Tuesday, 1 March 2016

'உல்டா, புல்டா' வுட்ட ராகவனே..! 
சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ் "பொறக்கவே இல்லை" என 'உல்டா, புல்டா' வுட்ட ராகவனே...
#
1930 இல் இங்கிலாந்து ராணிக்கு 'அரடவுசர் அணிவகுப்பு மரியாதை' செலுத்தும் இந்த "சிப்பாய் கள்" யாரய்யா..? இந்த... நீங்கத்தான் அன்னிக்கு 'கொழந்தையா..?'
இங்கிலாந்து ராணிக்கு சல்யூட் அடிக்கும் டவுசர்கள்... தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங் வாரிசுகளைப் பார்த்து தேச துரோகி என்பதா? வழக்கு போடுவதா? 

காலம் மாறும்;  கம்யூனிஸ்ட் தேசப்பக்தியை தேசம் உணரும்! அரடவுசர்களின் 'அரைநாண்கயிறு' அறுக்கப்படும்!
----\\\\
[10:21, 2/27/2016] Senthan Chennai: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு செய்தி தவறு
[10:22, 2/27/2016] Senthan Chennai: புகைப்படம் உண்மையில்லை
----\\\\
புதிய தலைமுறை TV க்கு... கோடி புண்ணியம்! 
21.2.16 PTTV இல் மாலை 4 மணி முதல் 5 மணி முடிய "தலைவர்களுடன்" நிகழ்ச்சியை பார்த்தேன்! மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜிஆர், முத்தரசன், திருமா இவர்களுடன்...

முதல் கட்ட பரப்புரையின் போது சிறப்பு தொகுப்பாளராக கார்த்திச்செல்வன் உடன் சென்று... தலைவர்களுடன் அளவலாவிதோடு, அவர்களின் உள்ளங்களை தோண்டியது அலாதி! அருமை! அற்புதம்! 

தலைவர்களின் உருக்கு போன்ற ஒற்றுமை... தமிழகத்தின் ஓர் அரிய அதிசயமே! ஆம், அந்த அதிசயப் பதிவை கண்டு புல்லரித்துப் போனேன்! என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்!
புதிய தலைமுறைக்கு கோடி புண்ணியம் உரித்தாகட்டும்! 

அதன் கருத்து கணிப்பு எப்படி வந்திருந்தாலும், திமுக அதிமுக வுக்கு "மாற்று" மக்கள் நலக் கூட்டணி என்கிற வகையில், இதுவரை "உரிய இடம்" தந்தே வருகிறது! நன்றி PTTV க்கும், தோழர் தொகுப்பாளர் கார்த்திச்செல்வன் க்கும்! தொடரட்டும் PTTV யின் மக்கள் நலக் கூட்டணிக்கான ஆதரவு!
---\\\\
 "தொல்லைமணி" ஆகிய நான்...
#தமிழகத்தில் சாதிவெறி காடாக மாற்றுவேன்...
#ஒரு பக்கம் மரங்களை வெட்டுவேன்; இன்னொரு பக்கம் மரங்களை நடுவேன்...
#தேர்தல் பணிகளைகூட திமுக பாஜக போல் அன்னிய கம்பெனிகளிடம் ஒப்படைத்திருப்பதைப் போல் தமிழகத்தின் வளங்களையும் ஒப்படைத்து விடுவேன்...
#கட்ட பஞ்சாய்த்துகளை கட்டவிழ்த்து விடுவேன்...
#தலித்துகளை அவர்களது வாழ்வாதாரங்களை அழிப்பேன்...
#குறிப்பாக சமத்துவமாக மக்கள் வாழ விடாமல் 'நாடக காதல்' என 'நாமகரணம்' சூட்டி தண்டவாளங்களுக்கும், தீ சூவாலைகளுக்கும் தலித்க்களை பலிகொடுப்பேன்...
#சாதி மத துவேசங்களை விசிறி விடுவேன்....
#இந்த தேர்தல் முடிந்தபின் நிச்சயமாக மெரினாவில் சுண்டல் விற்க போய்விடுவேன்...
#பாஜகவுடன் ஒருவேளை சேர்ந்துவிட்டால், மத்திய மந்திரி ஆகி, சொந்தங்களை தெருவில் விட்டு போய்விடுவேன்....

"மாற்றம்" "காட்டுமனிதனை நோக்கி பின்னேற்றம்" "தொல்லைமணி"
----\\\\
மக்கள் ஆதரவு... 
மக்கள் ஆதரவு... லஞ்ச-ஊழல் அற்ற மக்கள் நலக் கூட்டணிக்கே!

மக்கள் ஆதரவு... மாசு மறுவற்ற மக்கள் நலக் கூட்டணிக்கே! 

மக்கள் ஆதரவு... ஜாதி மத பாகுபாட்டை ஏற்காத மக்கள் நலக் கூட்டணிகே!

மக்கள் ஆதரவு... ஊழல் வழக்குகளில் நீதிமன்ற வாசலை மிதிக்காத மக்கள் நலக் கூட்டணிக்கே!

மாற்று அரசியலை முன் வைக்கும் சமூக ஆர்வலர்களுக்கு.. இசைவான மாற்று... மக்கள் நலக் கூட்டணியே!

குழப்பத்தின் உச்சியில் தேமுதிக தமாக... குழப்பம் களைந்து, மக்கள் நலக் கூட்டணியில் சேரட்டும்!
----\\\\\
நன்று... அருமை... அன்பு..!
இன்று 28.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள்... ஞானி, பத்ரி, ஜென்ராம்... விவாதம் ... திருமா செய்திதாள் நேர்காணல்; கட்சிகளின் செய்திதாள் விளம்பரம் பற்றியதாக இருந்தது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் நேர்காணல்... "இன்னும் கவனமாக இருக்க வேண்டும்" என்பதை உணர்த்தியதாக இருந்தது.

குறிப்பாக "குறிப்பிட்ட ஒரு கட்சி ஓட்டைதான் பிரிப்போம் என்று கூறாமல்... அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சிகளை விரும்பாதவர்கள், எங்களின் செயல்திட்டத்தை விரும்புபவர்கள் ஓட்டையே கேட்கிறோம் என்ற பாணியில் இருத்தலே நன்று" என்று கருத்து தெரித்தது மிகுந்த நன்று! 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அன்பான வேண்டுகோளாக இருந்தது... நன்று... அருமை... அன்பு..!

பத்திரிக்கையில் வரும்  விளம்பரம்... எதற்கு? என்று கூற வேண்டியதை கூறாமல் விட்டுவிட்டனர். அதாவது, அந்த பத்திரிக்கைகள் "வரிந்துக் கட்டிக் கொண்டு விழுந்து விழுந்து ஆதரிக்க வேண்டும்" என்றதை தவிர வேறெந்த 'பொடலங்காய்' யும் கிடையாது அல்லவா?

நேற்று நடந்த பாமக மாநாடு மற்றும் அதன் விளம்பரம் குஜராத் விளம்பர கம்பெனி (மோடியை முதல்வராக பிரதமராக ஆக்கியவற்றில் ஒன்றை) பயன்படுத்தி, மத்திய மந்திரியாக இருந்தபோது "சம்பாதித்த" பணத்தை கொட்டுகிறார்கள். திமுகவை கேட்கவே வேண்டும்; அதிமுக வை பற்றி சொல்வது கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையே! எப்படியோ விளம்பம் குறித்த விவாதம் துணிச்சலே!
----\\\\
பாமகவின்... மது, ஊழல் அற்ற ஆட்சி... லட்சணம்..!
குஜராத் விளம்பரக் கம்பெனியிடம் தேர்தல் செலவுகள் உள்ளிட்டு அனைத்தையும் பாஜக மோடி பாணியில்...
திமுக ஸ்டாலின் பாணியில்... ஒப்படைத்து விட்டு, கோடிக்கோடியாக கொள்ளையடித்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் இவர்களா ஊழல் அற்ற ஆட்சியை தர போகிறார்கள்?

மது கடை மாநாடு நடக்கும் பகுதியில் விடுமுறை விட்டுவிடப் போதும், தாங்கள் கொண்டு வந்த அந்த மதுவை மிக அருமையாக ருசித்து அருந்திக் கொண்டிருக்கும் இவர்களா மது இல்லா ஆட்சி தர போகிறார்கள்?
----\\\\
எது? எது? எது?
"கிங்"தான்... முக்கியமா?

"பேடு கிங்ஸ்" அன்டு 
"பேடு குயின்ஸ்" களை அகற்றுவதும்... 

மீண்டும் 'அவர்கள்' ஆட்சியில் அமராமல் பார்த்துக் கொள்வதும்... முக்கியமா? 
#
என்னய்யா... 
இப்டி லேட் பன்றீயேய்யா..!
----\\\\

 "நாங்க கல்லூரியில அரசியல் செய்தா..''
 "அதானியும் அம்பானியும் வியாபாரத்தில் அரசியல் செய்யலாம்..."

"அத்வானியும், மோடியும் அரசியலில் வியாபாரம் செய்யலாம்..."

ஆனா... "நாங்க கல்லூரியில அரசியல் செய்தா... அது தேச துரோகமாப்பா..?"

இப்ப... 
"உங்க மேல... ராகுல் மேல... யெச்சூரி மேல... தேசாய் மேல... ன்னு 9 பேரு மேல தேச துரோக வழக்கா? 
என்னங்கப்பா அவுங்க நியாயம்?"   

"அதுதாம்மா பாசிசம்..!  அத விரட்டறது தாம்மா இந்திய மக்கள் முன்னுள்ள தேசபக்த பணி..!" 

-அபரஜிதா-ராஜா 
(மகளும் தந்தையும்)
----\\\
ஏழைகளுக்கு ஏமாற்றமே! 
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு விவசாயி சாவதைத் தடுக்க ஒன்றுமில்லையே!

கடனை தள்ளுபடி செய்தாலே ஒழிய விவசாயிகளைக் காக்கும் பட்ஜெட்டாக இது இருக்காது!

வருமான வரி வரம்பில் உயர்வில்லாதது நடுத்தர மக்களை நடுதெருவில் நிறுத்தவே வகை செய்யும்!

மான்யத்தை வெட்டிவிட்டு 5 ஆண்டில் இரட்டிப்பு வருமானம் விவசாயிக்கு கிடைக்கும் என்பது வாய்பந்தல்!

பட்ஜெட் முழக்கம் முதலாளிகளுக்கு சாத்தியம்; ஏழைகளுக்கு ஏமாற்றமே! வழக்கமான வெற்று முழக்கமே இந்த பட்ஜெட்டும்!

இன்று 29.2.16 PTTV நேர்பட பேசு!
----\\\\
ஓ..!
"பரீட்சையில் பிரதமர் மோடி பாஸாகி விட்டார்" என கருணாநிதி பாராட்டு! 
அப்புறம்... "இது அமலாகுவது குறித்து வைத்தே கூற முடியும்" என்றும் லேசா கூறியுள்ளார்! 

ஒரு பக்கம் காங்கிரஸ்வுடன் உறவு; இன்னொரு பக்கம் பாஜக வுடனும், அதன் பட்ஜெட் மீதும் காதல்! எப்படி முடியுது கருணாநிதியால்... இரண்டு குதிரையில் சவாரி..!? 

பட்ஜெட் டில் "பெரு முதலாளிகளுக்கு ரூ1,060 கோடி வரிச்சலுக்கை; ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மறைமுக வரி ரூ60,600 கோடி!" என உள்ளதே! 

இதுதான் மோடி பாஸான லட்சணமா? கருணாநிதியாரே! ஓ..! இதுதான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு என்பதா? 

முதலாளிக்கான பட்ஜெட் தருவதில் வேண்டுமானால் மோடியும், ஜெட்லியும் பாஸாகி இருக்கிறார்கள் எனலாம்! அதுசரி... சன் குழுமம் நிறுவனரான இவர் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமடைய ஒன்றும் இல்லை
----\\\\
கறுப்பு கண்ணாடியை கலட்டி வைத்துவிட்டு...
தமிழ்நாட்டின் நாடி கணிப்பு முடிவுகள் (?!) உணர்த்துவது-- கணிப்பு நடத்துபவர்கள் - நிறுவனங்கள் யாவும்-- "திமுக - அதிமுக ஆகியவைகளையே இதர வளரும் கட்சிகள் சுத்திக் கொண்டிருக்கட்டும்; தனித்துவமான மாற்று எதுவும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாது" என்பதைத்தான்!

ஊழலுக்கு எதிரான மனநிலை மட்டுமல்ல, டாஸ்மாக், கனிமம் உள்ளிட்டு இயற்கை வளம் கொள்ளை, தொடரும் தீண்டாமை போன்றவையும் நிச்சயம் மக்கள் மனநிலையில், மாற்றத்தை ஏற்படுத்தியே தீரும்; அதற்கான வலுவான மாற்று வாகணமாக...  சாரதியாக... நாளுக்கு நாள் மக்கள் மத்தியில், "மக்கள் நலக் கூட்டணி" பரிணமித்துக் கொண்டே வருகிறது!

மாற்று சக்தியை தீர்மாணிக்க முடியாதது ஏன்னென்றால்... ஊடகங்கள் அணிந்திருக்கும் கறுப்பு கண்ணாடியும், அதிமுக, திமுகவின் அய்ம்பது ஆண்டுகள் ஆட்சியால், வேறோடி போய் கிடக்கும் சுயநலவெறியும் தான்!

ஊடகங்கள் (செய்தி-காட்சி) தனது கறுப்பு கண்ணாடியை கலட்டி வைத்துவிட்டு, சரியான மாற்று இதுதான் என்று சொல்லும் இடதுசாரிகள் உள்ளிட்டு இருக்கும், வாராத வந்த மாமணி போல் வந்திருக்கும் "மக்கள் நலக் கூட்டணி" குறைந்தபட்ச செயல்திட்டத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும்; அதிமுக-திமுக போதையில் மயங்கி கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி, துணிவுடன் நெஞ்சை நிமிர்த்தி பரப்புரை செய்தாலே... அதை செய்வோருக்கு... குறிப்பாக  மக்கள் நலக் கூட்டணிக்கு உதவினாலே போதும்...! எல்லாவற்றிக்கும் மேலாக திமுக, அதிமுக வுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு என்கிற பெயரில் .. கருத்து திணிப்பு (கட்சி சார்பற்ற ஊடகங்கள் என சொல்லிக் கொள்பவை) செய்யாமல் இருந்தாலே போதும்.... மாற்றம் வந்துவிடும்!

இன்று 16.2.16 PTTV நேர்படபேசு!
-----\\\\
நமோ வாய் திறக்க மறுக்கிறதே ஏன்?
தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் 12 க்கு 7 இல் வெற்றி பெற்றதற்கு-- "வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி" என்கிறார் பிரதமர் நமோ! அப்படி யென்றால் பிகாரில் நடந்த பொதுத்தேர்தலில் 30 க்கும் மேற்பட்ட பிரச்சார பிரமாண்ட கூட்டம் நடத்தி, அதில் நமோ பரப்புரை செய்தும் படுதோல்வி அடைந்ததே பாஜக..! அதற்கு பெயர் என்ன?

பரவாயில்லை... சட்டமன்ற  இடைத்தேர்தல் முடிவுகளுக்குக்கூட கருத்து சொல்ல நேரம் இருக்கிறதே! ஆனால்... உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாசிச தாக்குதலுக்கு எதிராகவோ, மக்கள் ஒற்றுமையை குலைக்கும் இந்துத்துவா பாசிச தாக்குதலுக்கு எதிராகவோ நமோ வாய் திறக்க மறுக்கிறதே ஏன்?
---\\\
"அழகிரி பேச்சை அவரது மகனே கேட்க மாட்டார்" என்கிறார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்! அதுசரி... கருணாநிதி பேச்சை அவரது 'மகன்' 'மகள்'கள் கேட்கிறார்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் அய்யா?
----\\\\ 
கொஞ்சம் சொல்லுங்க... சாமிகளா..! சொல்லுங்க..!
"நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுள் கால உறுப்பினராக கருணாநிதி சேர்ப்பு!"  (இது செய்தி: 19.2.16)
##
ஆயுள் காலம் முழுவதும் நடிப்பை தொழிலாக கொண்டிருப்பது ஒருவகை! ஆயுள் காலம் முழுவதும் தொழிலிலே நடிப்பாக கொண்டிப்பது இன்னொருவகை! இவர் எந்த வகை நடிகரென்று நடிகர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினராக்கி உள்ளீர்கள்..? 

கொஞ்சம் சொல்லுங்க... சாமிகளா..! சொல்லுங்க..!
---\\\
சொல்வதும் பல்டியடிப்பதும்தான்...!? 
"விவசாயிகள் தற்கொலை பேஷன் ஆகிவிட்டது"  என்று பாஜக MP கோபால் ஷெட்டியின் திமிரான பேச்சு! வலுவான எதிர்ப்பு கிளம்பியவுடன், "விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதில் அரசுகள் போட்டா போட்டி போடுவது பேஷனாகி விட்டதென என்றுதான் சொன்னேன்" என ஷெட்டி பல்டி அடித்துள்ளார்! சொல்வதும் பல்டியடிப்பதும்தான் பாஜகவும் பாசிச குணமும்!
---\\\
'மநு' வை கொளுத்தாமல்.. எப்படி..? 
"ஜாதி,மத கலவரத்திற்கு முற்றுப்புள்ளி ஆன்மிகவாதிகளால் தான் முடியும்!" என வாழும் கலை குருஜி (?) ரவிசங்கர் கும்பகோணம் துறவிகள் மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார்! 

இவருக்கும் 'மநு' தர்மத்திற்கும், பாஜகவுக்கும், இந்துத்துவாக்கும், மோடிக்கும் உள்ள உறவு உலகறிந்த ரகசியம்! அப்படி இருக்க ஜாதி, மத மோதலுக்கும் துவேசத்திற்கும், தீண்டாமை கொடுமைக்கும் ஊற்றுக்கண் எது? யார்? என்பது ஊரறிந்த ரகசியம்! 

'மநு' தர்மத்தை தீயிட்டு கொளுத்தாமல், எப்படி சாமி ஜாதி, மத மோதல்களுக்கு உங்களால் முடிவு கட்ட முடியும் வாழும் கலை வாத்தியாரே... காவி வாத்தியாரே..!
----\\\
ஏவல் துறையே... 
அரை நிர்வாணமாக வந்தாங்க... DYFI போராட்டக்காரங்கன்னு... எங்க தோழர்கள போட்டு மிதித்ச்சி எடுத்தீங்களே... 
சேலம் காவல் ஏவல் துறையே... 

நீங்க சரியான "மானங்காக்கும்" துறைகளாக இருந்தா... அம்மா கிட்ட கேட்டோ, கேட்காமலோ... நேராக நாக்பூர் போய் இந்த "அரடவுசருகள" புடிச்சி, எங்க DYFI தோழர்கள 'கவனிச்ச' மாதிரி 'கவனிச்சிங்கனா...' நீங்க..... "முழு டவுசரு" போட்ட மவுனங்க... செய்வீங்களா? 

ஆமா.. உங்க போலீஸ்சு தொறைங்க வூட்டுல படிச்சிபுட்டோ... படிக்காமலோ... பசங்களே...(ஆண்,பெண்) இல்லையா மூதேவிங்களா..? அதுக்கும் சேதுத்தான் இவிங்க 'அரை நிர்வாண நூதன போராட்டம்' தெரியுதா புண்ணாக்குங்களா?
----\\\\
"மநு"வும் "மது"வும்!
மக்களை போதையில் ஆழ்த்தி, புத்தியை பேதலிக்கச் செய்வது... "மநு"வும் "மது"வும்! 

இவை இரண்டும் ஒழிக்கப்படுவதில் தான் எதிர்காலமே இருக்கிறது! இதில் ஒன்றை (மது) ஒழிக்க அரிய வாய்ப்பு "மக்கள் நலக் கூட்டணி" தமிழகத்தில்..! 

மதுவை ஒழிப்போம்.. மக்களை நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவோம்! மநு வை ஒழிக்கும் போரும் இதில் இணைந்தே இருக்கிறது!
----\\\\
ஆர்எஸ்எஸ் 'நீசத்தனம்' சாம்பலாக்கப்படும்!
"மாவோஸ்ட்களுடன் பேச்சு நடத்த தயார்" என நீட்டி முழங்கி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்... நாட்டின் பாதுகாப்பைக் கருதியாம்! 

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே... ஆர்எஸ்எஸ்தான்! அதன் பாசிச குணமும் கோலோச்சும்தான்! அதுசரி, பாசிசத்தையும், பன்னாட்டு-இந்நாட்டு சுரண்டல் வர்க்கத்தையும் எதிர்ப்பவர்கள்... உங்களுக்கு "அப்படி"தான் தெரியும்! 

இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு மீது ராஜ்நாத்சிங்குக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் பொங்கி வழியுற "பாசத்தை"ப் பார்த்தால் அப்படியே புல்லரித்து போகுது போங்க!  

மாவோஸ்ட்களுடன் பேச வேண்டாமென்று யாரு உங்க கையையும், காலையும் புடிச்சிக்கிட்டாங்க..? உங்க காவி கும்பல்தானே..? 

அய்யா சாமி.. நீர் மாவோஸ்ட் கூட பேச்சும் நடத்துவீர்; மாவோஸ்ட்டாக கூட மாறுவீர்! ஏனா... 'தேச பக்தன் இவன்; தேச விரோதன் இவன்' என குத்தும் "முத்திரை"யை 'லீசு'க்கு  இப்ப நீங்க எடுத்திருக்கிறீங்க  இல்லிய்யா..!?

அதனால... இதையும் பேசுவீங்க; இதுக்கு மேலேயும் பேசுவீங்க! எந்த வேசமும் போடுவீங்க; உலக மகா நடிகர்கள் அல்லவா ஆர்எஸ்எஸ் அடலேறுங்க...! இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்சதுதாங்க..!

தேசபிதாவை சுட்டு கொன்ற நீங்க பேசுறீங்க...தேசபக்தியைப் பற்றியும், தேச நலன் பற்றியும், தேச பாதுகாப்பைப் பற்றியும்! 

இந்த 'தில்லாலங்கிடி' வேலையை மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்! ஒருநாள்... எரிமலை வெடிக்கும்! அதில் உங்களின் 'நீசத்தனம்' சாம்பலாக்கப்படும்!
---\\\
தினமணியா? ஆர்எஸ்எஸ் ஊதுகுழலா?

இன்று (20.2.16) 'மக்கள் கருத்து'... 

"அடிப்படைவாதிகளின் புகலிடம்தான் ஜேஎன்யூ என ஆர்எஸ்எஸ் கூறியிருப்பது.." 

#ஏற்கலாம்-70%; 
#திசை திருப்பல்-15%; 
#வீண் புகார்-15% 

என பதிவிட்டு உள்ளது. 
அதுவும் தமிழகத்தில்... தமிழ் பத்திரிக்கையில்...  இது தான் தினமணி! 

இதைதான் நடுநிலை நாளேடு என வாங்கி தொலைத்துக் கொண்டிருக்கிறோம்! இதைவிட ஒன்று... இந்தியாவில் ஆர்எஸ்எஸ் ஊதுகுழல் இருக்க முடியுமா..?
----\\\\
தொகுதி நிர்வாகிகள்..
மக்கள் நலக் கூட்டணி வீரப்பாண்டி தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று  20.2.16 திவ்யா தியேட்டர் அருகில் விகே.அருணாசலம் மதிமுக பனை ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.மோகன், விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் செ.அய்யாவு மற்றும்  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.சேதுமாதவன் உள்ளிட்டோர்... 

மார்ச் 1ந்தேதி தொகுதி செயல்வீர்கள் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் கொண்டு செல்வதென முடிவானது!
----\\\\
மக்கள் நலக் கூட்டணியின் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று  20.2.16 சேலம் சிபிஐ அலுவலகத்தில்  விசிக மாநகர மாவட்ட பொருளாளர் சுஹைல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.மோகன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்டோர்... 

சேலம் வடக்கு 29.2.16; சேலம்  தெற்கு 1.3.16; சேலம் மேற்கு 3.3.16 தேதிகளில் தொகுதி செயல்வீர்கள் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து செல்வதென முடிவானது!
மக்கள் நலக் கூட்டணி ஏற்காடு தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று  21.2.16 அயோத்தியாப்பட்டிணம் சிபிஐ அலுவலகத்தில்  விசிக ஏற்காடு தொகுதி செயலாளர் ஆ.பாவளன் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, ஏற்காடு வட்டச்செயலாளர் டி.பழனிசாமி, வாழப்பாடி வட்டச் செயலாளர் வி.பழனிமுத்து, சிபிஐ மாவட்டச் துணைச் செயலாளர் எ.மோகன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் மதிமுக ஒன்றிய செயலாளர் எம்.மாரப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்!

2.3.16ல் ஏற்காடு தொகுதி செயல்வீர்கள் கூட்டம் அயோத்தியாப்பட்டிணத்தில் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து செல்வதென முடிவானது!
----\\\\
சேலத்தில்...  
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் எழுச்சி உரை ஆற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! 25,000 பங்கேற்க முடிவு! 
##
2.3.16 மாலை 6 மணிக்கு சேலம் போஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்திடுவதென 25.2.16 மாலை நடந்த சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் தலைமையில், சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. 

ஆலோசனை கூட்டத்தில் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந.மகேந்திரவர்மன், விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிக.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வசந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
----\\\\
" 'கிங்' கா? 'கிங்' மேக்கரா? என்றால்..." (!?) 
முதல்வரா? முதல்வரை உருவாக்குவரா? என்ற முழக்கம் உண்மையிலேயே உண்மை யதார்த்தம் என்றால்... 

அதற்கு ஒரே மாற்று... மாற்று அரசியலை முன் வைத்து எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் "மக்கள் நலக் கூட்டணி" தான்! சேருமா அதில் தேமுதிக...? 

இதுதான் தமிழக மக்களின் மில்லியன் டாலர் கேள்வி!?
----\\\\
"பகத்சிங் நினைவகம்" திறப்பு!
சிபிஎம் வாழப்பாடி வட்டக்குழு அலுவலகம் "பகத்சிங் நினைவகம்" இன்று 21.2.16 அயோத்தியாப்பட்டிணத்தில்... மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு திறந்து வைத்தார்.

சிபிஎம்  மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், வட்டச் செயலாளர் வி.பழனிமுத்து, ராம்நகர் கிளை செயலாளர் நாகராஜ், DYFI  மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், உள்ளிட்டோர் பங்கேற்பு...
----\\\\
 'எதற்கு இந்த தகிடுதத்தம்?' 
இன்று  22.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பாஃபா பாண்டியன்... 

"அதிமுக எம்எல்ஏ க்களைவிட எதிர்கட்சி எம்எல்ஏகள்தான் அதிகமான சலுகைகளை பெற்றார்கள்" "தொகுதிக்கு நல்லது (?)செய்வதற்க்காகதான் எம்எல்ஏவை ராஜினாமா செய்யாமல் அதிமுகக்கு ஆதரவாக 8 எம்எல்ஏக்கள் இருந்தோம்" "தேமுதிகவில் போன ஒருவர் அப்பொழுதே எம்எல்ஏவை ராஜினாமா செய்தாரே" என்றதற்கு... 'அவருக்கு உடல்நிலை சரியில்லை' என கூசாமல் கூறுகிறார்!

பாண்டியரே... சிதம்பரம் தொகுதியில் தோழர் கே.பாலகிருஷ்ணன்... 'அண்ணாமலை பல்கலை அரசு ஏற்றது' உள்ளிட்டு செய்தார் என்றதற்கு நன்றி! அதை உங்க அம்மா அரசு சும்மா செய்யவில்லை; அதற்காக மாணவர்களும், மக்களும் கேபி எம்எல்ஏ தலைமையில் நடந்த போராட்டம் கொஞ்சமா? நஞ்சமா?

'இது முழுக்க முழுக்க அரசியலே' என ஷாநவாஸ் சரியாக பதிலடி கொடுத்தார் (தற்போது பதவி விலகல்)! 

அதுசரி... அப்படி என்றால், பாலகிருஷ்ணன் மக்களுக்கு செய்தததுபோல் நீங்களும் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்து, உங்கள் 8 தொகுதி மக்களுக்கு அதிமுகக்கு ஆதரவாக போகாமல், "செய்து" இருக்கலாம் அல்லவா? அல்லது அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை; செய்யவில்லை என பழ.கருப்பையா சொன்னதையே வேறுவிதமாக சொல்கிறீர்களா? 

எது பாண்டியரே எது? எதற்கு இந்த தகிடுதத்தம்! தில்லாலங்கடி வேலை? மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
----\\\\
கெயில்... 
# கெயில்....நிறுவனத்திற்கு விவசாயிகளுக்கு விரோதமாக அனுமதி வழங்கிய உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தும்...
# விவசாயிகளுக்கு பாதகமில்லாமல், நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே வழியில் இத்திட்டத்தை அமலாக்க கோரி... 
# விவசாயிகளுக்கு விரோதமான PMP சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திடவும்...
# தமிழக அரசு சீராய்வு மனு மீது திறமைவாய்ந்த வழக்குரைஞர் மூலம் வாதாடிடவும் கோரி...
# விவசாயிகளின் இந்த எதிர்ப்பையையும் மீறி எரிவாயு குழாய் பதித்தால் எந்த தியாகமும் செய்து தடுத்தே தீருவோம் என்றும்...
##
சேலம் தபால் அலுவலகம் முன்பு இன்று 23.2.16 கெயில் எரிவாயு திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! 
##
தலைமை: பெ.சண்முகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர், கண்டன உரை: எ.மோகன்,சிபிஐ விச தலைவர், மாணிக்கம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர், எஸ்பி.தங்கவேல் சிபிஎம் விச மாவட்டச்செயலாளர்....
----\\\\
மாணவர் மீது அபாண்டபழி!
#புதுதில்லி JNU மாணவர் மீது அபாண்டபழி!#ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் உச்சம்! 
#இடதுசாரி தலைவர்கள் மீது தேசதுரோக அவதூறு!
#AISF மாணவர் கண்ணய்யா குமார் தேசதுரோக வழக்கில் சிறையடைப்பு!
#கோர்ட் வளாகத்தில் கொலைவெறி தாக்குதல்!
#ஆர்எஸ்எஸ் பாசிசத்தை வேரறுப்போம்   
##
மக்கள் நலக் கூட்டணி 23.02.2016 செவ்வாய் மாலை சேலம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்! நடந்தது!

தலைமை: ஏ.மோகன் சிபிஐ மாவட்டச்செயலாளர்

கண்டன உரை: பெ.சண்முகம் சிபிஎம் மாநிலசெயற்குழு, பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர், விசிக சௌ.பாவேந்தன் முன்னாள் மாவட்டச்செயலாளர், சிபிஐ மாநகர செயலாளர் ராசேந்திரன், விஜயக்குமார் மதிமுக பொதுக்குழு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்!
----\\\\
தேமுதிக வுக்கு பூஜ்யம் தான்...
மக்கள் நலக் கூட்டணிக்கு போனால் அரசியல் எதிர்காலம் தேமுதிக க்கு பிரகாசிக்கும்!

பாஜக விடம் போனால் அரசியல் எதிர்காலம் தேமுதிக க்கு சூன்யம் ஆகிவிடும்! 

"அவ்வளவு பெரிய மோடி அலை" அடித்தபோதே தேமுதிக வுக்கு பூஜ்யம் தான் கிடைத்தது!

தேமுதிக க்கு பாஜக திமுக காங்கிரஸ் பாமக பொருந்தா கூட்டணி! மக்கள் நலக் கூட்டணியே பொருந்தும்!

இன்று 23.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
புயல் மக்களவையில்...
குடியரசு தலைவர் உரை எப்படி இருந்தாலும் ஜேஎன்யூ வில் பாஜகவின் திருகுதாளம் அம்பலம் ஆக்கப்படும்! பாஜகவின் போலி தேசப்பற்று துகில் உறிக்கப்படும்! 

கம்யூனிஸ்ட்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் தேசபற்று பற்றி வகுப்பெடுக்கும் தகுதி, தேசபிதாவை சுட்டு கொன்ற ஆர்எஸ்எஸ்சின் முகமூடி பாஜகவுக்கு இல்லை என்ற புயல் மக்களவையில் மையம் கொள்ளும்! 

இன்று 23.2.16 news 7 ?கேள்வி நேரம்!
----\\\\
போலி தேசபக்தர்கள், கோயாபல்ஸ் ஆரம்பம்..!
இன்று 24.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி... மார்க்சிஸ்ட் அருணன், பாஜக சேகர், நெறியாளர் ஜென்ராம்... குடியரசு தலைவர் உரை, திமுக அதிமுக விளம்பரம் என சென்று ஜேஎன்யூ வை தொட்டது விவாதம்! எதிர்பார்த்ததைப் போல் காரசாரமாக வே இருந்தது! அருணனும், ஜென்ராமும் போட்ட கிடுக்கி பிடியில், கிறுக்கு பிடித்தவரைப் போல் சேகர் உளற... வெறிதனமாக கத்தோ கத்தென்னு கத்தினார். 

கம்யூனிஸ்ட்கள்  எங்கோ கோடிகணக்கானவர்களைக் கொன்று குவித்துவிட்டார்களாம்! இப்படி போகுற போக்கில் போட்டுவிட்டு போவதுதான் பாஜக ஆர்எஸ்எஸ்! தேசபற்றை குத்தகைக்கு எடுத்துள்ள இவர்கள்... இன்று பிரதமராக இருக்கும் மோடி ஆட்சியில் பல்லாயிர கணக்கில் முஸ்லீம்களை கொன்று குவித்தனர்..!

அது-- தற்போது இந்தியா முழுவதும் விஸ்தரிக்கப் போவதன் அறிகுறிதான் இந்த ஒன்னரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் லட்சணம்... அதன் முகமூடி கிழிந்து நன்றாக வெளியே வந்து உள்ளதை மிக அருமையாக ஆதாரமாக ஜென்ராமும், அருணனும் அடுக்கினர்! அருமை! சபாஷ்! 

பாஜகவினர் வழக்கமாக செய்வதை போல் சேகரும் துவக்கம் முதலே கத்தித்தீர்தார்! பொய்யர்கள், போலி தேசபக்தர்கள், கோயாபல்ஸ் இட்லர் வாரிசுகளிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்!?
----\\\
"ப்பிலடி நான்சென்ஸ்!"
நேற்று 23.2.16 news 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சியில்... தேசபக்தியின் இன்றைய ஹோல்சேல் டீலர்கள் போலி தேசபக்தர்களாம் பாஜகவின் ராகவன் பிரஸ்பதியிடம் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ் வளைத்து வளைத்து மீண்டும் மீண்டும் கேட்டார்..."அய்யா தேசபக்தர்களே... விடுதலை போரில் உயிர் நீத்த... அல்ல, பங்கேற்ற ஒரு ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக முன்னோடிகளை சொல்லுங்க" என்று!

"அப்ப இவங்க பொறக்கவே இல்லையாம்..!" ராகவனின் முத்துசிதறல்!

அடப்பாவிங்களா? தேசபிதாவை சுட்டு கொன்றானே... முஸ்லீம் போல் சுன்த் செய்து கொண்டு, இஸ்மாயில் என கையில் பச்சைக்குத்திக் கொண்டு... அவன் செய்த செயல் தேசபக்தியா? அவனுக்கு (நாதுராம் கோட்சே) சிலை வைப்பதும், அவனின் "தியாகத்திற்கு" சிலிர்த்து எழுவதும்தான் தேசபக்தியா? அவனின் அந்த தேசபக்த செயலை (தேசபிதாவை கொன்றதை) பாராட்டி கோர்ட்டு விடுதலை செய்ததா? அவனை நீங்கள் கொண்டாடுவது மட்டும் தேசபக்தியா? மூதேவிகளே... சொல்லுங்கள்! 

பத்து குழந்தை பெற்றவருக்கு மருத்துவச்சியாக போனாறாராம் தலைபிரசவகாரி..! அதுபோல்... தேசவிடுதலைக்கும், பெற்ற விடுதலையை பாதுகாக்கவும் இன்றளவும் தன் இன்னுயிரை ஈய்ந்து வரும் கம்யூனிஸ்ட்களைப் பார்த்து... விடுதலை போரை காட்டிக் கொடுத்தக் காவிக்கும்பல் விரல் சுட்டுவதற்கு என்ன யோகியதை இருக்கு? ப்பிலடி நான்சென்ஸ்!
----\\\\
திமுக அதிமுக விளம்பர சர்ச்சைகள்...
திமுக அதிமுக விளம்பர சர்ச்சைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது! 

ஊடக விளம்பரங்கள் யாவும் திமுக அதிமுக வின் கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் மோசடியே! உத்தியல்ல இது!

திமுக அதிமுக ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொள்வதில் அருகதை அற்றவைகளே!  

இன்னாள் (அதிமுக), முன்னாள் (திமுக) அரசுகள் செய்யாத மக்கள் நல காரியங்களை சுட்டிக்காட்டிட அருகதை உள்ள ஓரே அணி மக்கள் நலக் கூட்டணியே!

இந்த மாதிரியான விளம்பரம் கன்றாவியானதே! அசிங்கமான பாடல் வரிகள் இது! இதை பயன்படுத்து அசிங்கத்திலும் அசிங்கம்!
----\\\
 "நீதி பிழைக்குமா..?!"
தற்போது நடந்து வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 2வது நாளாக நடந்த விசாரணையில் ஓரிடம்... 2 நீதிபதிகளில் ஒருவர் குறுக்கிட்டு கேட்கிறார்...

"1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்தாரா?" என்று.  

அதற்கு கர்னாடக அரசு வழக்குரைஞர் கூறுகிறார்... 

"சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்த பிறகே, தாக்கல் செய்தார். வருமான வரிதுறை ஏற்றுக்கொண்டதாலே ஜெயலலிதாவின் வருமானம் சட்டப்பூர்வமானது என ஏற்க முடியாது..." என்று. (இந்துதமிழ்:25.2.16) 

தீர்ப்பு எப்படி வரும் என்பதற்கு இது ஒரு அறிகுறியாக இந்த தற்குறிக்கு தோன்றித் தொலைக்கிறதே! இது-- (இந்த தற்குறியின் சந்தேகம்) பொய்யானால் நீதி பிழைக்கும்!
----\\\\
சிபிஎம் கொடியேற்றுவிழா..!
சேலம் ஆத்தூர் தமையனூரில் சிபிஎம் கொடியேற்றுவிழா 25.2.16 இல் கிளை செயலாளர்  டி.அய்யனார் தலைமையில் நடைபெற்றது!

சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், ஆத்தூர் தாலூக்கா செயலாளர் பிஆர்.மாதேஸ்வரன், வட்டக்குழு உறுப்பினர்கள்  இல.கலைமணி, எம்.ராமசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி, கே.பெருமா, கே.ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். டி.பொன்ராமன் நன்றி கூறினார்...
----\\\\
கல்வராயன்மலையில் சிபிஎம் சிறப்பு பேரவை! 
25.2.16 மதியம் கருமந்துறை கட்சி அலுவலக நிலத்தில் இடைக்குழு உறுப்பினர் ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தைவேல், பிஆர்.மாதேஷ்வரன், கல்வராயன்மலை இடைக்குழு செயலாளர் ஏ.பொன்னுசாமி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். 

2.3.16 அன்று சேலத்தில் நடைபெற உள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 500 மலைவாழ் மக்கள் கலந்திடுவதென முடிவெடுக்கப்பட்டது!
-----\\\\\
என்றுமே ஏமாற்றமே!
ரயில்வே பட்ஜெட் தமிழ்நாடுக்கு இன்றல்ல, என்றுமே ஏமாற்றமே!

தனியார்மய நடவடிக்கை தனியாருக்கு தித்திப்பு! மக்களுக்கு தீங்கு! 

கட்டணம் உயர்வில்லா ரயில்வே பட்ஜெட் என்பது கண்துடைப்பு! 

தனியாருக்கு தாரைவார்க்கும் ஏற்பாடே கட்டணமில்லா பட்ஜெட்!

# 25.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
"குளோஸ்!"
தேமுதிக முடிவெடுக்கும் போது கூட்டணி குழப்பம் "குளோஸ்!"

என்ன முயற்சி செய்தாலும், பாஜக பாடு திண்டாட்டமே!  

பாஜவுடன் யார் சேர்ந்தாலும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை நிராகரித்திடுவர்!
---\\\

No comments:

Post a Comment