Thursday 25 June 2015

கோபம் கொப்பளிக்கிறது பார்த்தீர்களா?

காலைக்கதிர் என்கிற காமாலைக் கதிருக்கு கம்யூனிஸ்ட்கள் தான் இலக்கு போல! தினசரி எதாவது அவதூறுகளை பரப்பிக் கொண்டே இருந்தால்தான், அதற்கு தூக்கம் வரும் போல! இன்று 25.6.15 ஒரு கார்டூன்..!

அதில் தோழர் யெச்சூரியை கிண்டல் அடித்துள்ளது. கிண்டல் அடிப்பது ஒன்றும்  குறையன்று! ஆனால் அது கிண்டலாக தெரியவில்லை; நீரேத்தமாக தெரிகிறது!

தோழர் யெச்சூரி 'நாய் எழுந்தவுடன் முன் பின் வளையும்; அதுதான் யோகா!' என்றார். அதுமட்டுமா சொன்னார்,

'இது இந்துத்துவா மயமாக்கல்; திசைத்திருப்பல்' என மிகுந்த பொறுப்பு உணர்வுடன் கூறி உள்ளார். (தோழர் யெச்சூரி அறிக்கை தமிழ் இந்து வில் வந்துள்ளது; அது இத்துடன் உள்ளது)

காமாலயன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம்! அதுபோல் மோடியின் அவதாரத்தை அம்பலப்படுத்தினால், எப்படி கோபம் கொப்பளிக்கிறது பார்த்தீர்களா?

நாயை போட்டு, 'எனது யோகா எஜமானை சொல்லமாட்டேன்' என்று கார்டூன் போட்டால், என்ன அர்த்தம்? நாய் தான் என் யோகா குரு என்கிறார் என்று தானே அர்ததம்? இப்படி போடுவதுதான் பத்திரிக்கை தர்மமா?

இந்த மஞ்சள் பத்திரிக்கையை எச்சரிப்பதோடு, கண்டனம் முழங்குவோம்!



Wednesday 24 June 2015

ஆர்எஸ்எஸ் சே பாஜக!

தேவையற்றது!
தமிழக அரசு மீது ஆகட்டும், யோகாவை ஆதரிக்காதவர்களை ஆகட்டும் தமிழக பாஜக வானாலும், அஇபாஜக வானாலும் விமர்சிப்பது என்பதே அதன் சகிப்புத்தன்மை இல்லாததையே காட்டுகிறது!
 
தான் செய்யும் அனைத்தையும் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பதே சர்வாதிகாரம்! அது ஜனநாயகத்திற்கு எதிரானது!
இப்பொழுதாவது தமிழகத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகள்  பாஜக வின் குள்ளநரித்தனத்தைப் புரிந்துக் கொண்டால் சரி!
 
இதைதான் இடதுசாரி கட்சிகள் அன்று முதல் இன்று வரை பாஜக மதவாதமுள்ள ஆர்எஸ்எஸ் ன் அரசியல் பிரிவு; இது மற்ற கட்சிகளைப்போல் ஒருமுகம் கொண்டதல்ல; பல முகம் கொண்ட முகமூடி அணிந்த ஆர்எஸ்எஸ் சே பாஜக!
 
அதன் முழுநேர ஊழியரே நரேந்திர மோடி!
 
இன்று 24.6.15 PTTV நேர்பட பேசுக்கு!
துப்புக் கெட்ட அரசுகள்

தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் முக்கியமானது ஏரி பாசனம்!
 
அவை பெரும்பாலும் அரசு பஸ் நிலையம், அரசு கட்டடங்களாக உள்ளன; அல்லது தூர் எடுக்காமல் தூந்துபோய் கிடக்கின்றன. ஆற்று பாசனத்தில் வரும் நீரை தேக்குவதே இந்த ஏரிகள்தான்!
 
அண்டை மாநிலங்களோடு சண்டை போடுவதிலேயே இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் (திமுக, அதிமுக) காலத்தை ஓட்டிவிட்டன!
 
காவிரி நிரம்பி வழியும்போது அது கடலில் சென்று கலக்காமல் தேக்கி வைக்கும் யோக்கியதை இல்லாத துப்புக் கெட்ட அரசுகள் இதுநாள் வரை தமிழகம் கண்டு உள்ளது!


நாய் வாலைக்கூட நிமிர்த்தலாம்..!

இன்று 24.6.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9.30க்கு அதன் சுருக்கம் தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் சுரீர் என்றிருந்தது! ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு உரைக்குமா? என்று தெரியவில்லை!

நெறியாளர் ஜென்ராம் க்கு மிகுந்த பாராட்டைத் தெரிவிக்கலாம்!
எல்லாம் யோகாதான்! நெறியாளரின் கேள்வி ஆழமிக்கது! 

யோகாவின் பிதாமகன்களின் அச்சு அசலைத்தான் பாஜக வும், மத்திய அரசும் செய்கிறதா? இந்து மத(ன)ம் சார்ந்த அரசியல் இதில் இல்லவே இல்லையா? (இதை இந்த நேரத்தில் அதிமுக, தமிழக அரசுக்கு கையில் எடுக்காததால், அது சுத்த சுயப்பிரகாசம் என்று அர்த்தமில்லை என்ற அர்த்தத்தில் நெறியாளர் சொன்னதும் ஹலைட்!

'டாஸ்மாக் கில் பாஸ்மார்க்! ஆனால் உடல்நலம் சார்ந்ததில் பெயில் மார்க்' என தமிழிசை கூறியதை 'மனமா? மதுவா?' (அல்லது மதமா? மதுவா?) என்றால் மது மேலானதே! என்று கூறி விட்டால் என்ன செய்வார் என எதிர் கேள்வி போட்டு நெறியாளர் விவாதத்தை முடித்தது சூப்பர்! நான் இதை எதிர்ப்பாகவே இல்லை!

யோகா மீதான மோடியின் மோகம் அரசியல் சார்ந்தது; மதம் சார்ந்தது; மனம் சார்ந்தது அல்ல! என்பதை மிக அருமையாக இன்றைய நிகழ்சசி அமைந்தது அர்த்தமும், அழுத்தமும் மிக்கதே என்றால் மிகையல்ல! புதிய தலைமுறை டிவிக்கும், நெறியாளர் ஜென்ராம் க்கும் நன்றி உரித்தாகட்டும்!

நிகழ்ச்சியில் மாத்ருபூதம் (பாஜக ஆதரவு) 'எல்லாம் மேல இருக்கிறவன் (மோடி) பாத்துக்குவான்!' என்றே எல்லாவற்றிக்கும் பதில் கூறினார்! 

அதற்கு ஹாஜாகனி 'மேல இருக்கிறவனே சரி இல்ல; அந்த காலத்திலேயே நாங்க பிளாஸ்டிக் சர்ஜன்' பண்ணவங்க' என்று விஞ்ஞானிகள் மாநாட்டிலேயே... அதாவது திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தவர் மோடி என்று பெரும் போடு போட்டார்! 

ஆனாலும் 'அம்மா'க்கு வக்காலத்து போட்டதுதான் எதற்கோ அச்சாரம் போடுவதுபோல் இருந்தது! நாய் வாலைக்கூட நிமிர்த்தலாம்; ஆனால் அம்மாவை திருத்தவோ, நம்பவோ முடியாது கனி அவர்களே! ஜாக்கிரதை!
"சூராதி சூரி"யை எதிர்ப்பது வீரம் அல்லவா?

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியும் போடாமல், போட்டி போடுபவர்களுக்கு (யாருக்கோ) ஆதரவும் தராமல், 'ஜனநாயக ' கடமையாற்றும் கட்சிகளை பற்றி காலைக்கதிருக்கு கவலை இல்லை!

ஆனால்... காலைக்கதிர் பார்வையில், எதிர்த்து நிற்பவர்களை நிலை குலைய வைத்து, கொன்றோ அல்லது கை கால்களை உடைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்ப போகும் "சூராதி சூரி"யை எதிர்ப்பதை வீரம் அல்லவா?

வீரம் என்று சொல்லாவிட்டாலும் நாசமாக போகட்டும்! ஆனால் இந்த வக்கிரத்தால் காலைக்கதிர் காணும் இன்பம் தான் என்ன? இன்றைய 24.6.15 அதன் வக்கிரத்தை பாரீர்!

ஒரு மூலையில்  'துக்குலியூன்டு!'

இன்றைய 24.6.15 காலைக்கதிர் கார்டூன் போலவே இன்றைய தினமணியிலும் ஒரு வக்கிரம்! ஆம்! ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்னாடக அரசு நேற்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த செய்தி தான் ஏறக்குறைய இன்றைய செய்தி தாள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. ஆனால் நடுநிலை நாளிதழ் என தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் தினமணி (என்றுமே ஆளும் கட்சியை ஆதரிக்கும் தினத்தந்தி கூட தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருக்கிறது) 9ஆம் (ஜெ வுக்கு பிடித்த நெம்பரோ) பக்கத்தில் ஒரு மூலையில் போட்டிருக்கிறது 'துக்குலியூன்டு!'

அதுசரி! அதையாவது போட்டதேன்னு சந்தோசப் படுங்க அப்பிடீங்கிறீங்களா? அதுவும் சரிதான்!

Tuesday 23 June 2015

மிரட்டவே!
ஒழுங்கு படுத்த அல்ல..!

இந்திய அரசு ஒழுங்கு படுத்த வேண்டியது தங்களது அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி துறைமார்கள்!

அதை விடுத்து அரசு ஊழியர்களை மிரட்டுவது வேண்டாத வேலை!

ஒரு வேளை அங்கும் இங்குமாக அரசு ஊழியர்கள் இப்படி அப்படி இருந்தாலும் முன்னது ஒழுங்கானால், பின்னது சரியாகிவிடும்!

இன்று 23.6.15 PTTV மக்கள் மேடையில் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மின்வெட்டு இல்லாத... 
மாநிலம் என்பதெல்லாம் சும்மா..!

மின்வெட்டு குறைந்திருக்கு நகர் புறத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

ஆனால் கிராமபுறத்தில் குறிப்பாக விவசாயத்திற்கு மின் மோட்டார் ஓடும் அளவுக்கான குதிரை சக்தி மின்சாரம் கிடையாது!

உண்மைக்கு புறம்பானது! ஆர்கேநகர் மக்களை ஏற்றிடும் நரித்தந்திரம் இது!

இன்று 23.6.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது
எல்லாம் ஆர்எஸ்எஸ்மயம்! 
தோழர் யெச்சூரி சொன்னது மிகச்சரியே!

தோழர் யெச்சூரி யோகா பற்றி சொன்ன கருத்துக்களுக்கு டிட்டரில் கண்டனமாம்! தமிழ் இந்து செய்தி வெளியிட்டு உள்ளது இன்று (23.5.15).


அதில் 3 மும்மூர்த்திகள் கருத்தை எடுத்து போட்டுள்ளது. கேட்டால் பத்திரிக்கை தர்மம்; நடுநிலை என பேசுவார்கள்! இதை வெளியிட்டதிலேயே, அதன் "உள்ளத்தில்" உள்ளதை அறிய முடிகிறது!

அடுத்து சீனாவோடு ஒரு முடிச்சு... இடதுசாரிகள் உருப்புடாதென ஒரு சாபம்... இதெல்லாம் இருக்கட்டும்! அவர் எழுப்பிய அர்த்தமுள்ள  கேள்விக்கு டிடுட்டரில் அந்த கோமான்கள் எதாவது பதில் தந்துள்ளார்களா? தெரியவில்லை!

உயிருள்ள ஜீவராசிகள் எல்லாமே அதுஅதுகள் தானாகவே யோகா தன் போக்கில் தானே செய்து கொள்கிறது; அதாவது மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்துத்தர வேண்டாம்... என்பதே தோழர் எச்சூரியின் கருத்து!

இவ்வளவு தான்! எல்லாரும் தினசரி தங்கள் வாழ்வில் பார்க்கும், பழகும் நன்றி உள்ள ஒரு ஜீவனை குறிப்பிட்டு உள்ளார்!  இதுக்கு எதுக்கு சீனா போனா ன்னுக்கிட்டு! 

இந்தியாவையே உலுக்கி எடுத்துக்கிட்டு இருந்த, "நிலம் கைகப்படுத்தும் ஆள்தூக்கி சட்டம்" யோகா வால் தற்போது  விட்டத்தில் தூக்கி போட்டாச்சி அல்லவா? 

எல்லாவற்றையும் விட இதில் என்ன விஷேசம் ஒன்று இருக்கு தெரியுமா? அதாவது... மோடியின் சித்தாள்கள் இந்துத்வா பரப்புரையில்... மாடு வெட்டாதே; 5 பிள்ளை பெற்றுக்கோ, கீதையை ஏற்காதவர் கடல்போய் விழுந்திடு; சமஸ்கிரத்தை படி; மார்க்சியம், அம்பேத்காரியம், பெரிஆரியம படிக்காதே; ஆரியம் படி என்றெல்லாம் சின்ன சின்ன படம் காட்டி வந்தனர்! 

மோடி என்று ஒரு பெரும் மோடிஆளர் இருப்பது தெரியாமல் இருந்தது; அவர்கள் எல்லாம் குண்டுச்சட்டியில் (இந்தியாவில்) தான் குதிரை ஒட்டிக்கொண்டு இருந்தனர்! பார்த்தார்... மோடியார் "நம்ம லெவலுக்கு அகிலம்உம் பேசும் இந்துத்துவா எது?" என்று உலக யோகாதினம்  ஆர்எஸ்எஸ்  தலைவர் ஹெட்கோல்வால்கர் இறந்த தினத்தை தேர்வு செய்து, தான்தான் நெம்பர்ஒன் என்பதை காட்டிக்கொண்டார்.

ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்! அரசின் மக்கள் விரோதப் போக்கை பின்னுக்கு தள்ளுவது! இந்துத்துவா வெறியை வாழைப்ழத்தில் ஊசி போடுவதுபோல் லோகம் முழுதும் முன்னுக்கு கொண்டு போவது! இதை தவிர யோகாவில் என்ன இருக்கிறது? இதிலே தான்தான  "முதல்வன்" என்பதையும் காட்டி விட்டார் அல்லவா? எல்லாம் ஆர்எஸ்எஸ்மயம்!

இதைத்தான் யெச்சூரி அவர்கள் "நாய் பொழைக்குமா? இந்த பொழைப்பு" என்று கூறி இருப்பாரோ என்று எனக்கு தோன்றுகிறது! எனக்கு தோன்றுவது தப்பாக கூட இருக்கலாம்! நீங்க என்னா நினைக்கிறீங்க? சொல்லுங்க! தோழர் யெச்சூரி சொன்னது மிகச்சரியே!
மோடியும், லேடியும்..! 
இன்று 22.6.15 PTTV மக்கள் மேடையில்... 

நெறியாளர் படாதபாடு பட்டார் யோகா அரசியல் இல்லை, அரசின் ஆக்கப்பூர்வமான பணியென்று! அவருக்கும் எஸ்வி.சேகருக்கும் கோவையில் இருந்து பேசிய நேயர் வைத்தார் ஒரு ஆப்பு..! அப்படியே வாயடைத்துப் போனார்கள்! 

ஆர்எஸ்எஸ் சின் பிதாமகன் என்று பரப்பப்படும் ஹெட்கேவர் நினைவு நாளில் யோகா உலக தினமாக்க மோடி அரசுதான் ஐநா விடம் "தலைகீழ் நின்று" செய்த 'யோகா' வினால்தான் இந்த கூத்து நடந்தது என்று மோடியின் மோசடியை அம்பலப்படுத்தினார்! அவருக்கு நன்றி! 


ஆர்கேநகர் ஜெயலலிதா பிரச்சாரம்..!
தான் ஒரு வேட்பாளர் என்கிற முறையில் அர்த்தமானதே! ஆனால் அங்கே தலைவிரித்தாடும் அராஜகம், ஆக்கிரமிப்பு, அதிமுகவின் பணநாயகம், அரசே மொத்தமாக அங்கு முகாமிட்டு (அமைச்சர்கள், அதிகாரிகள்) அழிச்சாட்டியம் செய்வது அர்த்தமற்றது மட்டுமல்ல;  கண்டிக்கத்தக்கது! 

தேர்தல் கமிஷன் இல்லாமல் போனதுதான் கொடுமையானது! 

22.5.15 PTTV நேர்பட பேசு...க்கு!

ஆர்கேநகருக்கு..!

வேலூரில் இருந்து மட்டும் 25,000 (5,000 மாணவர் உள்ளிட்டு) பேர்கள் போய் உள்ளார்களாம்! 100 பிரியாணி மாஸ்டர்களாம்..! அப்படி என்றால் தமிழகம் முழுவதும் இருந்து எவ்வளவு பேர் சென்றிருப்பார்கள்? 

(சேலம் மாநகரில் இருந்து சென்ற ஒருவர் கூட, அங்கே "அரசியல்" பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவ
மனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்துவிட்டார்!)

நன்றி: காலைக்கதிர் 23.05.15 சேலம்.

Sunday 21 June 2015

அட! யோகா சிகாமணிகளே! 

இப்ப யோகா இல்லையென்று எவன் அழுதான்? யோகா வேண்டுமென்றால்  அவனவன் பண்ணிக்கிறான்! அரசாங்கத்துக்கு யோகா பண்றதுதான் வேலையா? 

ஒழுங்கா ஊட்டசத்து உணவு கொடுத்தாலே போதும்! உயிர் காக்கும் அரசு மருத்துவமனையில் இலவச தரமான மருத்துவம் கொடுத்தாலே போதும்! ரத்தசோகையில் நாளும் மடியும் பெண்களுக்கு உரிய மருத்துவம் இருந்தாலே போதும்! 

இதையெல்லாம் விட்டுவிட்டு வேர்த்து விறுவிறுத்து தேசிய கொடியில மூஞ்ச தொடச்சிக்கிட்டு யாரு வரச் சொன்னா மோடிய? 

ஓ..! இதெல்லாம் ஓட்டு அரசியல் இல்லீங்களோ? 

இங்கிருந்து அமெரிக்காவுக்கு போய் யோகா பண்ணுனுமா? அப்பிடியே லன்டனுக்கும், போர்ச்சுக்கல்லுக்கும் போய் அந்த லலித்மோடி குடும்பத்தோட யோகா பண்ணுனா அந்த அம்மாவுக்கும் ஆஸ்பத்திரியில வேல இல்ல பாருங்க! அப்படியே டிச்ஜார்ஜ் பண்ணி குடும்பத்தோட இங்க நைசா கூட்டிக்கிட்டு வரலாமில்ல! 

யோகா இல்லீன்னு இந்தியாவுல தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கனாங்களா? மருந்து குடிச்சி செத்தாங்களா? 

கெடக்கிறது கெடக்கட்டும் கெலவிய தூக்கி மடிமேல வைய்யிங்கிற கதையா... கறுப்பு பணம் என்னாச்சி?  நெலத்தெல்லாம் புடுங்கிறாங்களே... யாருக்கு கொடுக்க புடுங்கிறீங்க? இலங்கை தமிழர்களுக்கா? இல்ல இந்தியாவுல நெலமில்லாத இருக்கும் உனக்கும், எனக்குமா? இதெல்லாம் ஓட்டுக்கா? இல்ல ஓட்டுக்குத் தரும் நோட்டுக்கா? 

ஆய் ஊய் ன்னா சீனாவ வம்புக்கு இழுக்கிறதே வேல வெங்காயமா போச்சி! சீனாவுல இருக்கிறவ கேட்கிறத இங்க இருக்கிறவ எதுக்கு கேட்கிறது! இங்க இருக்கிறவ வேல இல்லாம, சோத்துக்கு இல்லாம கெடக்கிறாங்... அத பாருன்னா, சீனாவ பாக்கிறதாம். இப்ப ஒருத்தன் இந்தியாவுல சும்மா 27 கோடிக்குத்தான் ஒரு காரு வாங்கி இருக்கானாம்! நீங்க எத்தன கோடிக்கையா காரு வாங்கியிருக்கிறீங்க? 

சீனாகாரனையும், ஜப்பான்காரனையும் பார்த்து என்னா செய்யறது. எல்லா நாட்டுல இருக்கிற கொள்ளக்காரன்கள் எல்லாம்  சேர்ந்து மோடியிங்கிற குதர மேல பணத்தக்கட்டி, நம் நாட்டு சொத்தெல்லாம் நாக்க போட்டு நக்காத கொடுமையா, அள்ளிக்கிட்டு போறாங்க; அத மறைக்கத்தான் மாட்ட வெட்டாத, சோத்தப்பத்தி கவலபடாத யோகா பண்ணு அது இது உடாண்ஸ் உட்டுகிட்டு திரியறது ஆர்எஸ்எஸ் கும்பல்! 

அத்வானியே சொல்லிட்டாரு, மோடி எமெர்ஜன்சிய கொண்டார போறாருன்னு! அவுரு சீனாக்காரங் பேசக் கேட்டுக்கிட்டா சொன்னாரு? நெதானமா யோசிங்க! கம்யூனிஸ்ட்காரன் சொல்லறத எல்லாம் கண்ண மூடிக்கிட்டு எதுக்காதீங்க! சரிங்களா?
ஜென்ராம் சூப்பர்! நெத்தியடி!

இன்று 22.6.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அதிமுக பாரதி, பாமக பாலு, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்!

யோகா பற்றி அதிமுக 'மவுன யோகா' ஏன் என்ற விவாதம்... அதற்கு அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில்  பங்கேற்றனரே என அதிமுக பாரதி சொல்ல, அதற்கு அமைச்சர்கள் விதவிதமான யோகாவை தினம், தினம் பார்த்துதான் வருகிறோம் என நெறியாளர் ஜென்ராம் கூறியது சூப்பர்! நெத்தியடி!

பாரதி பதில்தான் பரிதாபம்... இன்றைக்கு ஆர்கேநகர் தேர்தலுக்கு போக இருப்பதால், யோகா பற்றி கருத்து சொல்ல நேரம் இல்லையாம்! அய்யா எப்படி அய்யா இப்படி பதில்..!? அதைவிட சமாளிப்பு பாலு கேட்டதற்கு பதில் சொல்ல முடியாத பாரதி ஒரு போடு போட்டாரு பாருங்க...'அன்புமணியை முதல் அமைச்சராக அறிவிக்கனும் அதிமுக ன்னு எதிர்ப்பார்க்கிறீங்க; அது நடக்குமா?'  எப்படியய்யா இப்படியெல்லா பதிலு..!?

பாலுகிட்ட அதி மேலாவிதனம் அவ்வப்போது தலைதூக்கியது... 'காலை நேரம் பயனுள்ள அறிவுபூர்வமான விவாதமாக இருக்கனுமாம்!' அய்யா பாலு அவர்களே...தங்களின் ஜாதிய ரீதியான திரட்டல் மிக அறிவு பூர்வமானதோ? பதில் பொறுமையாக சொல்லுங்கய்யா முதல்வர் வேட்பாளர் மருத்துவர் சின்ன அய்யாக்கிட்ட கேட்டு! சொல்லுவிங்களா? அடுத்து விவாதத்திற்கு வரும்போது! அல்லது தினம் தினம் வரும் அறிக்கையில் சொன்னாலும்கூட போதும்!

இந்த யோகாவை பற்றி ஊடகங்கள் ஏன் இந்த ஊது ஊதுகின்றன என்பதன் அர்த்தம் என்ன? பிரதமர் எதற்கு உலகத்திற்கு நன்றி  கூறினார்? அதற்கு என்ன அர்த்தம்? ஊடகங்கள் அலசுமா? 

எல்லாம் இந்துத்துவா மயமய்யா மயம்! கிடைப்பதெல்லாம் தனக்கு ஆயுதமாக்கும் ஆர்எஸ்எஸ் அரசியல் உத்தி; அதன் அதிதீவிர தொண்டன்தான் ஆர்எஸ்எஸ் மோதி!
அத்வானியின் முத்துச்சிதறல்!

அய்யா சாமி! ஆளும் கட்சியும் நீங்களே! எதிர் கட்சியும் நீங்களே!
எதிர் கட்சி தலைவர் இல்லாத குறையையும் பாஜக தீர்த்து வைத்து விட்டது! இந்த ஆட்சியில் என்ன குறை யாரால் காண முடியும்?

அதுசரி! போன ஆட்சியில் கூட ராகுல் காந்தி கூட, இப்படித்தான்  நானும் இருக்கிறேன் என்பதற்காக,  மன்மோகனார் கொண்டு வந்த சட்ட மசோதாவையா சட்டத்தையா கிழித்து போடுவேன், முட்டாள்தனம் என்றெல்லாம் வீர வசனம் பேசீனாரே அதுபோலத்தான் இதுவுமா?

எது எப்படியோ ஒரு புகைச்சல் அன்று முதல் இன்று வரை தொடருகிறது பாஜகவில் என்பது மட்டும் தெரிகிறது அத்வானியின் இந்த முத்துச்சிதறல் கூறுகிறது!
"க்குகூம்... எல்லா வெங்காயத்திலும் தான் 
பூச்சீ... வண்டூ உழுது" 

இன்று 21.6.15 PTTV உரக்க சொல்லுங்கள்  நிகழ்ச்சி ...
மருத்துவர் கவுசல்யா, சித்த மருத்துவர் அருண், சமூக ஆர்வலர் முனைவர் சுந்தரவள்ளி, ஏற்றுமதியாளர் பாலாஜி ... இவர்களுடன் நெறியாளர் கார்த்திகேயன்...

பாக்கெட் உணவு உடலுக்கு தீங்கா? பாரம்பரிய உணவு  வெறுப்பது ஏன்? 

நடுவரில் 3 பேர் பாக்கெட் உணவை ஏற்காதவர்களாக பேசினர். ஏற்றுமதி யாளரும், ஒரு சிலருமே பாக்கெட் உணவை ஆதரித்தனர். அதிலும் கூட  சுரம் குறைந்தே இருந்தது.

பாரம்பரிய உணவுக்கு ஆதரவு பெருகியது ஆறுதல்.  ஆனாலும் அளவோடு சேர்க்கப்படும் ரசாயன பொருளால் உடலுக்கு பாதிப்பு இல்லை என்ற விவாதத்தை,  நியாயப்படுத்த ஊசி கூட ரசாயனம் தான் அதை மட்டும் பயன்படுத்தலாமா? என்று வாதம் செய்தது பரிதாபமாக இருந்தது.

ஊசி என்பது மருந்து, அது உணவல்லவே! மருந்தே உணவானால் வாழ்க்கை மறந்து போக வேண்டியதுதான் என்பதை அழகாக விவாதித்து அருமை!

அதுமட்டுமல்ல... ரசாயன  மருந்தை கையாளும் மருத்துவர் கவுசல்யா பாக்கெட் உணவை நஞ்சென்றது தான் "நச்!"

அதுபோல அரசுக்குத்தான் எல்லா பொறுப்பும் இருக்கிறது; பாமரனாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், உயிர் விலைமதிப்பற்றது தானேஎன முனைவர் சுந்தவள்ளி கூறியது அர்த்தம் உள்ளது. ஆகவே அரசுக்குத்தான் அனைத்து பொறுப்பும் உள்ளது என்றது சூப்பர்!

மொத்தத்தில் இன்றைய இந்த விவாதம் பயனுள்ளது. 

ஒரு கொசுரு... கெமிக்கல் கலப்பதால்தான், அந்த காலம் மாதிரி அரிசி, பருப்பு, மாவு போன்றவற்றில் பூச்சி, வண்டு விழாமல் மாத கணக்கில் பொருள்கள் இருக்கிறது என்று விற்பனையாளர் பாலாஜி கூறியபோது... சமையல் அறையில் இருந்த என் மனைவி, "க்குகூம்... எல்லா வெங்காயத்திலும்தான் பூச்சீ... வண்டூ உழுது" என்றது என் காதில் வண்டாக வந்து குடைந்தது!

அப்படியென்றால்... கெமிக்கல் இன்னும் அதிகமாக போடனுமோ...
விற்பனையாளர் பாலாஜி பாஷையில்...!

Thursday 18 June 2015


“காக்கா முட்டை..!”




காக்கா முட்டை’யைக் காலதாமதமாகத் தான் பார்க்க நேர்ந்தது! இதில் ‘காக்கா முட்டை’யை மட்டுமல்ல...! குயில் முட்டையைப் (காக்கை ஏழையெனில், குயில் பணக்காரன் என்று வைத்துக் கொள்க) பற்றியும் இந்த ‘காக்கா முட்டை’ பேசுகிறது என்பது தான் இந்த திரைப் படத்தின் இன்னொரு பரிமாணம்! கதை சிறுகதையே...! ஆனால் திரைக்கதையும், உரையாடலும் நெடுங் கதையே! அதோடு, அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல, கதையில் வந்துள்ள அத்தனை பாத்திரங்களும் அபாரம்!

தமிழ் திரைவானம் மெல்ல மெல்ல நகருகிறது நல்ல நல்ல படைப்புகளை நோக்கி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ‘காக்கா முட்டை!’ அனேகமாக சிறுவர்களை பற்றிய புதிய கோணத்தில் வந்துள்ள முதல் திரைப்படம் என்றே தோன்றுகிறது; அதுவும் இன்றைய உலகமய சூழலில் ஏழை குழந்தைகளில் ஏக்கங்களை வர்க்கக் கோணத்தில் வன்மம் இன்றி பதிவு செய்து உள்ள முதல் தமிழ் திரைப்படம் ‘காக்கா முட்டை’யே! அதற்காக இயக்குனர் எம்.மணிகன்டன், தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் மிகுந்த பாராட்டுக்குரியவர்களே!

இந்தப் படத்திற்கு இன்னொரு பெயர்..! ‘முகவரி இல்லாதவர்கள்’ என்றுக் கூட சொல்லாம். சென்னை சைதை தொகுதிக்குட்ட ஒரு குப்பம் (சிலம்ப்). அங்கு எளிய ஒரு குடும்பம். இரண்டு சிறுவர்கள்; அம்மா, ஆயா..! அக்கம் பக்கம் குடும்பங்கள்; அப்படியே கொஞ்சம் தாண்டிப் போனால் ரயில் நிலையம்; சிறுவர்கள் விளையாடும் பாராமரிப்பற்ற நிலம்; அதில் மரம் செடி கொடிகள்... இப்படியாக படம் விரிகிறது. சென்னை குப்பத்தைக் கண்முன் தத்ரூபமாக கொண்டு நிறுத்தி விட்டார்கள்.

துவக்கமே தூள்! பெயரில்லாத சிறுவர்கள். தனக்குத்தானே ‘சின்ன காக்கா முட்ட, பெரிய காக்கா முட்ட’ என பெயரிட்டுக்கொள்கின்றனர். சின்ன காக்கா முட்ட படுக்கையிலேயே மூத்திரம் பேய்ந்து விடுவதில் துவங்கி, படுக்கையில் மூத்திரம் பேய்யாத ‘மெச்சூரிட்டி’ ஆன சின்ன காக்கா முட்ட வரையென கம்பீரத்தோடு படம் முடிகிறது. 

எதை சொல்லுவது; எதை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை! இதைச் சொன்னால், அது விட்டு விடுமோ, அதை சொன்னால் இது விட்டு விடுமோ என்று பயப்படுமளவுக்கு படத்தை பல பரிமாணங்களில் கொண்டு சென்று உள்ளார் காமிரா-உரையாடல்-இயக்குனர் எம்.மணிகண்டன்; ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார்... மன்னிக்கனும்; செதுக்கி உள்ளார் காமிரா மேன் எம்.மனிகண்டன்!  மணி மணியான உரையாடல்...! அப்பப்பா..! ஏசி தியேட்டரையே சூடாக்கி, பின் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வயிரை ஒரு பதம் பார்த்து விடுகிறார்... ‘காக்காமுட்டை’ எம்.மணிகண்டன்!.


மீண்டும் கதைக்கு வருவோமா? அந்த விளையாட்டு மைதானத்தில் இருக்கும் ஆலமரத்தில் இருக்கும் முட்டைகளை எடுத்து, காக்கைக்குக் சோறுக் கொடுத்து, அதை ‘ஏமாற்றி’ அதன் முட்டைகளை எடுத்து குடிப்பதில்தான் என்னே அலாதி...! அலாதி மட்டுமா..? அங்கே அரும்பும் பொதுவுடமை சிந்தனையை மிகமிக எதார்த்தமாக பொருத்தி உள்ளதை பாருங்கள்! பெரிய சிறியவன் சாப்பிடும்போது அம்மாவுக்கு தெரியாமல் சாப்பிடும் சோறு கொஞ்சத்தை, பேன்ட் பாக்கெட்டில் எடுத்து வந்து, காக்கைக்கு வைத்துவிட்டு, மரத்தில் ஏறுவான்; சின்ன சிறுவன் “கா..! கா..!” என கரைவான்; பெரிய சின்னவன் மரத்தில் ஏறுவான்; காகம் சோறு திங்க வந்துவிடும்! 

இருந்தாலும் காகம் கொத்தி விடுமோ என்ற பயத்தில் மேலும், கீழும் பய உணர்வோடு பார்த்துவிட்டு, காக்கைக் கூண்டை நெருங்குவான்; அதில் மூன்று முட்டை இருக்கும்; கீழிருந்து சின்ன சிறுவன் ‘எத்தனை முட்டை இருக்கிறது என்பான்’; மேலே இருந்து கொண்டு, ‘மூன்று’ என்பான் பெரிய சிறுவன்; அதோடு ‘மூன்றையும் எடுத்து வரவா?’ என்பான்; அதுக்கு சின்னவன் சொல்வான்..! ‘வேண்டா வேண்டா ஆளுக்கு ஒரு முட்டை; உனுக்கு ஒன்னு; எனக்கு ஒன்னு; காக்காவுக்கு ஒன்னு!’ என்பான் சின்னவன்; அது மாதிரியே பெரியவனும் செய்வான்! என்ன ஒழுக்கு..! என்ன நேர்த்தி..! பார்த்தீர்களா..? இதுபோல்தான் படம் முழுதும் பார்க்க முடிகிறது!



‘காக்கா’ முட்டையோ ‘குயில்’ முட்டையோ சிறுவர்களின் உணர்வு, உணவுகளுக்கு சரியான மதிப்பளிக்கப்படுவதில்லை பெற்றோர்களால் என்பதை மிக நுட்பமாக காட்சிப் படுத்தி இருக்கிறார் இயக்குனர்! காக்கா முட்டை எடுக்கும் இடத்தை பண ‘முதலை’ ஒன்று வாங்கி பணம் காய்க்கும் ‘வாத்தாக’ வானளாவ வர்த்தக வளாகம் அமைத்து, அதற்கு திறப்பு விழாவிற்கு வரும் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவதிலிருந்து கதை அடுத்த கட்டத்திற்கு அலுங்காமல் குலுங்காமல் நகர்த்தி செல்லப்படுகிறது.

‘பீட்சா’  சாப்பிட ஆசைப்பட்டு, அப்படி அப்படியே புதுச்சட்டை வாங்குவது... என  பற்பல வேலைகளுக்கு போவது..! அதாவது டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு குப்புற கிடப்பவர்களை வண்டி வைத்து இழுக்க முற்படும் காட்சி..! வீட்டு நாய்க்குட்டியை விற்க அலைந்து திரிந்து ஆட்டோக்காரரிடம் நாய்க்குட்டிக்கு ரூ25,000 விலை சொல்லுவது..! இப்படியாக படத்தில் சுவாரஸ்சியம்  பெருக்கெடுத்து ஓடுவது அருமையோ அருமை! 

ஊடகங்களையும், அரசியல் வாதிகளையும், அரசியல் வாதிகளின் சிட்டாள்களையும், காவல் துறையையும் எப்படி முதலாளிமார்கள் சாமார்த்தியமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை யும் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது நையாண்டியாக யார் மனதும் புண்படாமல்! இந்த உத்தி டாப்! ரயில்வே லைன் மேனாக, குப்பத்தில் வரும் அரசியல் வாதிகளின் சிசியர்களாக, வணிக வளாக ஆலோசகராக, எல்லாவற்றிக்கும் மேலாக சிறுவர்களின் அம்மாவாக, ஆயாவாக வருவோர் எல்லோரும் நடித்து உள்ளார்கள் என்று சொல்ல முடியாது; வாழ்ந்து உள்ளார்கள்! ‘சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை’ யாக  வரும் சிறுவர்கள் (விக்னேஷ், ரமேஷ்) சிறு பிசிறின்றி  எப்படித் தான் அப்படி நடித்தார்களோ? ஆச்சரியமாக இருக்கிறது; நம்பவே முடியவில்லை; இவர்கள் மீனவ குப்பம் சார்ந்த உண்மை கதாநாயகர்கள் என்பது கூடுதல் செய்தி!



எப்படித்தான் அவர்களை  இயக்குனர் இயக்கினாரோ? எல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் எழுகிறது! 'பீட்சா' வுக்காக ஆயா முயற்சிப்பதும், அந்த காட்சியை அந்த சிறுவர்கள் நாவில் எச்சில் ஊற ரசித்து ருசிப்பதும் இறுதியில் எதிர்பாரா திருப்பமாக ‘காக்கா முட்டை’களே அதே கடையில் ஒரிஜினல் பீட்சாவை ருசிக்கிறபோது, ‘டேய்! ஆயா செஞ்ச தோசையே நல்லா இருந்துதடா’ என்பதும் ரசனையின் உச்சம்! இந்த படத்துக்கு சிறப்பு அம்சமே சென்னை பாஷையில் உரையாடல் பிசுறின்றியிருப்பதே!


இந்த காக்கா முட்டைகளுக்கு இதில் கிடைத்த விருதுகளைபோல் இன்னும் இன்னும் இன்னும் கிடைக்க வாழ்த்துவோம்! அதுபோல் இதுபோல் அற்புதமான  திரை ஓவியங்களை படைக்க எம்.மணிகன்டன், தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்கு ‘ஜே’ போடுவோம்! உழைப்பாளிகளின் உளவியல்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் மிக லவகமாக வித்தியாசமான கோணத்தில் கொடுக்கப்பட்டுள்ள “காக்கா முட்டை”யை இருகரம் ஏந்தி பெறுவோம்; குடும்பத்துடன் சென்று பார்த்து ஆதரவு தருவோம்!

-பி.தங்கவேலு




Tuesday 16 June 2015

"மேக் இந்தியாவா? "கேக்"இந்தியாவா? "

"இது ஒரு பிரச்சனையே இல்ல; இதுக்கு போய்... இந்த குதி குதிக்கிறாங்க; மனைவியை காப்பாத்தப்போனது தப்பா? இவங்க ஆன்ட்ரசனை (போபால் விஷவாயு கம்பெனி முதலாளியை காங்கிரஸ் ஆட்சியில் தப்பி ஓட விட்டது)  ஓட விட்டது சரியா?" என்று லலித்மோடி விவகாரத்தில் பிஜேபி கம்பெனி பேசுகிறது!

டிவி க்களில் நேற்று கலைஞர் டிவியில் சிதம்பரம், புதிய தலைமுறை டிவி யில் நித்தியானந்தன் ஆகியோர் பேச்சை கேட்க நேர்ந்தது.

இன்று 17.6.15 தினமணி தலையங்கத்தில், "என்றோ நடந்த ஒன்றை இப்ப ஊதி ஊதி பெரிதாக்கு கிறார்கள்; அதற்கு சில ஊடகங்களும் துணை போகிறது... ஆனாலும் லலித் மோடியை கைது செய்து கொண்டு வரணும்" பேசுகிறது.

ஒன்று தெளிவு...! லலித்மோடி குற்றவாளி;

"பல நூறு கோடி ரூபாய் கறுப்பு பணம் வைத்திருக்கிற... கிரிக்கெட் விளையாட்டை சூதாட்டம் ஆக்கியவர்களில் முதல் புள்ளி (தினமணி ஒப்புதல் தந்திருக்கிறது) லலித்மோடி... "

இப்படி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளில் ஆதாரம் இருக்கிறதென்று சொன்னவரே இன்றைய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ்! அன்று.

இவர் தான் அவர்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க காரணமாக இருந்திருக்கிறார் ஒரு வருடத்திற்கு முன்பு; வெளிப்படையாக அல்ல, ரகசியமாக! இதற்கு உடந்தை ராஜஸ்தான் முதல்வர் மகாராணி சிந்தியா!

இவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள்! இவர்கள்தான் பேசுகிறார்கள்...

ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி, தூய்மை இந்தியா,  மேக் இந்தியா என்றெல்லாம்...!

அதாவது இவர்கள் மேக் இந்தியா என்பது.. இந்தியா இதுவரை இல்லாதது போலவும், இனிதான் உருவாக்க போவது போலவும் ஓலம் இடுகிறார்கள்!

ஆனால் இவர்கள் சொல்லுவது ... "மேக் இந்தியாவா? "கேக்"இந்தியாவா? "

ஆம்! இந்தியாவை "கேக்" ஆக்கி அந்நிய, இந்திய லலித் மோடி களுக்கு படையல் வைப்பதே நரேந்திர மோடியின் நரித்தந்திரம் என்றால் அது மிகையாகுமா?

திருடனை கொட்டிய அப்பட்டமான முதல் தேள் லலித் மோடி!  தேள்கடி வாங்கிய லேடி சுஷ்மா என்கிற லேடி! இவர்களின் படைத்தளபதி நரேந்திர மோடி!
'யோக்கிய' ஆட்சி!

லலித்மோடிக்கு உதவியது சுஷ்மா மட்டுமா? அருண்ஜெட்லிக்கும், மோடியாருக்கும் "ஒன்றுமே" தெரியாதா?

நம்மூர் ராசா செய்தால், மன்மோகனாருக்குத் தெரியாமல் செய்வாரா? என்பது! இப்பொழுது மட்டும் மோடியாருக்கு பொறுப்பில்லையா?

மனிதாபிமானம் பிஜேபியில் தற்போது கொடிக்கட்டி பறக்குது போலும்!

அன்று 3000 முஸ்லீம் மக்களை குஜராஜ் தில் கொன்று குவிக்கிறபோது மட்டும் மனிதாபிமானம் 'மரணப்படுக்கை'க்கு போனதேன்?

ஆகவே, மாமியாள் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? சுஷ்மா, அருண்ஜெட்லி, யோகா மோடியார் எல்லாரும் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்குப் போகட்டும்!

அப்பத்தான் இது 'யோக்கிய' ஆட்சி!

இன்று 16.6.15 PTTV நேர்பட பேசுக்கு...!

ஸ்சுவாகா"

யோகாவை விளம்பர படுத்துவது... "அரசியல் ஆரோக்கியத்திற்கு!"

ஆம்! ஆர்எஸ்எஸ் சின் இந்துத்துவா அரசியல் ஆரோக்கியம் பெறவே யோகா!

யோகா மறைவில் இந்தியாவை "ஸ்சுவாகா" (முழுங்கி விடுவது) செய்வதே பாஜக வின் "யோகா கலை!"

அந்த 'கலை'யைப் தற்போது 'பிட்டு' போட்டு, நிலம் 'கையகப்படுத்தும்' கலையை கச்சிதமாக திசைத் திருப்பி வருகிறதே... அது...! பார்த்தால் தெரியவில்லையா?

இன்று 16.6.15 PTTV மக்கள் மேடைக்கு..!

Monday 15 June 2015

"டோன்ட்டு ஒரி பீ ஹாப்பி!"

நடிகர் சங்கத்தின்  மீது விஷால், நாசர் புகார் நியாயமானவையா? நியாமற்றதா? என்ற விவாதம் தேவையற்றது!

ஆயிரம் பிரச்சனை இருக்கும்போது  நடிகர்கள் பிரச்சனை எதற்கு? அவர்கள் ஏதாவது மக்கள் பிரச்சனைகளில் என்றாவது இவர்கள் கவலைப்பட்டார்களா? 

இன்று 15.6.15 PTTV நேர்பட பேசு வில் இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இன்று 15.6.15 PTTV நேர்பட பேசுவில் ஜெயமணி, சேகர், பூச்சி முருகன், ரவிசந்திரன், தொலைபேசியில் பொண்வன்னண், விஷால் இவர்களுடன் நெறியாளர் குணசேகரன்...

அனேகமாக நெறியாளர் இந்தளவுக்கு வேறெந்த நிகழ்ச்சியிலும் 'தண்ணி' குடிச்சிப்பாரா? தெரிவில்லை! அந்தளவுக்கு ஜெயமணியும், பூச்சி முருகனும் தண்ணி காட்டி விட்டார்கள்!

என்னமோ நடக்குது; மர்மமா இருக்கிறது; ஒன்னுமே தெரியல; சினிமா உலத்திலே! என்பதுபோல் விவாதம்?! இருந்தது!

ஒரு கட்டத்துல ஜெயமணி பூச்சி முருகனை 'ஒரு தட்டு தட்டிருவாரோ'ன்னுகூட தெரிந்தது; ஆனால் நெறியாளர் குணா உண்மையிலே திறமைசாலி; ஆனா ஒன்னு... குணா அவர்கள் சினிமாதுறைக்கு போனாருன்னு வையுங்க... நல்ல 'ஸ்டென்ட் மாஸ்டர்' ஆகியிடுவாரு! அந்தளவுக்கு இன்று பயிற்சி எடுத்துக்கிட்டாரு!

இனிமே அரசியல்வாதிகள், இந்த சினிமாகாரர்களுக்கிட்டே நிறைய கத்துக்கனும்! அடேசாமி...! குணா அவர்களே உங்களுக்கு ஒரு சபாஷ்! "டோன்ட்டு ஒரி பீ ஹாப்பி!"


அரசு பேருந்தில்
எம்எல்ஏ பயணம்!

உள்ளூரில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகிவிட்டாளே அவர்களின் அட்டகாசத்தை, அழிச்சாட்டியத்தை தாங்க முடியாது!

அப்புறம் பஞ்சாய்த்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் ஆகிய விட்டால் கேட்கவே வேண்டியதில்லை!

அதையும் தாண்டி எம்எல்ஏ., எம்பி., ஆகிவிட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்தான்! இவர்களின் தரினத்திற்காக மக்கள் அவர்களது வீடுகளில் தவம் கிடப்பதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்!

அமைச்சர், முதல் அமைச்சர் தரிசனமெல்லாம் இன்றும் கனவில்தான்; தேர்தல் நடக்கும் 'அந்த ஒரு மாதம்' தவிர!

தற்போது ஆர்கேநகர் இடைத்தேர்தலே இதற்கு சாட்சி! அங்கே ஆளும் கட்சி துறைமார்களின் ஓட்டு வேட்டைகளும், அடக்கமான ஆர்ப்பாட்டமற்ற பிரச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுமான கம்யூனிஸ்ட்களும் பார்த்தாலே தெரியும்!

அப்படியொரு அபூர்வ நிகழ்ச்சி இன்று 15.6.15 சேலத்தில் நடந்தது! இன்று மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாக சேலம் வரும்போது, இன்டர்சிட்டி ரயில்; போகும்போது அரசு பேருந்து!

பல சமயங்களில் நடத்துனர்கள் இவர் எம்எல்ஏ என்றால், நம்ப மாட்டார்கள்! "தமாஷ் பண்ணாதீங்க சார்; எம்எல்ஏ வாது பஸ்ல வரதாவது!" என்பார்!

அதற்கு அவர் சொல்லுவார், " இல்லிங்கோ... நா திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ தங்கவேல்ங்கோ!" என்று சொல்லி, 'பாஸ்' எடுத்துக் காட்டிய பிறகு 'அரையும், குறையுமாக' நம்பி, ஓட்டுனரிடம் சிலாகித்துவிட்டு, அப்புறம் ஒத்துக்கொள்வதை நான் பலமுறை சேலம் பஸ்நிலையத்தில் பார்த்திருக்கிறேன்!

அப்படித்தான் இன்றும் நடந்தது! சத்தியம் பண்ணாத குறையாக நடத்துனரிடம் சொல்லி, பஸ் ஏற்றிவிட்டு வந்துள்ளார் தோழர் என்.பிரவீன்குமார்!

தற்போது திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.தங்கவேல் அரசு பேருந்தில் திருப்பூரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறார்! உடன் தோழர் விகே.வெங்கடாசலம் சங்ககிரி வரை!

அதிசயம்! ஆனால் உண்மை! எளிமையின் வாரிசுகள் கம்யூனிஸ்ட்கள்!

Sunday 14 June 2015

"பேரா தீரன்வாயடைத்துப் போனார்!"

இன்று  15.6.15 புதிய தலைமுறை டிவி புதுப்புது அர்த்தங்களில் சிபிஐ தோழர் வீரப்பாண்டியன், அதிமுக பேரா தீரன், இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்...!

ஆகேநகர் அதிமுகவால் ஆக்கிரமிப்பு குறித்து முவீ., அடுக்கான ஆதாரபூர்வமாக அடுக்கினார்.. பேரா தீரன் 'வழக்கமான எதிர்கட்சி புகார்' என நழுவிவிட்டார். பதிலேதும் கூறாமல் வாயடைத்துப் போனார்.

கூட்டணி ஆட்சி என்பது கொள்கை அடிப்படையிலானதென முவீ., நன்றாக குறிப்பிட்டார். நன்று!

அதிமுக மக்கள் செல்வாக்கு இழந்து வருகிறதென சிபிஐ மாநில செயலாளர் தோழர் முத்தரசன் பேட்டிக்குக் கூட பேரா தீரன்... வழக்கம்போல் மாண்புகு அம்மா, அம்மா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆர்கேநகரில் அமைச்சர்கள் தொகுதியில் இருந்து வெளியேறனும், பணம் பட்டுவாடா நிறுத்தனும் என்று தோழர் முவீ., கடைசி வரை கேட்டுப்பார்த்தார்... !?.

இன்றைய விவாதத்தில் முன்னெப்போதும் இல்லாத 'தர்க்கவாதம்' முவீ., செய்தார்! அதற்கான வாய்ப்பையும் நெறியாளர் ஜென்ராம் அளித்தார்!
மாணவர்களுக்கு எதுக்கு ரசியல்...?

இன்று 14.6.15 புதிய தலைமுறை டிவியில் இரவு 9 மணிக்கு 'உரக்கச் சொல்லுங்கள்' நிகழ்ச்சி ... நெறியாளர் கார்த்திகேயன்... நடுவர்கள் மாணவர் இணையம் பிரிட்டோ...இளம் பேரா ஒருவர், மூத்த பேரா ரங்கராசன், ஏதோ ஒரு நிபுணர் அனந்தகுமார்...
மாணவர்களுக்கு எதுக்கு அரசியல்...?
2 பக்கமும் விவாதம் காரசாரமாகவே போனது! 18 வயதில் ஓட்டுரிமை கொடுத்துவிட்டு மாணவனுக்கு, இளைஞனுக்கு அரசியல் எதுக்கு என்றால் என்ன அர்த்தம் என நன்றாகவே துவங்கி, உணர்ச்சி பிழம்பாகிவிட்டனர் மாணவர்கள்!
அரசியல் வேண்டாம் படிப்புத்தான் வேண்டுமென்று  என்று வாதிட்ட பக்கம் வலுவில்லை; ஒப்புக்கு புளித்துப்போன வாததத்தை வைத்தனர்! ஆனால் நடுவரில் வந்த பெரியவர்கள் சதுரியமாக பேசினர்! அதிலே கொடுமை என்னவென்றால் பெரியவர் பேரா அவரின் உளுத்த வாதத்திற்கு சுபாஷ் சந்திரபோசையும், பகத்சிங்கையும் துணைக்கு அழைத்துதான் பரிதாபமாக இருந்தது!
 
அரசியல் வேண்டாமென்று சொல்லவில்லையாம்.... படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு போறதாம்!
 
கல்வி நிறுவனங்களுக்குள் அரசியல் வேண்டாமாம்! காவி அரசியலை கல்வியில் புகுத்திக்கொண்டு, கல்வி நிலையங்கள்தோறும் கோவில் மாடங்கள் ஆக்கிக் கொண்டு, பேசறாங்க.... பேசு..!
 
சாதி,மத,சமயத்தை வைத்து ஊதி ஊதி பெருச்சாக்கி, அரசியலாக்கி ஆட்சியை பிடித்து விட்டு , இப்ப அரசியல் வேண்டாமாம்!
 
பிரச்சனையே 'ஜெய ஜெய சங்கர' ன்னு பஜனை பாடிகிட்டு இருந்தால் பிரச்சனை இல்லை; பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படித்தது, படிக்கிறதுதான்!
 
ஆனால் அரசியல் வேண்டுமென்று மாணவர்கள் வெளுத்து வாங்கு வாங்குன்னு வாங்கினார்கள்; அதற்கும்...
 
அதற்காக அவகாசம் கொடுத்த நெறியாளருக்கும் நன்றி!




“புறம்போக்கு”

பாலு ஒரு கம்யூனிஸ்ட். குயிலி ஒரு கம்யூனிஸ்ட். பாலு தூக்குத்தண்டனை கைதி. இவரை விடுவிக்க பகிர்த முயற்சியில் குயிலியும், குழுவினரும். எமலிங்கம்... இவர் தூக்கில் போடும் குலத்தொழிலை வெறுத்து வாழ்பவர். மெக்காலே ஒரு கண்டிப்பான ஜெயில் அதிகாரி. இவர்களை சுற்றிய கதை புறம்போக்கு என்கிற பொதுவுடமை!

இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் எப்பொழுதுமே கணமான கதை மட்டுமல்ல, ரிஸ்க் கான கதையையே துணிச்சலாக கையாளுபவர். அப்படித்தான் புறம்போக்கும். இந்த படத்தை பார்த்துவிட்டு வருபவர்களுக்கு முன், இப்படம் அவர்களின் நினைவில் இருந்து டெலிட் ஆகும் வரை, “போடா பொறம்போக்கு” ன்னு யாரையாவது யாராவது திட்டினால், அது அவர் காதில் கேட்டால், அவரிடம் இவர் சண்டைக்கு போய் விடுவார். அந்தளவுக்கு இந்த படம் பொதுவுடமைவாதிகள் மீது நன்மதிப்பை விதைத்திருக்கிறது. அதற்காக ஆயிரம் கோடி நன்றிகள் ‘தோழர்’எஸ்பிஜேக்கு! திரைப்பட வரலாற்றில் இது ஒரு துணிச்சல்மிக்க படைப்பு. ஆம்! கம்யூனிஸ்ட்கள் காலாவதியாகி விட்டார்கள் என எள்ளி நகையாடிக் கொண்டிருக்கும் காலத்தில், இந்த தேசத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு “ராஜமரியாதை” தந்திருக்கும் படம் புறம்போக்கு!

படம் ஒரு இஞ்சு கூட ‘வேஸ்ட்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக அதேசமயத்தில் வீரியமாக செல்கிறது. இதுதான் இயக்குனர் எஸ்பிஜேவின் வெற்றி! காமெடி இல்லை; ஆனால் நையாண்டி இருக்கிறது; காதல் இல்லை; ஆனால் மனிதம் இருக்கிறது; ராஷச சண்டைகள் இல்லை; ஆனால் சாகச காட்சிகள் இருக்கிறது. மாவீரன் பகத்சிங், தூக்குமேடை பாலு (எ) பாலதண்டாயுதம், தானு, செங்கொடி என வரலாற்று ஆளுமைகளின் கதாப்பாத்திரங்கள் கண் முன்னே நிறுத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட்களுக்கும், தமிழ்தேசியவாதிகளுக்கும் ஒரு முடிச்சு போட்டு இருந்தாலும், அழுத்தம் கம்யூனிஸ்ட்களுக்கே!

இந்தளவுக்கு இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு பெருமையை சேர்த்திருக்கும், இப்படி பரந்துப்பட்ட மக்கள் வெளியில் கம்யூனிஸ்ட்களின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திய ஒரு திரைக்காவியம் இதுவரை தமிழக திரைவானில் பறந்திருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. (சிவப்புமல்லி கூட அது சீதனமாகத்தான் பார்க்கப்பட்டது; வர்க்கப் போராக பார்க்கப்படவில்லை). அந்தவகையில் தோழர் எஸ்பிஜே பெருமைக்கு உரியவராகிறார்; அவருக்கு நம் “லால் சலாம்!” உரித்தாகட்டும்.

தூக்குமேடை பாலுவாக ஆர்யா, தூக்குப்போடும் தொழிலாளியாக விஜய்சேதுபதி, தூக்குமேடை அதிகாரியாக ஷாம், பாலுவை காப்பாற்றும் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராக கார்த்திகா... எல்லோரும் இளம் நாயகர்கள். இவர்களுடன் ஒரு ராஷச சிறைச்சாலையில் கைதிகள், காவலர்கள் என ஒரு புரட்சி காவியத்தையே பார்ப்போர் மனதில் முகச்சுளிவின்றி விதைத்து விடுகிறது புறம்போக்கு; இது நிச்சயம் வேர்விடும்; விழுதாகும்! அதற்கு சாட்சி இடைவேளையை தவிர மற்ற நேரங்களில் யாரும் திரையரங்கில் ‘வெளிநடப்போ, வெளியே இருந்து ஆதரவோ’ செய்யவில்லையே! இவ்வளவு கணமான கதையை அதுவும் கம்யூனிஸ்ட்களின் தேசபக்தியை அவர்தம் வாழ்க்கையை இமைக்கொட்டாமல், “புறம்போக்கை” பார்த்திடும் ரகசியம் என்ன? நினைத்து நினைத்து பார்க்கிறேன்; ஆம்! அதில் தமிழ்மண்ணின் வாசனையும் கலந்துள்ளதே அதன் ரகசியம்!

“இந்தியா குப்பைத்தொட்டி அல்ல” இது எவ்வளவு பெரிய முழக்கம்? இதை இன்று முழங்குபவர் யார்? கம்யூனிஸ்ட்கள்! பஞ்சம் தலைவிரித்தாடுகிறது; ஆனால் உணவு பதுக்கலை அரசே செய்கிறது; அந்த பதுக்கலை ஒழிக்க பாடுபடுவது யார்? கம்யூனிஸ்ட்கள்! இன ஒதுக்கல் நடக்கிறது; அதை எதிர்ப்பவர் யார்? கம்யூனிஸ்ட்கள்! இப்படியான விடயங்களின் முடிச்சுக்களை அல்லவா அவிழ்கிறது புறம்போக்கு.

ராஜஸ்தான் பாலைவனத்தில் உணவு ரயிலை கடத்தி, அதன் பொருட்களை பஞ்சத்தில் வாழுவோர்களுக்கு பகிர்ந்தளிக்கும் கம்யூனிஸ்ட்கள்... நாடு ராணுவ மயமாவதை எதிர்த்து மனித வெடிகுண்டாக மாறும் கம்யூனிஸ்ட்கள்... வெளிநாட்டு கைதிகள் துணையுடன் பாலு சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சி... ஆனாலும் மனம் தளராது தூக்குக்கயிறை முத்தமிடுவது... தூக்கில் போடாதே; துட்டுத்தள்ளி என்று கர்ஜிப்பது... இன்றைய விஞ்ஞான தொழிற் நுட்பத்தை அப்-டேட் செய்வது... இப்படி ஏராளமான பிரமிக்க வைக்கும் காட்சிகள்! மிக பெரிய தேசபக்த யுத்தக்களத்தில் இருந்து வந்தது போன்ற உணர்வு இன்னும் நீக்கா நிலையில்! ஆம்! இனி, ஜனநாதனுக்கு நிகர் ஜனநாதனே! தோழர் ஜனநாதன் ஜனங்களின் நாதமே என்றால் மிகையல்ல.

ஒன்றிரண்டு ஊனங்கள் யதார்த்தத்தைத் தாண்டி இருக்கவே செய்கிறது. குறிப்பாக தமிழ் தேசியத்தையும், கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்கும் ஒரு பாங்கு வெளிபடுகிறது; இரு அமைப்புகளின் பணிகளும் ஒரு நேர் கோட்டுக்கு கொண்டுவரும் முயற்சி தெரிகிறது; இருந்தாலும்... புறம்போக்கு போற்றிடவே வேண்டும். பாடல்கள் இதம்; மெரினா பாடல் டாப்! பின்னணி இசை பின்னி எடுக்கிறது; படத்துக்கு இசையும், காட்சி அமைப்பும், காமிராவும் என அனைத்து தொழிற் நுட்பங்களும் உறுதுணையே! கோர்ட் காட்சி, ஜெயில் காட்சிகளில் வரும் உரையாடல் இன்றைய தமிழக சூழலைக்கு பொருந்துவதாக இருப்பதுதான் ஆச்சிரியம். புறம்போக்கு என்கிற பொதுவுடமை நம் காலத்தின் கண்ணாடி! 

தோழர் எஸ்பிஜே உள்ளிட்ட அந்த புறம்போக்கு டீம் க்கும் எழுந்து நின்று தருவோம் ஒரு நூறு “லால்சலாம்!”
-பி.தங்கவேலு


Saturday 13 June 2015


“இருட்டைத் தின்றவர்கள்!”

‘இலாவி’ என அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர் இலா.வின்சென்ட் அவர்களின் இரண்டாம் தொகுப்பு “இருட்டைத் தின்றவர்கள்” என்கிற சிறுகதைத் தொகுப்பு இது! இவர் தமுஎகசவின் சேலம் மாவட்ட கௌரவத் தலைவரும்கூட! ஓய்வு பெற்ற ஆசிரியப்பெருந்தகை! பனிரென்டு கதைகள் நூற்று இருபத்தேழு பக்கங்களில் வந்துள்ளது. பனிரென்டு கதைகளும் இடர்பாடற்ற, சலிப்பற்ற வாசிப்பில் வெற்றி பெறுகிறது! ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்! 

முதல் கதை அய்ம்பதுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, குறிப்பாகச் சேலம் சிறைச் சாலையில் நேர்ந்த கொடூரத்தை, உதிரம் கொப்பளிக்கப் பேசுகிறது ‘விதைகள் உறங்காது’ கதை தியாகிகளுக்கு நினைவாஞ்சலிபோல்! ‘இருட்டைத் தின்றவர்கள்’ கதை பிரபல அரசியல் கட்சியின் ‘நாடே கேளு; ஊரே கேளு’ என்று நாறிப்போன மறைந்த சேலத்துத் தலைவரின் (?) அராஜகத்தை மிக தைரியமாகப் பேசுகிறது; இன்றைக்கு அப்படி பேசமுடியுமா? சாத்தியமா? தெரியவில்லை! எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோருக்கு தற்சமயம் நேர்ந்த ‘கதி’யை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன். அவ்வளவு அனல் தகிக்கிறது அந்தக்கதையில்! 

“...காக்கிச்சட்டையையும், பேண்ட்டையும் கழற்றிவிட்டு, வெறும் ஜட்டியோடு அவன் இறங்கி னான் குழியில்! பல வண்டலை மிதித்ததும் ஒரு அருவருப்பு கலந்த சூடு அவன் நரம்புக்குள் பாய்ந்தது!” இது மருந்து கதையின் நாயகன் உணர்வுநிலை! இதனால் வந்த வினையைப் பாருங்கள்... “அய்யோ...அம்மா.. அலறல்! பயங்கரமான அலறல்! நூறு கடப்பாரைகள் விரைக்குள் நுழைந்து உயிரை எடுப்பதுபோல் வலி!” இந்த வலிக்கு மருந்து யார்? எது? என்பதே ‘மருந்து’ கதை. மட்டுமல்ல “குலத்தொழிலைக் குழித்தோண்டி புதை” எனச் சமூகத்தின்மீது பளாரென ஒரு அறை! மதம்... எந்த மதமாக இருந்தாலும், வாழ்க்கைப்பாடு என்னவோ ஒன்றுதான்; சுரண்டலின் முகம் ஒன்றுதான்! இந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில்! என்பதன் பதிவுகளே... ‘இலக்கணம் மாறுதோ’ ‘விசாரணை கூண்டு’ ‘என்று தணியும்’ கதைகள். 

இதிலே வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பது... தண்ணீர் கொள்ளையைப் பற்றிய ‘ஒரு முக்கிய அறிவிப்பு’ கதை. இந்து-முஸ்லீம் சோதரர் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மண்கரடு’ கதை. வாழும் மனிதர்களின் வக்கிரங்களைப் பேசும் ‘கைநழுவி போனது’ ‘சிறப்பு விருந்தினர்’ கதைகள். ‘சிறப்பு விருந்தினர்’ கதையில், “...கத்தியின் கூரைவிட சகோரிதரிக்கு மிகுந்த வேதனையைத் தந்தது கூடி நின்றவர்களின் மௌனமே” எனக் கொடுமையை கண்டு கொதித்தெழாதக்கோரத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, அடுத்து இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து, தாக்கியவர்களை மோதி மிதிப்பது போல் வருவதும், அதற்கு முன் தாக்குதலுக்கு ஆளான சகோதரி ‘யேசுவே யேசுவே என ஜெபித் திருக்கவேண்டும்” என்பதும் கொஞ்சம் நெருடல்! வித்தியாசமான தளத்தில், மாற்றுத் திறனாளி பற்றிய பதிவாக ‘இன்னதென்று அறியாமலே’ கதை; இது சமுதாயத்தின் மீது ஒரு சாட்டையடியே! 

இந்தக் கதைகளின் மாந்தர்களோடு ஏதாவதொரு தளத்தில் பயணிப்பதுபோல் உணர்வில்... நான் மட்டுமல்ல, வாசித்த பின் நீங்களும்தான்! அதுதான் இவற்றிலுள்ள ஈர்ப்பு! இந்தக் கதைகள் எதைப் பேசுகிறதோ அது, அத்தனை உழைப்பாளிகளின் பாடுப்பொருளாக அமைந்திருப்பதுதான் மிகுந்த சிறப்பு! நியாயம், நீதி, நேர்மை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கீதங்கள் தமிழ் மண்ணில் ஒலிக்கவேண்டுமென எண்ணுகிறவர்களை ‘இருட்டைத் தின்றவர்கள்’ கதை தொகுப்பு நிச்சயம் கவரும்; பிடித்திழுக்கும்! மூத்த தோழர் பொன்னீலன் வார்த்தைகளில்... “எல்லாமே அன்றாட வாழ்க்கைப்பாடுகள்; சமூக வாழ்வின் நுட்பங்களின் சித்தரிப்பு; மிக யதார்த்தம்!”

முகப்பு அட்டை முதல் எல்லாமே அருமையான வடிவமைப்பு; பிழைகளற்ற அச்சேற்றம்! தமிழ் எழுத்துலக ‘ஆளுமை’களான பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அணிந்துரைகள்! தமிழகத்தின் தலைச்சிறந்த பதிப்பகமான பாரதி புத்தகாலயம் வெளியிடல்! எல்லாம் ஒருங்கே அமைந்த கதை தொகுப்பு ‘இருட்டைத் திருடியவர்கள்!
விலை ரூ90. தொடர்புக்கு:94437 1435. 
-பி.தங்கவேலு

இன்று (14.06.2015) தீக்கதிர் "புத்தக மேஜை"யில் இது வெளியிடப்பட்டுள்ளது; நன்றி!



"நாதனின் வாததத்தில் 'இடதுநாதம்' இல்லையே!"

நான் இது வரை வந்துள்ள கருத்துக்களை (ஆங்கிலம் தவிர்த்து) இப்பொழுது தான் படித்தேன்.
நாதனின் நாதத்திற்கு லைக் போட்டு விட்டு தான் மேலே எனது கருத்தை பதிந்தேன்!

'தலையை' பார்த்து இனி லைக் போடமாட்டேன்!

ஒரு விவாதம் என்கிற ரீதியில் சரி!

ஆனால் விவாதத்திற்கு யார்... யாருடைய கருத்து காரணம்... அவரின் அறிவுசார் பின்னணி என்னபதே அவசியம்; முக்கியம்!
ஒரு வலதுசாரி மனோபாவம் உள்ளவர் இதை கிளப்பி இருந்தால்.... எந்தவித கேட்டுக்கேள்வியும் கிடையாது. ஆனால், ஒரு இடதுசாரி சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் இப்படிப்பட்ட பதிவு வருகிறபோதுதான் வினா எழுகிறது! 

நாதன் அவர்கள் இடையிடையே பதிவிடுகிறார்... "நக்கலில்லை; நன்றாக படியுங்கள்" என்கிறார்! 'ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில்தான் படிக்க வேண்டுமென்பவர்கள், அரசு பேருந்து ஊழியர்கள் அரசு பேருந்துகளில்தான் பயணிக்க வேண்டுமென்பார்களோ? '

இதில் இருந்து அவர் சொல்லுவதுபோல் நிதானமாக யோசித்தால்... அவரும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம்; இவரும் தனியார் பேருந்தில் பயணிக்கலாம்! அதாவது அதுவும், இதுவும் இருக்கட்டும்! எது வேண்டுமோ எடுத்துக்கிட்டும்! அப்படித்தானே!

அதாவது எலியும் இருக்கட்டும்; பூனையும் இருக்கட்டும்!

அப்படி என்றால் பூனையிடம் இருந்து எலியைக் காப்பதெப்படி? இதுதான் அடிப்படை வினா?

அதை விடுத்து...  "அடிப்படை வசதியில்லை; அதுஇல்லை; இது இல்லை; டாக்டர் குடும்பம் அங்கு போகுமா? இங்குபோகுமா? " இதெல்லாம் திசை திருப்பல்!

நாதன் அவர்களின் வாதத்தில் அடிப்படையில் இடதுநாதமில்லை! அவ்வளவே! அருள்கூர்ந்து நாதனின் நாதத்தில் ஏற்பட்ட சிறு நாதப்பிறழ்வை சரிசெய்துக் கொள்ளலாமே என்பதே என் வாதம்!
இன்று 14.6.15 வலை தளத்தில் தோழர் நாறும்பூ நாதன் அவர்களுக்கு  பதிவிட்டது..!
 "3 அறிவு சுரபிகள் அலசல்...!"
இன்று 14.6.15 புதிய தலைமுறையில் 3 அறிவு சுரபிகள் அலசல்... அருணன், சுபவீ ., ஜென்ராம்... உள்ளம் ரெண்டு ஒன்று; உருவம் மட்டும் வேறு...! என்பது போல் உரையாடல் சென்றது நன்றாக இருந்தது; அது இதமாகவும் சென்றது!

ஆர்எஸ்எஸ் தடை குறித்த கட்டுரையில் இணைந்த கைகள் ஆர்கேநகர் தொகுதியில் லேசான கடி... ஆம் பூனை தன் குட்டியை கவ்வுவதுபோல் அருணன் சுபவீ., க்குள் ஏற்பட்டது.

ஜென்ராமும் கூட திமுக அதிமுக வுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட்கள் இருக்க வேண்டும் என்பது போல் பல சமயங்களில் தர்க்கம் செய்ததைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் இன்று அனைத்து கட்சிகளின் குறிப்பாக திமுக ஆதரவையும் கேட்கலாமே; அதனால் என்ன பாதிப்பு? இந்த இறுக்கம் தேவையா? என்பது போன்ற அர்த்தம் தொணிக்கும் கருத்தோட்டத்தைக் காண முடிந்தது அவரிடம் இன்று!

ஆனாலும் தோழர் அருணனின் ஆணித்தரமானவாதம் அருமை!

சுபவீ., கூட தளி ராமசந்திரனை சுட்டியதன் மூலம் என்ன சொல்ல வந்தார்... வருகிறார் என்பது புதிராக இருந்தது; 'ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்' என்கிறாரோ? 2ஜி அலைக் கற்றையும் இன்னும் பல வழக்குகளும்... ராமசந்திரன் மீதானதும் ஒன்றா? என்று நன்றாக மறுத்தார் அருணன்! சபாஷ்!

இறுதியாக சுபவீ.,  "நான் தவறாக சொல்ல வில்லை; எனது ஆதங்கம்... பதிவு செய்தேன்" என்றது (திமுகவிடம் ஆதரவு கோரல்) இதமான பதமே!

நேற்று அக்னி பரிட்சையில் வீணான நேரம்... இதில் சமன் செய்யப்பட்டு விட்டது!
"நெல்லையாரின் நெகிழ்வு!" 
ஆம்! அந்த நண்பர் பெயர் எனக்கு நினைவில் இல்லாமல் போனது வருத்தமே! கிழி கிழி ன்னு கிழிக்க மட்டும் செய்யவில்லை; மிதி மிதின்னு மிதித்து துவைத்துவிட்டார்!

அதிமுக சமரசம் முழிமுழின்னு முழித்து விட்டார்! நெறியாளரும் பிடிபிடின்னு பிடித்து விட்டார்!

கம்யூனிஸ்ட்களை  நெல்லையார் நெகிழ வைத்துவிட்டார் போங்கள்!

அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட எனது கருத்தும் இதோ.... 

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களே திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக தேமுதிக போன்ற கட்சிகளின் (கம்யூனிஸ்ட்களை தவிர) தாதாக்கள்தான்! இவர்களா கட்டுப்படுத்தப் போகிறார்கள்?

இன்று 12.5.15 தற்போது PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.