"ஸ்பேஸ்" அளித்த...
ஜென்ராமுக்கும், துரைசாமிக்கும் நன்றி..!
இன்று 27.9.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... மார்க்சிஸ்ட் கண்ணன், அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்!
திமுக ஸ்டாலினின் கடந்த காலம் தவறு நேர்ந்திருந்தால் மன்னிப்பு கோரும் பேச்சு.. (என்னா நடிப்பு!); பீகார் தேர்தலில் கிரிமினல்களுக்கு சீட் விற்கப்படுவதாகவும், அதனால் பாஜகவுக்கு கிரிமினல்களுக்கு (மானக்கேடு) தருவதாக வடக்கே பாஜக தலைவரின் பேட்டி; தமிழருவி மணியன் பேட்டி என நீண்டது..!
மாணவர்கள் அரசியலால் பாதிப்பதும், அதனால் கட்சிக்கு முழுநேர ஊழியர்கள் கிடைப்பார்கள் அல்லவா? என்ற அர்த்தத்தில் ஜென்ராம் கொண்டு போனது... மிகுந்த வருத்தம்; இவரிடமிருந்து இப்படி பொதுவழியில் நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
(தோழர் கண்ணனை நினைத்துகூட, அல்லது பெருமை சேர்க்கும் விதமாககூட, கையாண்டிருக்கலாம்; எப்படி இருந்தாலும் அது நெருடல்!)
என்றாலும் கண்ணன் விவாதத்தின் ஊடே இளைஞர்களுக்கு அரசியல் அவசியம் என்றும், மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் இணைத்ததும் 'டாப்!'
தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டியக்கம் குறித்து ரவீந்திரன் துரைசாமி எழுப்பிய அச்சம் நியாயமே; தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் இந்த கூட்டியக்கம் மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது;
ஆதாரம்: சில நாட்களுக்கு முன் தமிழ் இந்து கருத்து கணிப்பில் 31% வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலன் சார்ந்தே, அவ்வப்போது முடிவெடுத்து செயல்படுகிறதே ஒழிய, தனிநபர் அல்லது குடும்ப நலன் சார்ந்து எந்த காலத்திலும் முடிவெடுத்தில்லை; செயல்பட்டதுமில்லை என்பதை மிக சரியாக தனது சாமார்த்தியம் சார்ந்து தோழர் கண்ணன் பதில் அளித்ததும், அதற்கான "ஸ்பேஸ்" அளித்த ஜென்ராமுக்கும், துரைசாமிக்கும் நன்றி.
நெறியாளர் மற்றும் ஆய்வாளர் இருவருமே மார்க்சிஸ்ட் கட்சி மீதும், அதன் மக்கள் சார்ந்த முடிவு மீதும் உரிய பொருத்தமான "இடம்" அளித்தது மகிழ்ச்சி! சறுக்கலற்ற அமைப்பு நாட்டில் ஏதுவும் இல்லை; ஆனால் அது யாருக்காக? மக்களிக்காகவா? தனி நபர், குடும்பம் சார்ந்தா? என்பதுதான் முக்கியம் அல்லவா?
----\\\\\
"நாட் ஒன்லி கம்யூனிஸ்ட்!"மாணவர்கள் அரசியலால் பாதிப்பதும், அதனால் கட்சிக்கு முழுநேர ஊழியர்கள் கிடைப்பார்கள் அல்லவா? என்ற அர்த்தத்தில் ஜென்ராம் கொண்டு போனது... மிகுந்த வருத்தம்; இவரிடமிருந்து இப்படி பொதுவழியில் நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
(தோழர் கண்ணனை நினைத்துகூட, அல்லது பெருமை சேர்க்கும் விதமாககூட, கையாண்டிருக்கலாம்; எப்படி இருந்தாலும் அது நெருடல்!)
என்றாலும் கண்ணன் விவாதத்தின் ஊடே இளைஞர்களுக்கு அரசியல் அவசியம் என்றும், மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் இணைத்ததும் 'டாப்!'
தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டியக்கம் குறித்து ரவீந்திரன் துரைசாமி எழுப்பிய அச்சம் நியாயமே; தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் இந்த கூட்டியக்கம் மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது;
ஆதாரம்: சில நாட்களுக்கு முன் தமிழ் இந்து கருத்து கணிப்பில் 31% வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலன் சார்ந்தே, அவ்வப்போது முடிவெடுத்து செயல்படுகிறதே ஒழிய, தனிநபர் அல்லது குடும்ப நலன் சார்ந்து எந்த காலத்திலும் முடிவெடுத்தில்லை; செயல்பட்டதுமில்லை என்பதை மிக சரியாக தனது சாமார்த்தியம் சார்ந்து தோழர் கண்ணன் பதில் அளித்ததும், அதற்கான "ஸ்பேஸ்" அளித்த ஜென்ராமுக்கும், துரைசாமிக்கும் நன்றி.
நெறியாளர் மற்றும் ஆய்வாளர் இருவருமே மார்க்சிஸ்ட் கட்சி மீதும், அதன் மக்கள் சார்ந்த முடிவு மீதும் உரிய பொருத்தமான "இடம்" அளித்தது மகிழ்ச்சி! சறுக்கலற்ற அமைப்பு நாட்டில் ஏதுவும் இல்லை; ஆனால் அது யாருக்காக? மக்களிக்காகவா? தனி நபர், குடும்பம் சார்ந்தா? என்பதுதான் முக்கியம் அல்லவா?
----\\\\\
வெள்ளத்துரை என்கிற காவல்துறை அதிகாரி...
'போலீசைப் பற்றி எவனாது பேசினா, அவன தூக்கி 24 மணி நேரத்துல உள்ள போடு; நாட் ஒன்லி கம்யூனிஸ்ட்; யாரா இருந்தாலும் சரி; நம்ம அடி நெத்தியடியா இருக்கனும்!' என்று பேசி உள்ளார்.
இப்பொழுது இந்த வெள்ளதுரை என்கிற வெங்காயதொற ராமநாதபுரம் ADSP யாம்!
"காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறை"யாக உள்ளது!
யாரு பேசியது? ஒரு க்குளு...
'பேசி 4 வருசம் ஆகிறது!'
இவரு யாருன்னு கண்டுப்பிடித்து இன்னும் 24 மணி நேரத்தில் உள்ளே போட்டு...
"காவல்துறை ஜெயலலிதாவின் ஏவல் துறை அல்ல!"
என நிருபித்து, 'ஜனாதிபதி விருது' பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
----\\\\
சவுக்கால் அடிக்கலாமா?
தமிழகத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா?
அதுசரி, மத்திய அரசில் அன்புமணி ராம்தாஸ் அன்றைய ஆட்சியாளர்களின் தேர்தல் அறிக்கையை அல்லது அந்த தேர்தலில் வைத்த அறிக்கையை 100% அமலாக்கினார்களா?
வரும் தேர்தலில் பாமக ஒருவேளை ஆட்சியை பிடித்து விட்டால், 100% அமலாக்கவில்லை என்றால், என்ன செய்து?
மின்விளக்கு கம்பத்தில் தலைகீழாக தொங்கவிட்டு சவுக்கால் அடிக்கலாமா? (ஏற்கனவே அவர்தான் குடும்ப அரசியல் பாமக வில் மேற்படி செய்ய சொன்னார்!)
இன்று 23.9.15 PTTV மக்கள்மேடைக்கு!
----\\\\\
சபாநாயகர் கண்டு ரசிக்கிறார்!
தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சர்தான் சட்டசபை விதிமுறைகளை மீறுகிறார்! அதை சபாநாயகர் கண்டு ரசிக்கிறார்!
ஆனால் எதிர்கட்சிகளின் உரிமைகளை பறிக்கிறார்! ஒன்றிரண்டு எதிர்கட்சிகள் விதியை மீறியிருந்தால் அதற்கு பொறுப்பு ஆளும் முதல்வரும், அமைச்சரும், சபாநாயகரும்தான்!
இன்று 23.9.15 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
மக்கள் நலக் கூட்டியக்கம்
ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமே!
🌠🌠🌠🌠🌠🌌🌌🌌🌌🌌🎎🎎🎎🎎🎎🎆🎆🎆🎆🎆
22.9.15 தமிழ் இந்துவில் ஒரு கேள்வி...!
"மக்கள் நல கூட்டியக்கம் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என்பது!
இதற்கு 23.9.15இல் பதில்...
(இதற்கு இந்த கூட்டியக்கத்தைச் சார்ந்த நான் என் வாக்கைப் பதிவு செய்யவில்லை; என்னைப் போன்றுதான் இவ்வியக்கத்தைச் சேர்ந்த 99.9% பேர் இருந்திருப்பர்!)
ஆம்!
வாக்களித்தவர்களில் 31% (முழு பலன் தரும் 14%; ஓரளவு பலன் தரும் 17% ஆக 31%) பேர் ஆதரவு அளித்திருப்பதை காணுகிறபோது...
"மக்கள் மாற்றத்தை வரவேற்க தயாரிக்கிவிட்டார்கள்" என தோழர் ஜிஆர் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை!
31% வாக்கால் ஆட்சி மாற்றம் வருமா?
வரும்!
இது தற்போதைய நிலை! இன்னும் 8 மாத காலம் இருக்கு; இது இந்த கூட்டிக்கத்திற்கான "ஏறுமுக காலமே!"
ஆம்! 31% வாக்குப் பெற்று பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்கிறபோது...
இதுவும் (மக்கள் நலக் கூட்டியக்கம் ஆட்சியைப் பிடிப்பதும்) சாத்தியமே!
மக்கள் நலக் கூட்டியக்கத் தோழர்களே..! முன்னேறுவோம்..! வானம் தொட்டுவிடும் தூரம்தான்!
----\\\\
[9/24/2015, 11:21] +91 94899 25888: 31 சதம் ஓட் வாங்கிய bjp ஆட்சியை பிடித்தது. நாமும்...
---\\\\
[9/24/2015, 12:17] +91 94865 96641: 31% ஓட்டு உறுதியாக்கி விட்டோமென்றால், இன்றைய தமிழக சூழலில் ஆட்சி யை நாம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது!
----\\\\
[9/24/2015, 12:49] +91 94453 33614: இப்போது இப்படி முடிவுக்கு போவது பொருத்தம் அல்ல ...ஆனால் மக்கள் மாற்று அரசியலைத் தேடுகிறார்கள் என்து உண்மை...அந்த மாற்றாக நாம் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குதுதான் நமது அரசியல் பணி,..அதை திறம்பட செய்வதுதான் நம்முன் உள்ளசவால்👏
---\\\
[9/24/2015, 12:54] +91 94899 25888: 💪💪💪💪💪
[9/24/2015, 13:10] +91 94865 96641: எப்படி முடிவுக்கு போகக்கூடாது? இடதுசாரிகளுக்கு மட்டுமேயான கருத்து கணிப்பல்ல இது! 5 கட்சி கூட்டியக்கத்தின் மீதான கருத்து கணிப்பு இது! இதொரு மிக சாதகமான சூழல்! குறைந்தபட்சம் இந்த 5 கட்சி கூட்டியக்கத்தை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போவதிலும், மேலும் சில ஜனநாயக கட்சிகளை இதில் இணைப்பதிலும் நமது கவனமும், காரியமும் இருத்தல் வேண்டும். இதில் வெற்றி என்றால்... அதிலும் வெற்றி உறுதியே!
----\\\\
இடதுசாரிகள் தவிர்த்து..!
ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பிரச்சாரமோ? "தலைவர்களின் தேர்தல் நேர பயணத்தால் யாருக்கு லாபம்: மக்களுக்கா? அரசியல்வாதிக்கா?" என்றால்... அரசியல்வாதிகளும் மக்கள்தானே..!
எனவே ஆட்சியைப் பிடித்த அரசியல் வாதிகளுக்கும் (இடதுசாரிகள் தவிர்த்து) மக்களுக்கும்தான் லாபம்!
ஆனால் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களை உருவாக்கி, செயலாக்கிட வேண்டும்; அப்பொழுதுதான் மக்களுக்கு லாபம்!
இன்று 24.9.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
இது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் செயலே!
ராஜஸ்தான் பாஜக அரசுதான் ஆர்எஸ்எஸ் க்கு குட்டி; இந்த குட்டியை வைத்துதான் ஆழம் பார்க்கும். அதுதான் இதுவும்.
சந்தேகமே வேண்டாம்; இது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் செயலே!
"இது பார்ப்பனீய தேசம்; இதை ஏற்பவர்கள் இருக்கலாம்; ஏற்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்" என்ற அறிவிப்பை!
குஜராத் பட்டேல் சமூக போராட்டத்தை ஆர்எஸ்எஸ் தூண்டுதல் துளியும் இல்லாமல்தான் 22 வயது இளைஞன் செய்துவிட்டாரா?
குஜராத்தில் மழை பெய்தால், ராஜஸ்தானில் குடைப்பிடிப்பதும், ராஜஸ்தானில் இடி இடித்தால் மத்தியபிரதேசத்திலும், காஷ்மீரில் மழை பெய்வதும் ஆர்எஸ்எஸ் சின் சித்து விளையாடு அல்லவா? இதற்கு பெயர் தான் மோடி ம(த)ந்திரம்..!
இன்று 24.9.15 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
கொடியேற்றுவிழா-கட்சிநிதி அளிப்பு!
விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் 16 இடங்களில் சிபிஐஎம் கொடியேற்றுவிழா-கட்சிநிதி அளிப்பு! 25.9.15.
கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், சேலம் மாவட்டக்குழு செயலாளருமான பி.தங்கவேலு சிறுநாகலூரில் கொடியேற்றி உரையாற்றுகிறார்.
அருகில் கள்ளக்குறிச்சி வட்டச்செயலாளர் அ.ப.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர்...
----\\\\
சுங்கச்சாவடி நீக்கம் என்பதுதான்..!
சரியாக சொன்னால் சுங்கச்சாவடி நீக்கம் என்பதுதான்; ஆனால் அது நடக்கப்போவதில்ல!
ஆதலால் உணவு பொருட்கள் எடுத்துவரும் வாகணம், அரசு பேருந்து, மருந்து மற்றும் குடிநீர் போன்ற சேவை வாகணங்கள், மகிழ்வுந்து போன்றவற்றிக்காவது கட்டணங்கள் குறைக்கவேண்டும்.
இன்று 25.9.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
ரத்தக்காட்டேரி அமெரிக்கா..!
காமன்வெல்த் விசாரனையும் நானறிந்த வகையில் சர்வதேச விசாரணைத்தான்.
அமெரிக்கா இந்த விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்ற நாடு. ஈராக், ஆப்கன் உள்ளிட்ட நாடுகளை தும்சம் செய்த ரத்தக்காட்டேரி அமெரிக்கா.
இலங்கை தமிழர் பிரச்சனையிலும் சந்தர்ப்பவாத நிலையெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா என்ற ரத்தவெறி காட்டேரி அரசு, ஆம் , ஏகாதிபத்திய அரசு இருக்கும் வரை...
இலங்கைதமிழர் மட்டுமல்ல உலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது; எந்த பிரச்சனையும் அது தீரவிடாது!
இன்று 25.9.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\
இது வேலை ஏய்ப்பு!
இன்று 26.9.15இல் சேலம் மாவட்டம் எடப்பாடியில் வந்து குவிந்த இளைஞர்களுக்கு பொருந்தும்.
ஆம், அஇஅதிமுக சார்பில், "வேலைவாய்ப்பு முகாம்" நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கில் கல்வி நிறுவங்களில் இருந்தும், அதிமுக விலிருந்தும் வாகணங்கள் மூலம் வாலிபர்கள் (ஆண், பெண்) இரு பாலரையும் திரட்டினர்.
எடப்பாடி ஒரு சிறிய நகராட்சி. ஆயிரக்கணக்கில் அது தாங்குவதற்கு ஏற்ற இடமே இல்லை. அதே எதிர்கட்சிகள் கேட்டிருந்தால், எடப்பாடி அருகில் இருக்கும் 'பாங்கரட்டில்'தான் அனுமதி கிடைத்திருக்கக்கூடும். சரி, அது ஒரு பக்கம். வந்தவர்களுக்கு தண்ணீர், கழிப்பிடம், உணவு வசதி ஏதுமில்லை.
திருப்பூரில் இருந்து 2,3 பனியன் கம்பெனிகள், 2,3 மில் ஆலைகளை சார்ந்தவர்கள் என்று சிலர் ஆலைநிர்வாகம் தரப்பில் வந்துள்ளனர். அவ்வளவுதான். கூலி ரூ150, 200; இதைக் கேட்டவர்கள் பின்னங்கால் பிடறியில் அடித்து ஓடிவிட்டனர்.
இதுதான் அம்மாவின் ஆட்சியில் வேலை வாய்ப்பு முகாம் லட்சணம். அம்மா உலக முதலாளிகளை திரட்டி மாநாடு நடத்தி டூபாக்கூர் வேலை செய்தால் இரத்தத்தின் இரத்தங்கள் இதுமாதிரி அவர்கள் அளவுக்கு டூபாக்கூர் வேலை செய்ய வேண்டுமல்லவா? லட்சக்கணக்கில், இல்லை இல்லை எல்லாம் சேர்த்தால் கோடி வரும் என்கிறார்கள் இரத்தத்தின் இரத்தங்கள்.
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டாத வேலையைச செய்து கட்சி பேரக் கெடுத்ததுதான் மிச்சம் என்று விபரம் அறிந்த ரத்தங்களும், அம்மாவின் நாடி நரம்புகளும் பேசியது நம் காதுகளில் தேவையில்லாமல் விழுந்தது. அனேகமாக இதுமாதிரி இதுமாதிரி டூபாக்கூர் எக்ஸ்பிரஸ் இனி இதர தொகுதி அல்லது மாவட்டங்களுக்கும் போகும் என்றும் பேசிக்கொண்டார்கள்.
இளைஞர்களே உஷார்! இது அல்ல வேலை வாய்ப்பு; இது வேலை ஏய்ப்பு! வேலையின்னமையும், வறுமையும் முதலாளித்துவத்தின் இரட்டைப் பிள்ளைகள் என்பார் மாமேதை காரல் மார்க்ஸ்.
----\\\\
ஈகோ தான்!
வழக்குரைஞர் - நீதிபதிகள் மோதல்கள் நீடிப்பதற்கு காரணம் ஈகோ தான்! வேறென்ன? தேசப் பாதுகாப்பு பிரச்சனையா?
இப்பொழுது வெட்டிக் கொள்வார்கள்; அப்புறம் ஒட்டிக்கொள்வார்கள். வழக்குரைஞர் கேஸ் வெற்றபெறவில்லை எனில், பீஸ் திருப்பி தரவேண்டுமென தீர்ப்பு வழங்கிய, நீதிபதியார்... இவர் வழக்குரைஞராக இருந்தபோது, தோல்வியடைந்த (?!) கேஸ்களுக்கு பீஸை திருப்பி தந்து முன் மாதிரியாகட்டும்! சும்மா..!
இது வெத்துவேட்டு மிரட்டல் மட்டுமே!
இதன் ஒருபகுதி இன்று 26.9.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\