடல்நிலையையா? காவிரியையா?  உள்ளாட்சி தேர்தலையா? 

எல்லாம் ஒரே சமயத்தில் வந்தால் என்ன செய்வார்கள்!?                                                ---\\\  
மர்ம மாளிகை போல்!
அப்பல்லோ மருத்துவமனைக்கு "போதுமான" அமவுண்ட் வருவரை அங்கேயே இருப்பார் போலும்!

அன்று தலைமை செயலகம் மருத்துவமனை ஆனது; இன்று மருத்துவமனை தலைமை செயலகம் ஆனது! (இந்த வரி என் தோழன் இலமு வின் பதிவு)

அப்பல்லோ மருத்துவமனை மர்மகுகை போலாயிற்று!

முதல்வர் சேர்க்கப்பட்ட நாள்முதலாக உடல்நலம் தேறி வருகிறார் என்றே கூறிவருகிறது மர்ம மாளிகை போல்! 

உயர்நீதி மன்றமே இன்றுக்குள் விபரம் கேட்டதில் இருந்து 'என்னமோ' நடக்கிறதென்று தெரிகிறது!

காய்ச்சல்... கவர்னரே பார்க்க முடியவில்லை என்றால்... மற்றவர்கள் அப்பல்லோ கிட்டவே போக முடியாது!

முதல்வரின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு பிரஜைக்கும் உரிமை இருக்கிறது!

முதல்வரின் இல்லமும் உள்ளமும் தமிழகமா? அப்பல்லோ மருத்துவக்கூடமா?  --\\
நடப்பது மக்களாட்சி..!                      
ராணுவம் ஆட்சி அல்ல இங்கு நடப்பது! நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி! அதன் பிரதமர் மோடி! அரசின் முடிவுதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

அது ராணுவமாக தன்னிச்சையாக எடுத்தல்ல! ஆகவே அதுபற்றிய விமர்சனம் ராணுவம் மீதல்ல! விமர்சனம்! மோடி அரசுமீதுதான்!

ஆகவே மோடி அரசின் முடிவு மீதான விமர்சனத்தை ராணுவத்தின் மீது போட்டு தப்பிக்கும் மோசடியே இது! 

இது முழுக்க உபி தேர்தலை மனதில் கொண்டு எடுத்த நடவடிக்கையாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்! 

அதற்கு பதில் சொல்லுவதற்கு பதிலாக ராணுவத்தை சந்தேகம் பிரச்சனையாக மாற்றுவதிலும் 'அரசியல் ஆதாயம்'தான் அடங்கி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை! 

பாதுகாப்பைச் சந்தேகப்படும் பிரச்சனையே இதில் இல்லையே!
#
இந்த விவாதத்தில் பாஜக நாரவாய் நாராயணன், 'காங்கிரஸ்சும் கம்யூனிஸ்ட்டும் ராணுவத்தை கொச்சை படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் தக்கப் பதிலடி கொடுப்போம்' என மிரட்டல் விடுத்தார்! 

கொச்சை படுத்தியது யார்? "அனுமான் போல் பலம் தெரியாமல் இருந்த ராணுவத்தை அதன் பலம் தெரிய வைத்தவர் பிரதமர்" என சொன்னது பாஜகவா? காங்கிரசா? கம்யூனிஸ்ட்டா? 

ராணுவத்தை அனுமானுடன் இணைத்து காவிமயமாக்கும் முயற்சியை அம்பலப்படுத்தி கண்டித்தாரே கர்னல் சுந்தர் இதே விவாதத்தில் நாரவாயர் அனுமான் போல் உட்கார்ந்து இருந்தாரே ஏன்?

நாரவாயரே இந்த சலசலப்புக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் பயப்பட மாட்டார்கள்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடித்த கதையாக "ராணுவத்தையும் காவிமயமாக்கும் சதி" அம்பலமானதால், அலறுவது தெரிகிறது!

மீண்டும் சொல்வோம் தேசபக்தி குறித்து பாடம் எடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்! காலம் பதில் சொல்லத்தான் போகிறது!                         
---\\\
என்னமோ நடக்குது! 

உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை பார்க்க வருவதை எல்லாம் என்ன அரசியல் இருக்க போகிறது!

அதுசரி ராகுலாவது முதல்வரை நேரில் பார்த்திருப்பாரா? பிரதமர் வந்தாலாவது செல்பி எடுப்பார்!

அப்பொழுதாவது முதல்வரின் உடல்நலம் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளச் செய்வார்! 

ராகுல் வந்ததில் அரசியல் என்றால்  கவர்னர் சென்றது என்ன இயல்?
#
இன்று 7.10.16 PTTV நேர்படபேசுக்கு!

விவாதத்தில் கவர்னரை அமைச்சர்கள், தலைமைச் செயலர் சந்திக்க அதிகாரமில்லை என ஒரு ரீல் ஓடுச்சி! 

அடுத்து ராகுல் திமுக தலைவரை சந்திக்காமல் போனது ஏன் என ஒரு ரீல் ஓடுச்சி! 

என்னமோ நடக்குது! மர்மமாக இருக்குது!                                                                           ---\\\                             
துரும்பும், தலாக்கும்!
#இப்பவும் தமிழகத்தின் பல கிராமங்களில் "துரும்பு" வாங்கும் முறை உள்ளதே! (இந்து மத சடங்கு விவாகரத்து)
#முஸ்லீம் மத சடங்கான 'தலாக்' மட்டும் ஏன் கூடாது? 
#மத்திய அரசின் முஸ்லிம் விரோதமே இதில் உள்ளீடாக உள்ளது! 
#தனிக்குடித்தனம் கோரும் மனைவியை 'விவாகரத்து' செய்யலாம் என்பது விஞ்ஞான பூர்வமற்றது! 
#இந்துத்துவா பழைமைவாதம் அதில் ஒளிந்து இருக்கின்றது! 
#அனைத்து மத, சாதி, இன குடும்பங்களையும் சிதைப்பது நுகர்வு கலாச்சாரமும், உலகமய கொள்கைகளும்! 
#மத்திய அரசு பார்வையிலும், உச்சநீதிமன்றம் பார்வையிலும் 'பழைமைவாதம்' தெரிகிறது!
#தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்பது ஆணாதிக்க சிந்தனையே!
#
இன்றும் 8.10.16 PTTV நேர்படபேசு வில் 6 பேர் எமது கருத்துக்களை களவாடி உள்ளனர்! அதுகூட தொலையட்டும்!

"தனிக்குடித்தனம் கோரும் மனைவியை 'விவாகரத்து' செய்யலாம் என்பது விஞ்ஞான பூர்வமற்றது". இதை 'தேவி' என்பவர் "விஞ்ஞான பூர்வமற்றது" என்பதை மறைத்து, அர்த்தத்தையே மாற்றிவிட்டார். திருடப்படுகிறா? தொலைக்காட்சி நிர்வாகமே இவ்வண்ணம் வேறு பெயர்களில் வெளியிடுகிறாதா? தெரியவில்லை! 

இறுதியாக நெறியாளர் தியாகச்செம்மல் கூறியது போல் தலாக் கோ, விவாகரத்தோ அது மதம் சார்ந்து இருக்கும் பத்தாம் பசலித்தனமான போக்கில் இருந்து சட்டமும் பெண்களுக்கு பாதுகாப்பு தரணும் சட்டமும் மூடத்தனத்திற்கு துணை போயிடலாகாது! 
---\\\