Sunday, 25 October 2015

எது தேவை: 
மநுநீதியா? மார்க்சியமா?
✨✨✨✨❇🌟❇❇❇🌌🌌🌌🌌🌌✴✴ 
வலைதள நண்பர் ஒருவரின் " மநுவை கொளுத்துவோம்" என்ற பதிவுக்கு "மனுநீதி என்றால், மானுடம் உய்யும் நீதி; அது ஏன் கொளுத்த வேண்டும் என்று பதிவிட்ட இன்னொரு நண்பருக்கு என் எளிய பதிவு இது! சரியா? எப்படி இருக்கு?

மனு அல்ல மநு; மானுடம்... நீதி என்றெல்லாம் கப்ஸா வேண்டாம்! மநு என்பவன் மனிதரை 4 நிறங்களாக பிரித்து வைத்தான்;  அந்த நிற பேதத்தைத்தான் கொளுத்துவோம்! மனிதரை அல்ல! அந்த 4 (பிராமணன், வைசியன், சத்ரியன், சூத்திரன்) நிறங்களோடு இன்னொரு நிறத்தையும் (பஞ்சமன்) என்று 5 நிறம் (அடையாளம்) வேண்டாம் என்பதே மார்க்சீய அணுகுமுறை! 

மனிதர் என்ற ஒற்றை அடையாளத்தில் உள்ள ஏழை, பணக்காரன் அதாவது சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற பேதத்தை ஒழிப்பதைத் தடுப்பதே அந்த 5 நிறம் என்பது! மனிதர் சமநிலை அடைய வேண்டுமென்றால்...

ஆம், மேடு-பள்ளம் இவற்றை சமம் படுத்த வேண்டுமென்றால், மேட்டை உடைத்து, பள்ளத்தில் போடு என்பது மார்க்சீயம்; இல்லை இல்லை பள்ளத்தைத் தோண்டி மேட்டில் போடு என்பது முதலாளி தத்துவம்; அதிலே... முதல் நிறத்தவனுக்கு  (பிராமணன்) போடு என்பது மநுநீதி. இப்பொழுது புரிகிறதா? மநுநீதி! சொல்லுங்கள் நம் நாட்டுக்கு தேவை எது மார்க்சீயமா? மநுநீதியா?

----\\\\

கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கோகுலகண்ணன் லாக்அப் மர்டர்!
மாநில மனித உரிமை ஆணையம் முன் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
இன்று 20.10.15 சேலத்தில் சாட்சியம்!
???????///////????///??///////?????///

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கடந்த 5.7.15 இரவு விசாரனைக்கு அழைத்து சென்ற நடேசன் மகன் கோகுலகண்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் அடித்து, உதைத்து, கால்களை உயிர்நாடி பகுதியில் பிளந்து கொன்று விட்டனர். இதை மறைக்க ரூ12 லட்சம் குடும்பத்தாரிடம் கட்டபஞ்சாய்த்து பேசி கொலையை மூடி மறைத்து விட்டனர்.

ஆனால் சிபிஐஎம் சார்பில் மக்களைத் திரட்டி போராடியதோடு, மாநில மனித உரிமை ஆணையத்திற்கு , கோகுலகண்ணன் கொலைக்கு காரணமானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாய்து செய்து மூடி மறைத்த காவல் உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தரப்பட்டது. 

அதனை விசாரிக்க சேலம் வந்திருந்த மனித உரிமை ஆணைத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு சாட்சியம் அளித்தார். அதன் நகல் இத்துடன் உள்ளது. விசாரணையின் போது, கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், வழக்குரைஞர் எம்.வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். 

காவல்துறையால் காவல் நிலையத்தில் கொலைச்செய்யப்பட்ட கோகுலகண்ணன் உறவினர்களை காவல்துறையினர் பலத்தப்பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-----\\\\

விலைவாசி உயர்வுக்கு காரணம் மூன்றுமேதான்! 

விலைவாசி உயர்வுக்கு காரணம் மூன்றுமேதான்! 

மத்திய அரசு அதானி பிடியில்! அதானியிடம் நாட்டின் தேவையில் 40% பருப்பு "பத்திரமாக" பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாம்!

மாநில அரசு சசிகலா வகையறாக்கள் மடியில்! 40ரூ பருப்பை 210ரூ க்கு கொண்டு போய்விட்டு, 110ரூ (அது என்ன 110?; எங்கும் எதிலும் 110தோ?) க்கு ரேசன் கடையில் போடுறாங்களாம்!

(ஏன், அம்மா பருப்புக்கடை கொடைநாட்டில் இருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் திறக்கலாமே!) 

வணிகர்களுக்கும் இது ஒரு வாய்ப்புதானே; முடிந்த மட்டும் விலையேற்றி விற்பதற்கு இரு ஒரு தருணம்!

நேற்று ஒரு சிறு ஓட்டலில் சாப்பிட போனபோது, இட்லி என்னமோ குஷ்பு இட்லிதான்; ஆனால் பருப்பு சாம்பாருக்குப்பதில் பருப்பு ரசம் ஊத்தினார்கள்; அது ஓடி வந்து என் மடிமீது படுத்துக்கொண்டது! 

ஓமலூர் காமலாபுரம் கடைக்காரர் சொன்னார்..."சாரி சார்!" ஆம், என் மடியில் விழுந்ததும் 'சாருதான்; பருப்புச்சாரு!'

இன்று 20.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

அமைதியை கெடுப்பதே சங் பரிவாரம்தான்!

காஷ்மீர் எம்எல்ஏ மீது மை ஊற்றப்பட்டதும், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவின் வன்முறை போக்கும், தனித்து பார்க்க முடியாது! 

இந்த இரண்டு நிகழ்வுமே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்! 

இது இந்துத்வா அமைப்புகளின் அத்துமீறல்; இதற்கு வெறும் எச்சரிக்கை எந்தவித பயனும் தராது; நடவடிக்கைதான் தேவை!

ஆனால் அதை அருண்ஜெட்லியால் செய்யமுடியாது! அவரது பேச்சு சும்மா! 

அமைதியை கெடுப்பதே சங் பரிவாரம்தான்! அதன் பிரதிநிதி அருண்ஜெட்லியா நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

இன்று 20.10.15 PTTV நேர்படபேசுவில் இதன்ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----
இன்று 20.10.15 PTTV நேர்பட பேசு வில், மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, காங்கிரஸ் கோபண்ணா, பாஜக சுப்ரமணிய பாலாஜி, சிவசேனா ராதாகிருஷ்ணன், இவர்களுடன் நெறியாளர் தியாகச்செம்மல்..!

காஷ்மீர், மகாராஷ்ராவில் இந்துத்வா வெறி குறிப்பாக காஷ்மீர் எம்எல்ஏ மீது மைவீச்சு, பாக்கிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எதிர்ப்பு கணை வீசும் சிவசேனா போக்கை எதிர்த்து பேசியபோது... இந்துக்கு எதிராக, இந்துத்வாவுக்கு எதிராக, இந்துஸ்த்தானுக்கு எதிராக யார் பேசினாலும், அது ஞானியாக இருந்தாலும் மைவீசுவோம் என சிவசேனா ராதாகிருஷ்ணன் மிரட்டியது மிகவும் கண்டிக்க தக்கது. நெறியாளர் அனுமதிக்க முடியாது என்று நிலைமையை அமைதியாக்கியது பாராட்டுக்குரியது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை மாநில பிரச்சனையாக இருந்தாலும், மத்திய ஆட்சியாளர்கள் மத அடிப்படை பேசி தூண்டுவது ஏன்? என்றும், சிவசேனாவும், பாஜகவும் அடிப்படையில் ஒன்றுதான் என்றும் அம்பலபடுத்தியது அருமை; பாராட்டுக்குரியது! ஆனாலும், இன்று வந்த பாஜக, சிவசேனா காரர்கள் திமிராகத்தான் பேசினார்கள்; மதவாதவெறியை தூண்டியே பேசியது கொடுமைமிக்கது; மீண்டும் கண்டிக்கத்தக்கது! 

முஸ்லீம், கிருத்துவர் நல்லவர்கள்தான்; அவர்களுக்கு ஒரு 10 வருசத்திற்கு ஓட்டு இல்லையின்னு சொன்னா போதும் இவங்க (சிவசேனா, பாஜக அல்லாத கட்சிகள்) அடங்கிருவாங்க; கிரிக்கெட் (பாக்-இந்தியா) விளையாட விடமாட்டோம என வாய்யைத் திறந்தாலே வன்முறையாக பேசினார் சிவசேனா ராதாகிருஷ்ணன்; நெறியாளரை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை; நிகழ்ச்சியும் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னரே முடிக்க பட்டுவிட்டது! சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது புதிய தலைமுறை இன்று என்றே தோன்றியது எனக்கு!

-----\\\\

இதுவும் ஆக்கிரமிப்பே..!

இதுவும் ஆக்கிரமிப்பே..!
ஆக்கிரமிப்பு என்பது ஆயுதங்கள் சகிதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல; ஒரு மாயையை உருவாக்கி, உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் தாக்குதலும் ஆக்கிரமிப்புத்தான். உண்மையில், இதை உளவியல் போர் என்று சொல்லலாம். கனடிய பேராசிரியர் மார்ஷல்மெக் லூகான் ஊடகங்களின் இப்படியான செயல்பாட்டைத்தான் கூறுகிறார்-- "முதலில் நாம் கருவியை வடிவமைக்கிறோம்; பின்னர், கருவி நம்மை வடிவமைக்கிறது."
(இன்று 21.10.15 தமிழ் இந்து: சமஸ்)

----\\\\

சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு உறுப்பினர்
ஐ.ஞானசௌந்தரியைத்  தாக்கியவர் மீது நடவடிக்கை எடு!
சேலம் மாநகர காவல் ஆணையரிடம் 
சிபிஐஎம் வலியுறுத்தல்!

சேலம் மாநகரம் திருவாக்கவுண்டனூர் அம்மாசி நகரில் வசிப்பவர் தோழர் ஐ.ஞானசௌந்தரி. இவர் எங்கள் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத்தலைவரும் ஆவார். 
இவர் அப்பகுதியில் வசிக்கும் கணேசன்-கண்மணி ஆகியோர் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து, கண்மணியை திருமணம் செய்திட கணேசன் மறுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்னுக்கு உதவிடும் பொருட்டு, கடந்த 15.10.15ஆம் தேதியன்று மதியம் 2 அளவில் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது மேற்படி கணேசன் என்பவர் ஆட்டோவில் சிலருடன் வந்து தோழர் ஐ.ஞானசௌந்திரி அவர்களை காவல் நிலையம் முன் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ஓடிவிட்டனர்; மேலும் அன்றே அவரின் வீட்டுக்குச் சென்று அவரது மகனையும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து 15.10.2015 அன்று சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

இவர் எங்கள் கட்சியின், அமைப்பின் முக்கியத்தலைவர். சம்மந்தப்பட்ட கணேசன் என்பவர் தொடர்ந்து அடியாட்களை வைத்து இவரை மிரட்டி வருகிறார். எனவே இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக சம்மந்தப்பட்ட கணேசனை கைது செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவும், மேற்படி எங்கள் தோழரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுத்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

சிபிஐஎம் மாவட்டக்குழுச் சார்பில், சேலம் மாநகர ஆணையர் திரு.அமல்ராஜ் ஐபிஎஸ்., அவர்களிடம் மாவட்டக்குழுச்செயலாளர் பி.தங்கவேலு, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல் ஆகியோர் நேரில் இன்று (21.10.2015இல்) சந்தித்து விண்ணப்பம் தந்து பேசினர். மாநகர காவல் ஆணையரும் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

-----\\\\\

"மாவட்டம்" "மாநிலம்" என்ற குரூப் 
கலைக்கப்பட்டு விட்டது!

தோழர்களே, வணக்கம்! 

என்னிடம் வாட்ஸ்அப் இணைப்பில் உள்ள சிலரை விடுத்து, பலரை உள்ளூர் (வெண்மணி), வெளியூர் (தாரைப்பிதா) என 2 குரூப் உருவாக்கி உள்ளேன். 

இதில் இருப்போர் குறிப்பிட்ட கட்சியை மட்டும் சார்ந்தோர் அல்லர்;
பலரும் உள்ளனர்! 

ஆரோக்கியமான பகிர்வுக்கு மட்டுமே இது; 

இது, சுமையாக கருதுவோர் எந்த நேரத்திலும் வெளியேறிக் கொள்ளலாம்! 

வருத்தம் ஏதும் கிடையாது! 

நேற்று முதல்... 
20.10.15 இவை செயல்படுகிறது; 

ஏற்கனவே நான் உருவாக்கி இருந்த "மாவட்டம்" "மாநிலம்" என்ற குரூப் கலைக்கப்பட்டு விட்டது! நன்றி!

-----\\\\

ரமேஷ் பேச்சு தேவையற்ற ஒன்று

ரமேஷ் பேச்சு தேவையற்ற ஒன்று; பாஜக அரசின் மதவாத அரசியல், பன்னாட்டு சுரண்டல் எதிராக போராடுவதற்கான வழியை தேடுவதை விட்டுவிட்டு,  60 வயது ஓய்வு என்பதெல்லாம் வீண் பேச்சு; மட்டும் அல்ல, திசைத்திருப்பலும்கூட!

இன்று 21.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

(இந்த நிகழ்ச்சியின் மூத்த ஆசிரியர் வேங்கடபிரகாஷ் ...

திமுக அப்பாவு வடகொரியாவை உதாரணத்திற்கு குறிப்பிட்டார்;  உடனே வேங்கட பிரகாஷ் "அந்த காட்டாட்சியையா சொல்கிறீர்கள்" என்றார் பாருங்கள்;  அவருக்கு என்ன ஆனதென்று நினைக்கத் தோன்றுகிறது; சோசலிச ஆட்சியை காட்டாட்சி என்கிறாரே; ஏனென்று விளங்கவில்லை. 

ஞானியின் வாதம் இந்த விசயத்தில் அபத்தமானதாக தெரிகிறது; 

இடதுசாரிகளை பொறுத்தமட்டில் நம் நாட்டில் தலைமையில் இருக்கிறார் சுமார் 40% பேர்; வேறெந்த கட்சியிலும் இவ்வளவு கிடையாது; மட்டுமல்ல பதவி மோகம் கொண்டவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள் என்பதை காஸ்ட்ரோ, சாவோஸ், ஜோதிபாசு, அச்சுதானந்தன் உள்ளிட்டோரை நேயர்கள் குறிப்பிட்டனர்; 

வேங்கடபிரகாஷ்க்கு அதுவே போதுமென நினைக்கிறோம்! இந்த தலைப்பே வேலையற்றவர்களின் வேலை; ஒருவேளை அது காங்கிரஸ்க்கு தேவையாக இருக்கலாம்)

----\\\\

நிச்சயம் சர்வதேச விசாரணை வேண்டும்

இலங்கை போர் குற்றம் நடந்திருக்கிறது என்பதை உள்நாட்டு விசாரணையே உறுதிப்படுத்திறதென்றால், நிச்சயம் சர்வதேச விசாரணை வேண்டும். அதற்கு இந்தியாவை தவிர வேறு யாராலும் நிர்பந்தம் தர முடியாது! அந்த நிர்பந்தம் தமிழகத்தில் தான் முளையிட்டாக வேண்டும்!

இன்று 21.10.15 PTTV நேர்படபேசு வில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

(இலங்கை எம்பி ஸ்ரீதரன், பாஜக வானதி, காங்கிரஸ் நாராயணன், தியாகு, மே11 காந்தி, இவர்களுடன் கார்த்திகைச்செல்வன்... ஸ்ரீதரன் மோடி எங்களின் எதிர்ப்பார்ப்பு ஈடேறவில்லை என்கிற அர்த்தம் தொணிக்க கூறியது குறிப்பிடத்தக்கது; சர்வதேச விசாரணை தேவை என்றே பேசினார்.

அமெரிக்கை நாராயணன் மற்றும் வானதி ஆகியோர் எதோ உலறி வைத்தனர்; ஆனால் நாராயணன் விடுதலைபுலி மீதும் குற்றசாட்டு வைத்தது ஏன்? மே 11 காந்தி இதுமாதிரி அறிக்கை வீண் என்பதுபோல் பேசினார். தியாகு ஏற்கனவே பல சமயங்களில் பேசியதையே பேசினார்)

-----\\\\

நிரந்தரத் தீர்வாக..!

இன்று 21.10.15 NEWS 7 கேள்வி ? நிகழ்ச்சி தற்செயலாக பார்க்க நேர்ந்தது. பொருளாதார பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேய்யா, வங்கி அமைப்பு வெங்கடாசலம், கல்வியாளர் மாலதி, ஆய்வாளர் பெருமாள் (இவர் இதற்காக மதுரையில் இருந்து விமானத்தில் வந்தாராம்!) இவர்களுடன் நெறியாளர் செந்தில்..!

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி எல்லாருக்கும் கைவசப்பட என்ன செய்வதென்பதே கேள்வி ?  இட ஒதுக்கீடு ஒரு பெரும் காரணியே என்றாலும், அது தற்காலிக ஏற்பாடுதான்! நிலசீர்திருத்தம் மற்றும் மக்கள் நலன்சார்ந்த பொருளாதார மேம்பாடுதான் நிரந்தரத் தீர்வாக இருக்குமென்ற அர்த்தத்தில்  ஆத்ரேய்யா வாதிட்டார். நன்று!

வெங்கடாசலம் இட ஒதுக்கீட்டால் பொருளாதாரம் சீர்கெடுகிறது என்ற அர்த்தத்திலும், இட ஒதுக்கீட்டால் ஒரு உடைக்கு மறு உடை இல்லாதவர் கோடீஸ்வர் ஆகியதைப் பார்த்த ஜாட், பட்டேல் போன்ற சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராடுவதாக பெருமாள் மணியும் வாதிட்டனர். கல்வியாளர் மாலதி வாதத்தை கவனிக்க முடியவில்லை. 

கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம்  போன்றவைகளில் எளியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் வகையில் அரசுகளின் போக்கு இருக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் நெறியாளர் செந்தில் பேசி முடித்தது ஆரோக்கியமே! கூச்சலில்லாமல் நிகழ்ச்சி போனது! நன்று!

----\\\\

சைத்தான் வேதம் ஓதுவது போல்தான்!

சங்பரிவாரான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு அலச்சியமானது மட்டுமல்ல, சைத்தான் வேதம் ஓதுவது போல்தான்!

நாட்டின் அனைத்துவிதமான ஜாதிய-மத சிறுபான்மையினர் வாழ்வு அச்சுறுத்தல்களுக்கும், படுகொலைகளுக்கும் காரணமே ஆர்எஸ்எஸ் சின் இந்துத்வாவின் கொள்கைகளே காரணம்!

உலகில் இந்தியாவின் மதிப்பு குறைந்து போவாதென பகவத் கூறிகிறார் என்றால், அதற்கு காரணம் அவரின் சீடர் மோடியும்தான்!

இன்று 22.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

(ராமசுப்ரமணியன் பாஜக;  'சிபிஐஎம் பேசுவதற்கு யோகியதை கிடையாது' என "நாய்போல் குரைத்து" தனது கம்யூனிச எதிர்பைக் கக்கினார்).

-----\\\\\

பருப்புவிலை உயர்வுக்கு..!

பருப்புவிலை உயர்வுக்கு பதுக்கலும், மத்திய-மாநில அரசுகளின் பதுக்கலுக்கு ஆதரவான கொள்கைகளும்தான்!

இந்த பதுக்கல் கொள்கையில் இடதுசாரி கட்சிகள் தவிர மற்ற காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கொள்கை ஒன்றுதான்! 

இவர்கள் பருப்பு விலை உயர்வைப் பற்றி தற்போது பேசுவது அரசியலே தவிர அக்கரையில் அல்ல! 

பதுக்கலுக்கு ஆதரவான கொள்கைகளை வைத்துக் கொண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராக பேசுவது மக்களை ஏமாற்றுவதற்கு சமம்! 

இன்று 22.10.15 PTTV நேர்படபேசு வில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\\

சேலத்திலேயே ரூ10 கோடி..!

சேலத்திலேயே ரூ10 கோடியில ஆர்எஸ்எஸ் க்கு அலுவலகம் என்றால், இவர்களின் நாடு முழுவதுமான 'சொத்து' எவ்வளவு இருக்கும்? இவர்களின் 'வேர்கள்' எந்தளவுக்கு 'ஊடுருவி' இருக்கும்? ஜனநாயக, மதசார்பற்ற, பெரியாரிய, தலித்திய, இடதுசாரிய சக்திகளின் பயணம் எத்தகைய 'கவனம்' உடன் செலுத்த வேண்டியுள்ளதையே இது காட்டுகிறதல்லவா?

[10/23/2015, 10:04] Senthan Chennai: Usefull group

-----\\\\

துறந்த விருதுகளை திருப்பப் பெறலாம்..!

சாகித்ய அகடாமி செயற்குழு-- "படுகொலைக்குக் கண்டனமும், இறந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தியதோடு, மத்திய மாநில அரசுகள் எழுத்தாளர், அறிவார்ந்த அறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும்" என 3 தீர்மாணம் நிறைவேற்றியது...

விருதைத் திருப்பி தந்தும், மாற்று வழிகளிலும் போராடிய எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக போராடிய மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த வெற்றி இது! 

இந்நிலையில், இனி போராட்டங்கள் தவிர்க்கலாம்; துறந்த விருதுகளை திருப்பப் பெறலாம் என்றே தோன்றுகிறது!

இன்று 23.10.15 PTTV மக்கள் மேடை யில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 ஆவது மக்கள் மேடையில் எனது கருத்தும் பதிவேற்றம் ஆகியிருப்பது மகிழ்ச்சி! நன்றி!

----\\\\

அதிமுக அச்சத்தின் பிடியால்தான்..!

அதிமுக அச்சத்தின் பிடியால்தான் இணையதள பரப்புரையை துவங்கியுள்ளதே தவிர துணிச்சல் ஒன்றும் கிடையாது!

திமுக ஸ்டாலின் தெருக்கூத்து நடத்துவதைப் பார்த்தால், தயார் மாதிரி தெரியவில்லை; அது மக்கள் நலக் கூட்டியக்க வளர்ச்சி அவரையும், திமுகவையும் உலுக்கி வருகிறதையே காட்டுகிறது. 

பாமக இறங்கி வர காரணம், சாதிவெறியும், மதவெறியும் என்றும் ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளது. 

மக்கள் நலக் கூட்டியக்கமே 2016 தேர்தலில் நட்சத்திர அணியாக இருக்கப் போகிறது; இதன் குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியாகும்போது தெரியும் இதன் பிரகாசமன 'ப்பியூச்சர்!' (எதிர்காலம்).

இன்று23.10.15 PTTV நேர்பட பேசு க்கு!

(அதிமுக அதரவு பாண்டிராஜன், திமுக பிரசன்னா, பாமக செந்தில், மார்க்சிஸ்ட் எஸ்.கண்ணன் இவர்களுடன் நெறியாளர் தியாகச்செம்மல்..!

அதிமுகவின், "ஒளிரும் நிகழ்காலம்; மிளிரும் எதிர்காலம்" பற்றி பாண்டியன் பேசியது எடுபடல. திமுகவின், "நமக்கு நாமே; முடியட்டும்; விடியட்டும்" டிராமாவில் 3லட்சம் மனுக்கள் வந்ததாம்; அதனால் ஆட்சியைப் பிடிப்பது மிக எளிதாம் பிரசன்னாவின் பிரசங்கம் இருந்தது; பாமகவின், "மாற்றம் முன்னேற்றம்" பிசுபிசுத்து, நமத்து போனதை செந்தில் டாக்டர் என்பதால், கொஞ்சம் ஒத்துக்க மறுத்தார். தியாகசெம்மல், " தனியாக நிற்கலாமே" என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர முடிந்தது. 

மக்கள் நலக் கூட்டியக்கம் மட்டும்தான் சரியான மாற்று என்பதை தோழர் கண்ணன்"அதிமுக, திமுக ஊழலலின் உறைவிடம், கல்வி, வேலை, விலைவாசி என பல பிரச்சனைகள் தீர, சாதிய பாமக மாற்றாகாது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட, மக்கள் நலக் கூட்டியக்கமே... இன்றைய தேவை" அழுத்தமாக பதிந்தது நன்று!).

-----\\\\

அதென்னமோ இவங்க நடுநிலை..!

வலைதள நண்பரின் இன்று 24.10.15இல் வந்த, புதிய தலைமுறை அக்னி பரிட்சை யில் அர்ஜுன் சம்பத் நேர்காணல் குறித்த கண்டன பதிவுக்கு என் ஆதரவு பதிவு இது...!

"... அதென்னமோ இவங்க நடுநிலை அப்படீன்னுக்கிட்டு, இப்பிடி பண்றாங்க; நானும் பாத்தேன்!

அன்று ஒரு நாள் அதாவது ஞாநி கடிதம் எழுத காரணமாக இருந்தாரே ஒரு சிவசேனா காரர்... அவரு பேச்சைவிட இந்த சூராதி சூரன் பேச்சு படுமோசம்! 

என்னமோ தெரியல இந்த டிவி க்கு கிறுக்கு புடுச்சிக்கிச்சோன்னு தோணுது! அப்பட்டமான இந்துமதவெறி ஊட்டும் வெறிப்பேச்சு அர்ஜுன் சம்பத் பேச்சு இருந்தது! இதை சமம் செய்ய வேண்டுமென்றால் ஐஎஸ்ஐ, ல்க்ஷ்சரி தொய்பா.. என முஸ்லீம் மத அமைப்புகளையும் கூட்டு "அக்னி பரிட்சை" நடத்தினாத்தான் சரிபடும்! செய்வார்களா? 

எனக்கென்னமோ இந்த டிவி தனது மதிப்பை இழக்க எங்காவது "பெட்" (பந்தயம்) கட்டிரிச்சோன்னு தெரியுது! அதை அடுத்து வந்த நேர்பட பேசு லக்கூட பாஜக வானதியும்கூட "அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கிற பெரிசா பேசுறிங்களே"ன்னு தலித் மற்றும் சிறுபான்மை படுகொலைகளை அவரது தலைவர்களைப்போல் எந்த கூச்சமும் இன்றி மிக சந்தோசமாக பேசுகிறார்! 

அதுசரி கல்லைக் கட்டிக் கொண்டு கிணத்தில் குதிப்பவர்களை நாம என்ன செய்ய முடியும்? தமிழ் தாமரை டிவி ய எவ்வளவுபேர் பார்க்கிறார்கள் என்பதை இந்த தொலைக்காட்சி கணக்கெடுத்து பார்த்துக் கொள்ளட்டும்! நன்றி!..."

-----\\\\\


Tuesday, 20 October 2015

கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கோகுலகண்ணன் 'லாக்அப் மர்டர்!'
மாநில மனித உரிமை ஆணையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
சேலத்தில் சாட்சியம்!
???????///////????///??///////?????///

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கடந்த 5.7.15 இரவு விசாரனைக்கு அழைத்து சென்ற நடேசன் மகன் கோகுலகண்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் அடித்து, உதைத்து, கால்களை உயிர்நாடி பகுதியில் பிளந்து கொன்று விட்டனர். இதை மறைக்க ரூ12 லட்சம் குடும்பத்தாரிடம் கட்டபஞ்சாய்த்து பேசி கொலையை மூடி மறைத்து விட்டனர்.

ஆனால் சிபிஐஎம் சார்பில் மக்களைத் திரட்டி போராடியதோடு, மாநில மனித உரிமை ஆணையத்திற்கு , கோகுலகண்ணன் கொலைக்கு காரணமானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாய்து செய்து மூடி மறைத்த காவல் உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 8.7.15இல் புகார் தரப்பட்டது. 

அதனை விசாரிக்க சேலம் வந்திருந்த மனித உரிமை ஆணைத்திடம், இன்று 20.10.2015 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு சாட்சியம் அளித்தார். அதன் நகல் இத்துடன் உள்ளது. விசாரணையின் போது, கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், வழக்குரைஞர்  எம்.வெற்றிவேல்  ஆகியோர் உடன் இருந்தனர். 

காவல்துறையால் காவல் நிலையத்தில் கொலைச்செய்யப்பட்ட கோகுலகண்ணன் உறவினர்களை காவல்துறையினர் பலத்தப்பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----\\\\
தோழர் ஜிஆர் 'நேர்காணல்' 
விவாதக்'கனலாக' மாறியது! நன்று!

தோழரே, வணக்கம்!

இன்று 19.10 நேர்பட பேசு பார்த்தேன். ஓரளவு நடுநிலையாக போனீர்கள்; ஆனால், மத்திய அரசின் கொள்கைகளை, போக்குகளை விமர்சிக்கிற களமா சட்டமன்ற தேர்தல் களம் என்றீர். நன்று. இதை தங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை! 


ஏனென்றால் இன்றைய சூழலில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை அதிமுக, திமுக முழுமையாக ஆதரிக்கின்றன; திமுக மதவாதம் சம்மந்தமான விசயத்தில் தற்போது சிறிதளவு எதிர்க்கிற மாதிரி ஒரு பாவணைக் காட்டுகிறது; அதிமுகவை கேட்கவே வேண்டும் பாஜக ஆளும் மாநிலங்களை எடுத்து விழுங்கிடும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது; இதை எல்லாம் எப்படி புறம்தள்ளி தமிழக தேர்தல் களம் காணுவது? 

எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கை தமிழர் பிரச்சனைகள் எல்லாம் பிரதிபலித்தையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்! 

எது எப்படியோ தோழர் ஜிஆர் நேர்காணல், விவாதக்கனலாக மாற்றியமைக்கு நன்றி! 

நெறியாளராகிய தாங்கள் (குணா) சாணிப்பால், சாட்டையடிக்கு எதிரான கம்யூனிஸ்ட்களின் களப்பணியை தற்போது, இதிலே கொண்டு வந்தது, மனத்திற்கு மகிழ்வைத் தந்தது! மீண்டுமொரு நன்றி! 

ஊடகவியாளர் மணி, மதிமுக சத்யா,மார்க்சிஸ்ட் பாக்கியம் நல்லப் பங்களிப்பு தந்தனர்; மனுஷ் விவாத்தில் சாரம் இருக்கவில்லை!

(புதிய தலைமுறை டிவி 19.10.15 நேர்படபேசு விவாதம் ஒட்டிய பதிவு)

----\\\\\

ஒரே அணி 'மக்கள் நலக் கூட்டியக்கம்' மட்டுமே!

ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் ஏற்கத்தக்கதும், அடிப்படை உள்ளதும் ஆகும். 

ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரம் முழுக்க சினிமாபாணி நடிப்பே! தற்போதுதான் விண்ணுலகில் இருந்து வந்தவர்போல் கோழிமுட்டை போடுவதையெல்லாம் பார்த்து வருகிறார் என்றால், என்ன கூத்து இது? 


ஐந்துமுறை தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவின் பிரதிநிதி, துணை முதல்வராக வீற்றிருந்த ஒருவர், சென்னை மேயர் பெருமகனாக இருந்தவரின் நடிப்பை ரசிக்கக்கூட முடியவில்லையே. 

விலைவாசி, ஊழல்-லஞ்சம், தீண்டாமை கொடுமை, வேலையின்மை, கல்வி வியாபாரம், விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு நியாயவிலை, நாடு காவிமயமாவது குறித்த கவலை... இப்படி மக்களின் துயரங்களுக்கு திமுகவிடம் என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது? 

இந்த 'ரோடுஷோ'வில் திமுகவிற்கு கிடைக்கபோவதென்னமோ 'ப்ராய்லர் கோழிமுட்டை'யே! 

தமிழக மக்கள் இந்த மாலைநேர ஸ்டாலினின் நடிப்பை நிச்சயம் நம்ப மாட்டார்கள்! 

தமிழகத்தில் மாற்றுக் கொள்கை உள்ள ஒரே அணி 'மக்கள் நலக் கூட்டியக்கம்' மட்டுமே!

இன்று 19.10.15 PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\\

அச்சு ஊடக சங்கத்தை 
ஜனநாயகப்படுத்துவது எப்போது?

இன்று 19.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர்கள் ஞானி, சுபவீ., ஜென்ராம்..!

நிகழ்ச்சி சுயவிமர்சனமாக அமைந்தது, அமைத்து கொண்டது அருமை; ஆம், அருமை மட்டுமல்ல, இது ஒரு புதுத்தடம்! ஆம், தடுமாற்றம் எங்குதான் இல்லை; மனித வாழ்வில்? என்றாலும், அந்த தடுமாற்றத்தை "தடுமாற்றம்" நடந்துவிட்டது என்று இலை மறைவு தலைமறைவாகவாது ஒத்துக்கொள்வதும், அதற்கான மனநிலையை காண்பதும் எல்லாம் ஊடகத்துறையில் காண்பது அதிசயம்; அந்த அதிசயத்தைப் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்து என்பது பாராட்டக்கூடியது; இதர தொலைக்காட்சிகளும் (அரசியல் கட்சிகள் சார்ப்பற்ற; அரசியல் சார்ப்பற்ற என்று சொல்ல மாட்டேன்; அப்படி ஒன்று இருக்க முடியாது) பின்பற்றத்தக்கது!
அதேசமயத்தில் அது பாவமன்னிப்பு போன்றும் அமைந்துவிடக்கூடாது.

ஞானி சொன்னதுபோல் அச்சு ஊடகத்திலும் அதன் சங்கம் ஜனநாயக படுத்திவதிலும் கவனமிடுவது மிக அவசியமே!

3000 சொச்சம் உறுப்பினர்களின் சங்கத்தேர்தலை 125 கோடி மக்களின் பொதுத்தேர்தல்போல் "போட்டு எடுத்ததைப்" பொறுத்துக் கொள்ளமுடியாமல் புலம்பிய கோடானகோடியவர்களில் நானும் ஒருவன் எதையும் இங்கே பதிவு செய்கிறேன். இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் போக்கும், நோக்கும் பிடித்த கோடானகோடியவர்களில் நானும் ஒருவன்! நன்று! நன்றி தோழர் ஜென்ராம்!

----\\\\

ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்தது!

ஜனநாயக நாட்டில், ஜனநாயக நடைமுறையில் இயங்கும் நாடாளுமன்றமே உயர்ந்தது. 

மற்ற அனைத்து துறையும் அதற்கு கீழானதே! இதிலே நீதித்துறைதான் நாடாளுமன்றத்தை விஞ்சப் பார்க்கிறது. அதை ஜனநாயகத்தில் ஏற்க முடியாது. 


ஆனால் ஒன்று... நாடாளுமன்றம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு இருக்கிறது. 

எது எப்படி இருந்தாலும், இந்துத்துவாவாதிகளிடம் தற்சமயம் நாடாளுமன்றம் சிக்கி இருப்பதால், தமக்கு ஆதரவாக நீதிதுறையின் மாண்புகளையும் அது அரித்து விடாமல் பார்த்துக் கொள்வதும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது. 

பாசிசம் என்பது பழுதுபோல் கிடக்கும் பாம்பு; அதை கவனித்தே கையாள வேண்டியுள்ளது.

இன்று 19.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\
கலைஞருக்கு சொத்து... 
2 தகர பெட்டியும், கட்சி ஆபீசுமா?

இன்று 20.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கண்ணன், திமுக கண்ணதாசன் நெறியாளர் கார்த்திகேயன்..!

முழுக்க ஸ்டாலின் நாடகம் குறித்து இருந்தது விவாதம்;  நாடகத்தில் ஆட்சியில் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறாராம் ஸ்டாலின். 

அதாவது திமுகவை ஆதரித்தால், அல்லது எதிர்க்காமல் இருந்தால் கம்யூனிஸ்ட்கள் கொள்கை இவர்களுக்கு டாப் பாக தெரியும்; கலைஞர்கூட சங்கரய்யா, நல்லக்கண்ணு க்கு நடுவில் வந்து அமர்ந்துக் கொண்டிருப்பேன் என உச்சி குளிர்வார்; இல்லையென்றால் உடைந்துபோன ஓட்டை இசைத்தட்டையே உயிர் உள்ளவரை , கல்கத்தாவில் சைக்கிள் ரிக்ஷா வை இசைத்துக் கொண்டே இருப்பார்கள்! 

மேற்குவங்க ஜோதிபாசு ஆட்சியில், அவரது குடும்பத்தில், கட்சியில் ஒருவரை சன் டிவி குழுமம் அளவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் காட்ட முடியுமா? கண்ணதான் அவர்களே! தோழர் கண்ணன் தர்க்கரீதியாக வைத்த எதற்கும் பதில் அளிக்காமல், கைரிக்ஷாவிற்கு போய்விட்டார் பாவம் கண்ணதாசன்!

நிருபன் சக்கரவர்த்தியை பேசினார், கலைஞர் கருணாநிதி அவர்களின் அவரது குடும்பங்களின் சொத்து இரண்டு தகர பெட்டிகள்தானா? அதில் ஒன்றில் துணிகள், இன்னொன்றில் புத்தங்கள்தானா? கருணாநிதி கட்சி ஆபீசில்தான் தங்குகிறாரா? கட்சி தரும் அலவன்ஸ்சில்தான் வாழ்கிறாரா?

இந்த தகிடுதத்தம் வேலைகள் இனி தமிழகத்தில் எடுபடாது திமுகவே; எடுபடாது! உண்மை சுடுகிறதோ? சுடட்டும்; நன்றாக சுடட்டும்!

----\\\\

Saturday, 10 October 2015

கண்களில் 'கடகட' வென வந்துவிட்டது கண்ணீர்!

இன்று 4.10.15 இரவு 8 முதல் 9 மணி முடிய தந்தி டிவி "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சி தற்செயலாக பார்க்க நேர்ந்தது.  கேள்வியாளர் ஹரிஹரன்... இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

ஜெனிவாவில் நடந்து கொண்டே உரையாடல்... அது எதார்த்தமாக இல்லை என்பது வேறு விடயம்..! ஆனால் செல்வம் அடைக்கலநாதனின் பதில் ஓர் எதார்த்தப்பதிவு என்றால் அது மிகையல்ல!

மாமேதை லெனின் வீரியமிக்க வரிகள்..."ஓரடி முன்னால் ஈரடி பின்னால்" இதற்கு உயிர் கொடுத்தார் செல்வம் கமலநாதன்.

தமிழகத்தில், தமிழீழ ஆதரவாளர்களும் சரி, தமிழ் மக்கள் ஆதரவாளர்களும் சரி... உணர்ச்சியின் வெள்ளத்தில் மூழ்கவோ மூழ்கடிக்கப்படவே பற்பல முயற்சிகள் நடக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் செல்வம் சொல்கிறார்...

"சர்வதேச விசாரனை தற்போது இல்லை என்பது வருத்தம்தான்; ஆனால் முதல் கட்ட வெற்றியை அடைந்துவிட்டோம்; இந்த விசாரனைக்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டதே... போர் குற்றம் நடந்திருக்கிறது என்று ஒப்புக்குக் கொண்டதற்கு சமம்; இதற்கு பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருக்கிறது; இதன்மூலமும், ஐநாவில் மனித உரிமை அறிக்கை சமர்பித்திட 130 நாடுகள் ஏற்றுக்கொண்டதன் மூலமும், சர்வதேச சமூகத்தின் பிரச்சனையாக இது மாறிவிட்டது; இனி அடுத்தக்கட்டத்திற்கு இந்த பிரச்சனையை எடுத்து செல்வது இந்த 25 நாடுகளின் பொறுப்பாகிவிட்டது; இதற்காக இந்தியா, தமிழகம் அரசுக்கும் நன்றி!" என்று அவர் பகிர்ந்தபோது கண்களில் 'கடகட' வென வந்துவிட்டது கண்ணீர்!

இதற்கு பெயர்தான் மனிதமென்பதா? அல்லது தொப்புள் கொடி உறவென்பதா? உரையாடல் அனைத்தும் உணர்வுபூர்வமாக, கள, தள நிலைமைகளை எதார்த்தமாக பதிவு செய்தார் செல்வம்! ஹரிஹரனும் கவனமுடன் அடியெடுத்து வைத்தும் மிகையின்றி இருந்தது எதார்த்தமாக! 

நாளைய பொழுது நமக்காக, இலங்கைவாழ் தமிழர் நலனுக்காக புலரும்; மலரும்! நம்பிக்கை ரேகை செல்வம் கமலநாதன் முகத்தில் படரவில்லை; இந்நிகழ்ச்சியை பார்த்த கோனாடகோடி தமிழ்மக்கள் முகங்களிலும்தான்! நன்றி தந்தி டிவிக்கும், ஹரிஹரனுக்கும்!

------\\\\\\

அப்ப..! மீண்டும் மொதல்ல இருந்தா?

"இலங்கை தமிழர் பிரச்சனை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், தீர்வு ஏற்படும் என்றால் விலகுகிறோம்" 

இப்படி சொன்னது யாரு? அவர்தான் மாற்றம், முன்னேற்றம் புகழ் மருத்துவர் அன்புமணி. எவ்வளவு விவரம் பாருங்க!


இவர்கள்தான் 50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுறாங்களாம். 

தைத்தான் திமுக, அதிமுக தலைமைகள் காங்கிரஸ், பாஜக வோடு கடந்த காலத்தில் கூட்டணி ஆட்சியில் பங்குபெற்ற போதும், ஆட்சி பங்கு பெறாமல் ஆதரவளித்தபோதும்.... 

இலங்கை தமிழர் பிரச்சனை வரும்போதெல்லாம், "நாங்க வெளியே வந்தா, தீந்திருமா?" ன்னு வீரவசனம் பேசினாங்க! 

அப்ப மீண்டும் மொதல்ல இருந்தா? திமுக அதிமுக வுக்கு மாற்று லட்சணத்தை தமிழக மக்களுக்கு 'உணர்த்தியதற்கு' நன்றி சின்னய்யா அவர்களே, நன்றி. 

ஆம்! பாமக வும், திமுக அதிமுக வும் ஒன்னு; ஜனங்க வாய்ல மண்ணுன்னு  ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தமைக்கு நன்றி. (செய்தி: தினமணி 6.1015)

----\\\\

மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

ஒரு வழியாக பொறியாளர் தலித் மாணவன் கொலைக் குற்றவாளி யுவராஜ் இன்று 04.10.15 காலை 08 மணி செய்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஸ்காலாந்து போலீஸ்க்கு மீறிய தகுதி படைத்த தமிழக போலீஸ்,  அதுவும், சிபிஐ யை எடுத்து சாப்பிட்டுவிடும் தமிழக சிபிசிஐடி போலீஸ் 3 படை, சொறி, சிரங்கு அமைத்து இரவு பகலாக தேடி வருகிறது.

சேலத்தில் தினம் தினம் யாரையாவது பிடித்து விசாரி விசாரின்னு 8 மணி நேரம் 10 மணி நேரமுன்னு விசாரித்து தள்ளுகிறது. அனேகமாக இந்நேரம் 10,000 பக்கம் விசாரனை அறிக்கை தயாரித்து இருப்பர். அம்மா போலீஸ் சும்மா இருக்குமா?

வீரப்பனுக்கு மோருல விஷம் கொடுத்து பொணத்த சுட்டு புடித்த அம்மாவின் டீம் அடிவருடி  வெள்ளதொற கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் நடத்திடும் ஜனநாயக போராட்டத்தையே சகிக்காமல் உள்ளே போடுங்கன்னு ஓப்பன் ஓயர்லஸ் ஓங்காரமிட்டானே, இப்ப என்னா பண்ணுவீங்க? மீசைய முறுக்கிட்டு பேட்டி கொடுக்கிறானே கொலைக்குற்றவாளி!

ஊடக தர்மம் வாழ்க! ஊடக உரிமை ஓங்குக! ஆம்மாம்..! அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போனது யாரு? தமிழ்நாட்டு போலீசா? திருட்டு பயல்களா? யாரு?

தமிழகத்தில் கிரிமினல்கள் ஆட்சித்தான் நடக்கிறது என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

இன்னும் எத்தனை கோகுல்ராஜ்களை, விஷ்ணுப்பிரியாக்களை தமிழகம் காவுக் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை; தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளின் ஜாதிவெறி கொலைகளைத் தடுக்க! தலித் மக்களின் சம உரிமைகளை நிலைநாட்ட?

இன்னேரம், தமிழகத்தில் நான் போலீசு மந்திரியாக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்; டிஐஜி யாக இருந்திருந்தால்....   அதற்காக டிஎஸ்பி போல் தூக்கில் தொங்கிருக்க மாட்டேன்; ராஜினாமா செய்திருப்பேன்; குறைந்தபட்சம் தமிழக மக்களிடம் மன்னிப்பாவது கேட்டு இருப்பேன்! 

-----\\\\\

சிபிசிஐடி விசாரனையில் 
முன்னேற்றம் கிடைக்காது.

இது எதும் நடக்காது இந்த ஆட்சியில்! ஆனால் 2016இல் சட்டபேரவை தேர்தலில் முடிவு கட்டவில்லையென்றால், தமிழத்தை கிரிமினல்கள் தான் ஆளுவார்கள்! ஆம் மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

விஷ்ணுப்பிரியா சந்தேக மரணம் குறித்த தனிப்பட்ட விசியங்களை கசிய விடுவது தமிழக காவல்துறைதான். வேறு யாரு? விஷ்ணுப்பிரியா இறந்த தகவல் கிடைத்ததும், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே போய் " அனைத்து ஆவணங்களை" கைப்பற்றியது காவல்துறைதானே! அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் உள்பட முதலில் தந்ததும் காவல்துறைதானே! 

பெண்கள் மட்டுமல்ல தலித் மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் குறைபாடு உள்ளது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் அரசியல் எல்லாம் கிடையாது. மரணம் நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளே விசாரித்தால் நிச்சயம் நியாயம் கிடைப்பது மட்டுமல்ல உண்மை வெளியவே வராது. 

யுவராஜ் சரணடைந்தாலோ, உயிரோடு பிடிக்கப்பட்டாலோ தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும். ஆனால்  வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரனையில் முன்னேற்றம் கிடைக்காது.

இன்று 10.10.15 PTTV நேர்பட பேசு க்கு.

----\\\\

தர்மம் மறுபடியும் வெல்லும்!'

இன்று 6.10.15 காலைக்கதிர் செய்தி தாளில் ஒரு செய்தியை உற்பத்தி செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அதாவது நடந்து முடிந்த செப் 2 வேலைநிறுத்தம், "... எப்படியோ தப்பித்து பெரும் வெற்றி பெற்றது" என்று. இதற்கு நன்றி.

'அரசியல் சதுரங்கம் ' என்பதில், 'புகைச்சல் கிளம்பியிருச்சு' தோழர் புத்ததேவ் வை ஓரம் கட்டிவிட்டார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் குமுறுகிறார்களாம்... 

அட கூறு கெட்ட கூவே... செப் 2 ஸ்டிரைக் மட்டுமல்ல... சமீபத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் மாபெரும் வெற்றி. அதுமட்டுமல்ல நடக்க இருக்கிற உள்ளாட்சி  தேர்தலில் இடதுசாரிகளுக்கு வெற்றி உறுதியின்னு தெரிந்து, இப்ப வன்முறை வெறியாட்டத்தில் மம்தா கட்சி அரசே இறங்கியுள்ளது. இந்திய மாநிலங்களில் எதிலும் நடந்திராத வன்முறை நடக்கிறது. தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. 

ஓரளவாவது நியாயமாக நடத்தினால் இடதுசாரி வெற்றி உறுதி. ஆம், உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும்தான்.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்!'

-----\\\\\

ஆடிட்டர் வகையறாக்களே.. நிறுத்தும்!

இன்று 6.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் தோழர் கே.கனகராஜ் சிபிஐஎம், ஆடிட்டர் பிரபாகர் இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம். முழுதும் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை....

சிபிஎம் எம்பி கேட்டு ஜெயலலிதா காலில் விழுந்ததாம்; கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கோடான கோடி மக்கள் பார்க்கிறார்கள் என்றுகூட 'அவைஅடக்கம்' இல்லாத கோமகன் வகையறாக்கள் ஜெயலலிதா காலிலும், சங்கராச்சாரியார் காலிலும் வேண்டுமானால் விழுந்து இருக்கலாம்; அந்த பழக்க தோஷசத்தில் சொல்கிறார் வெகுதிமிராக! 

கம்யூனிஸ்ட்கள் காலில் விழும் கலாச்சாரத்தை மாற்றி, சரிநிகர் சமுதாயத்திற்கு பாடுபடுபவர்கள். இது போன்று வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? மாதிரி பேசுவதுதான் பார்ப்பனியமோ? ஆம்! ஆதிக்க மனோபாவம்! 

பசுவதை என்பதைத் தடுக்க வேண்டுமென சட்டம் சொல்லுதாம் ஆடிட்டர் சொல்கிறார். இவர் பாஜக அல்ல; ஆனால் பாஜகவுக்கு கூஜா தூக்குபவர். சரி, 
மனிதனை வதை செய்யலாமென சட்டம் சொல்லுதா? 

மூஸ்லீம் என்பவர்களை கொத்துக் கொத்தாக குஜராத்தில் மோடி அரசே கொன்று குவித்தே அன்று. சாமியார்கள் மரணத்திற்கு காரணமானவர்களை பிடித்து சட்டத்தின் முன் அல்லவா நிறுத்திருக்க வேண்டும்? இந்த பீலாவிடுற வேலையெல்லம் நிறுத்தும்மய்யா ஆடிட்டர் வகையறாக்களே.. நிறுத்தும்!

------\\\\\

பசு கறி வேறு, மாட்டுக்கறி வேறு?!

இன்று 7.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு அதன் சுருக்கம் பார்த்தேன்.

'துறவரம்' முடித்து மீண்டும் பாஜக வின் மாநில பொருளாளர் சேகர் அவர்களின் பிரவேசம் பார்க்க முடிந்தது  போலும்! 


இதுதான் மீடியாவின் பலமோ? அல்லது பாஜகவின் பலவீனமோ? 

எது எப்படி இருப்பினும் பாஜக வின் அதிகாரபூர்வ மானவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பு நன்று. வரவேற்கதக்கது. 

நித்தியானந்தன், நாராயணன், பிரபாகர் என 'பாஜக ஆதரவாளர், சமூக ஆர்வலர், ஆய்வாளர்' சில முகமூடிகள் வந்து விழி பிதுங்கி, சிக்கி திணறி போவதைவிட இது மேல்; மட்டுமல்ல, விவாதங்களில் ஒரு 'பொறுப்பு' இருக்கும். (அவர்களின் பொறுப்பும், நீங்களும்  என்று என்னை நீங்கள் மனதுக்குள் திட்டுவது தெரிகிறது) 

பிரபல எழுத்தாளர் நயன்தாரா அவர்களின் தனது 88 வயதில் தான் பெற்ற சாகித்திய அகாடமி விருதை திருப்பி அனுப்பிவிட்டு, "பாரத தேசமே... பாசிச தேசமாகாதே!" என்ற அவரின் குமுறலை, மனுஷ் ம், ஜென்ராமும் கவலையுடனும், ஆரோக்ரோசத்துடனும் விவாதித்தனர். 

சேகர் பசு கறி வேறு, மாட்டுக்கறி வேறு ன்னு புதுகரடி ஒன்றை விட்டார். அடபாவிகளா? அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பது இதுதானோ?

------\\\\\

எந்த மகாபாரதம் 
இன்று நமக்கு தேவை?
??????//////??????//////
மகாபாரதப் போரில் அர்ச்சுணனுக்குத் தேர் ஓட்டியாக கிருஷ்ணனுக்குப் பதிலாக புத்தர் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர் வேடிக்கையாக வினா எழுப்பினர். புத்தர் அர்ச்சுனனிடம், "இந்த போர் தேவையா?" என்றுதான் கேட்டிருப்பார் என்றும் அவர் கூறுகிறார்.

அவர்கள் ஒவ்வொரு முறை தேரில் ஏறும் போதும் நமக்குப் பிரச்சனைதான். அத்வானியின் தேர்தானே இந்த நாட்டின் மத ஒற்றுமையின் மேலேறி ஓடியது!

அவர்கள் எதிரிகளாய் காண்பவர்கள்தாம்  நம் குருட்சேத்திரப் போரின் நம் அணி!

இந்த முறை நாம் தேர் ஏறுவோம்! மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் தான் நம்முடைய தேர் ஓட்டிகள்! மனித மனங்களை வெல்லும் மகாபாரதப் போர் தொடங்கட்டும்!

(நன்றி: அக்: 2015 செம்மலர்)

------\\\\\

அடங்கா பணப்பசியுமே காரணம்! வேறென்ன? 

விஜய்காந்த் சொல்லுவது புரியவில்லை. மற்ற கட்சிகளை வளர வைப்பதா திமுக அதிமுக வேலை? 

இவர்களின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் சொல்லி, மக்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டுவதுதான் புதிதாக வரும், அல்லது சிறிய கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். 

தேர்தல் நேரங்கள் உள்ளிட்டு மற்ற எல்லா நேரங்களிலும், சிறிய கட்சிகள் தமிழகத்தில் உடைவதற்கு பெரிய கட்சிகளின் (திமுக அதிமுக)  பதவி மோகமும், தாங்களே ஈரேழு ஜென்மத்திற்கும் ஆளவேண்டும் என்ற அடங்கா பணப்பசியுமே காரணம். வேறென்ன? 

மக்கள் நலன் என்பது சிறு கொறுசுதான் அதிமுக திமுகவுக்கு!

இன்று 7.10.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

இதற்கு என்ன சொல்லப்போகிறது 'காவிக்கூட்டம்?'

எழுத்தாளர் நயன்தாரா சேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி தந்தபோது 'அவர் நேரு குடும்பம்' என சாயம் பூச முற்பட்டனர். 

இன்று மீண்டுமொரு பிரபல எழுத்தாளர் அசோக் வாஜ்பாய் சாகித்ய அகடாமி விருதை துறந்துள்ளார். நயன்தாரா சொன்னது நூற்றுக்கு நூறு சரி; 

சகிப்புத்தன்மை கிடையாது; பாசிச ஆட்சி முறையே ஆளுமையில் இருக்கிறதென்கிறார். இதற்கு என்ன சொல்லப்போகிறது 'காவிக்கூட்டம்?'

-----\\\\\

குடும்ப அட்டை போதுமானது!

ஆதார் அட்டை அரசு திணிப்பதுதான் மர்மத்திலும் மர்மமாக இருக்கிறது. 

கண்கண்ணாடி அணிந்திருந்தால் அதை கலட்டச்சொல்லி போட்டோ எடுத்தார்கள்; கை ரேகைகள் எல்லாம்  எடுத்தார்கள்; என்னமோ 'இந்திர லோகத்திற்கு ' அனுப்புவதுபோல் செய்தார்கள்! 

இருக்கிற குடும்ப அட்டையை இந்திய துணைக்கண்டத்திற்கு போதுமானது! 

ஏன்தான் இப்படி கொடுமை படுத்துகிறார்கள் என்று யோசித்தால், நமது அத்தனை ரகசியங்களையும் 'ஆன்லைன்' போட்டு, நவீன அடிமை ஆக்கும் முயற்சியோ என தோன்றுகிறது. 

ஏகாதிப்பத்திய அடிமை நாடாக மாறும்போது நம்மை 'மாடுகள்' ஆக்கி  அடகு வைத்துவிட்டு,  120 கோடி மனிதர்களை அடகு வைக்கும் வேலையோயென பாமர மக்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமலில்லை என்றே தோன்றுகிறது இதில் அரசு அழுத்தம் தருவதைப் பார்க்கிறபோது!

இன்று 8.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

-----\\\\

"பேய் ஆட்சிச் செய்தால்..!

சாகித்திய அகாடமி விருதை நயன்தாரா சஹல் மட்டும் திருப்பித் தரவில்லை; அசோக் வாஜ்பாய் என்ற எழுத்தாளரும் திருப்பி தந்துவிட்டார்; தந்ததோடு மட்டுமல்ல சஹல் சொன்ன பாசிச ஆளுமையே இன்று கோலோச்சுகிறது என்பதையும் ஆதரித்துள்ளார். 

ஆகவே இந்த பாஜக ஆட்சியில் பாசிசப்பாணி தலையெடுக்க ஆரம்பித்து விட்டதையே இது காட்டுகிறது. மேலும் அறிவுஜீவிகள் முதல் அன்றாடம் காச்சிகள் வரை உயிருக்கு பாதுக்காப்பு இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணமாகி வருகிறது. 

இதைத்தான் மகாகவி பாரதி, "பேய் ஆட்சிச் செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்றாரோ?

விருதை திருப்பித் தருவது அரசியலாக பார்க்காமல், அரசும், அரசை வழிநடத்தும் பாஜகவும் 'கொலை' அரசியலில் இருந்து வெளியே வந்து, மாடுகள் உயிர் மீது செலுத்தும் கவனத்தில், ஒரு கடுகளவாவது கவனம் செலுத்தி மனித உயிர்களை காத்திடல் வேண்டும். 

இன்று 8.10.15  PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\\

உரிய கவசங்களை அணிந்து செல்வது நன்று.

ஸ்டாலினின் 90% இந்துக்கள் திமுகவினர் என்பது, அதன் மத நல்லிணக்கம் என்பதன் கோட்பாட்டில் அரிப்பு ஏற்பட்டிருப்பதைதே காட்டுகிறது. 

இதில் ஆச்சரியப் படவோ, அதிர்ச்சி அடையவோ ஒன்றுமில்லை. திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு வந்து, நிரந்தரமானபோதே திமுகவின் பகுத்தறிவு கொள்கைக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. 

தலைவர் எவ்வழியோ அவ்வழி பொருளாளர் வழியும்; பொருளாளர் எவ்வழியோ அவ்வழியே உடன்பிறப்புகளின் வழியும் என்றாகிவிட்டது. 

ஓட்டுக்காக, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஆட்சிக்காக எந்தவித சமரசத்திற்கும் அஞ்சாதவர் கலைஞர்!

இன்று 9.10.15 PTTV நேர்பட பேசுக்கு!

----\\\\

பிரசன்னாவின் ஆத்திரமும், 
நாராயணனின் ஆதரவுமே சாட்சி. 

நிகழ்ச்சியில் தோழர் அருணன் மார்க்சிஸ்ட், பிரசன்னா திமுக, நாராயணன் பாஜக, கோவி.லெனின் பத்திரிக்கையாளர், இவர்களுடன் கார்த்திச்செல்வன் நெறியாளர்...

அருணன் வைத்த தர்க்க ரீதியான வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல், இஎம்எஸ், ஜோதிபாசு, நாயனார் ஆகியோரை வம்புக்கு இழுத்தற்கு காரணத்தை அவர் மிக தெளிவாக சொல்லிவிட்டார். 

அதாவது  ஆர்எஸ்எஸ் வேறாம்; பாஜக வேறாம்! உடனே நாராயனன் சொன்னார் இரண்டு ஒன்றென்று!  இதற்கு பதில் அளிக்காமல் கம்யூனிஸ்கள் மீது விஷம் கக்குகிறார். ஆகவே ஸ்டாலின் கும்பிட்டார் என்பதற்கு ஆதாரம் பிரசன்னாவின் ஆத்திரமும், நாராயணனின் ஆதரவுமே சாட்சி. 

தோழர் அருணன் இனிமேல் சட்டமன்றத்திற்கு போவதுபோல் இதுபோன்ற மன்றத்திற்கு போகும்போது உரிய கவசங்களை அணிந்து செல்வது நன்று.

என்னமோ நடக்குது; மர்மமாக இருக்குது! திமுக பாஜக  க்குள்! ராமானுஜம் தொடர் வரும்போதே சந்தேகங்கள் எழுந்தன. அது கொஞ்சமாக நிருபனமாகி வருகிறதென்பதே இன்றைய இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

-----\\\\