Friday, 11 September 2015

கெட்டிக்காரியின் புளுகு ரெண்டு நாளைக்குத்தானோ?

உலக முதலீட்டாளர் (முதலாளி)கள் தமிழக மாநாட்டின் நாடகம் அம்பலம் ஆரம்பம்; தேர்தலுக்கான அதிமுகவின் 'அவசர அவசர'மான "உப்புமா!" என்பதற்கான ஆதாரம் இதோ..! 

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்; கெட்டிக்காரியின் புளுகு ரெண்டு நாளைக்குத்தானோ?

98 நிறுவனங்கள் தொழில் துவங்க வேண்டுமானால், அவர்களுக்கு 3000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமாம்!

ஓரளவு வெளிச்சத்தில் இருக்கும் தமிழகம் மீண்டும் இருண்ட தமிழகமாகி விடுமோ? (நான் ஓரளவு என்பது வீட்டு உபயோகம்; விவசாயத்தையோ, சிறுத்தொழிகளையோ அல்ல! 


அவைகள் இன்னும், "ஒருநாள் வருவார்; ஒருநாள் போவார்; ஒவ்வொரு நாளும் துயரம்தான்!")

-----\\\\

தண்ணீர் மீது எழுதியமாதிரியே!

நத்தம் விஸ்வநான் கருத்து தண்ணீர் மீது எழுதியமாதிரியே! 
ஒரு புரட்சியும் நடக்கப்போறதில்லை! 

இந்த புரட்டல்காரர்களின் நாடகம் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் நாறிட போவது உறுதி! 

மக்கள் சரியான பாடம் கற்ப்பிப்பார்கள்! வேடதாரிகளின் முகத்திரை கிழிப்பார்கள்! 

முதலில் மின்கட்டணத்தை இவரது ஆட்சியில் ஏற்றியதை இறக்கட்டும்! 
அப்புறம் தொழில் புரட்சி செய்யட்டும்!

இன்று  10.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடே!

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த உலக முதலீட்டாளர் மாநாடு அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடே! 

இதில் ஊடகங்களுக்கு வேண்டுமானால் முதலீட்டாளர்கள் மாநாடுபோல் தோன்றும்! 

இது அதிமுக தேர்தல் மாநாடு என்பதற்கு, "2017இல் மீண்டும் நடக்கும் என்றும், 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடக்கும் என்றும்" ஜெயலலிதா பேச்சே சாட்சி! 

அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரப் பேச்சும்கூட! என்ன இறுமாப்பு பேச்சு இது! 

2016 தேர்தலில் அதிமுக தோற்றுப்போனாலும், இவர் இந்த மாநாட்டைக் கூட்டுவாரா? அல்லது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 2 வருடம் வந்துவிடுமோ?

இன்று 10.9.15 PTTV நேர்படபேசு க்கு!

----\\\\

உலக முதலாளிகள் என்று சொல்லலாமா?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதற்கு இன்னொரு அர்த்தம் என்ன?
உலக முதலாளிகள் என்று சொல்லலாமா? 

சொல்லாம்!?

அப்படி என்றால் உள்ளூர் முதலாளிகள் தமிழக மக்களை தமிழக செல்வங்களை சுரண்டியது, கொள்ளையடித்து போதாது என்று உலக முதலாளிகளை விட்டு மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? 

கொள்ளலாம்!? 

இதுக்கு பெயர் தான் தொழில் புரட்சியா? 

ஆம்! இதுகூட தெரியலையா? மக்குகூ மக்கு..!

2லட்சத்து 42 ஆயிரம் கோடி வந்து குவியதாமே..! 

ஓ... அப்படியா?! 

இனிமே தமிழ்நாட்டில் எல்லாரும் கொடநாடு தோட்டம் மாதிரி கெடைக்க போவுது!

இம்ம்ம்....!? 

எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..! சொந்த நாட்டிலே..!

-----\\\\

400 பேர் விற்பார்கள்; அதை 40 பேர் பார்ப்பார்களா?

நாட்டின் செல்வாதாரங்களை 400 எம்பிகள் விற்பார்கள்; அதை 40 எம்பிகள் கைக்கட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்க்க வேண்டும்; அல்லது 80 கைகளையும் உயர்த்தி ஆதரிக்க வேண்டும்! 

என்ன குணம் அய்யா இது? இதற்கு பெயர் தான் சர்வாதிகார அல்லது பாசிச குணம் என்பது! (அதாவது தான் நினைப்பதை செய்து முடிக்க வேண்டும் என்னவிலை கொடுத்தாவது) 


அதேசமயத்தில் காங்கிரஸ் ஒன்றும் ஜனநாயக சிற்பி அல்ல; இந்தியாவை ஏலம் கூறி விற்பதில்; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதில், பாஜகவுக்கு ஒன்றும் சளைத்ததல்ல காங்கிரஸ்! இரண்டுமே இந்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவைகளே! 

இன்றைய தேவை தேசபக்திமிக்க இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளே! 

இன்று 11.9.15 PTTV மக்கள்மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

இது கார்ப்ரேட் (ஆதரவு) வாதம்!

இந்தி மொழி மாநாட்டில் "பிரதமர்" மோடி பேசியதுதான் பிரச்சனை! "பிரதர்" மோடி பேசியிருந்தால் யாரும் கண்டு கொள்ள போவதில்லை! 

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாதென்று கம்யூனிஸ்ட்கள் கரடியாக கத்தினார்கள்! யார் கேட்டார்கள்? 

மதவெறி-இனவெறி-மொழிவெறி-பிரதேசவெறி ஆகியவற்றின் மறுஉருவமே பாஜக!தமிழை நீச மொழி என்றவர்கள்தான் மோடியின் மூலவர்களாம் ஆர்எஸ்எஸ்! 

இனி இவர்கள் கையில் இந்தி, சமஸ்கிதம் தவிர மற்ற மொழிகளின் எதிர்காலம் பிரதமர் வகையறாக்கள் கையில் பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கும்! 

ஆகவே பாஜக ஆட்சிக்கு முடிவு வந்தாலே ஒழிய, இந்த மாதிரியான ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் அனுதினமும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்! 

கார்ப்பரேட் சுரண்டல்களை மறைக்க இப்படிப்பட்ட பிரச்சனைகளை அவ்வப்போது கிளப்பிவிட்டு, திசைத்திருப்பிக் கொண்டே இருப்பார்கள்! 

பாஜக இரு முனை கொண்ட ஆயுதம்; ஒருமுனை மதவாதம்; இன்னொரு முனை கார்ப்ரேட் (ஆதரவு) வாதம்!

இன்று 11.9.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment