Friday, 31 July 2015

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அல்லாத..!

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அல்லாத புது அரசு வேண்டும். அந்த அரசு மார்க்சீய-அம்பேத்கரிய- பெரியாரிய கொள்கைகளைக் கொண்டதாக, மக்கள் ஒற்றுமையை விரும்புகிற அரசாக இருத்தல் வேண்டும்! ஜாதியத்தையும், தீண்டாமையையும், ஊழலையையும், மதவெறியையும்



வேறருக்கக்கூடிய அரசாக அது இருக்கவேண்டும்!
-------------------------------------------------------------------------------

அக்னிக்குஞ்சு ஒன்று..!
அக்னிக்குஞ்சு ஒன்று தமிழ் நெஞ்சங்களில் இருந்து மட்டுமல்ல... 

உலக மாந்தர்களின் நெஞ்சுகளில் இருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டது! ஆழ்ந்த இரங்கலும்..! உறவுகளுக்கு ஆறுதலும்..!
------------------------------------------------------------------------

கலாம்... கொலை..!
இதிலே இன்னொருவிதமான ஆபத்தான செய்தி இருக்கிறது! மீண்டும் அப்பழுக்கற்றவர், முழுக்க, உழைப்பாளி மக்களுக்கு மட்டுமே போராடக்கூடியவர் என்று பூதக்கண்ணாடி போட்டு தேடுவதில் ஆக போகவதில்லை! 

பூனைக்கு பயந்து புலியிடம் சிக்கிவிடக்கூடாது! தற்போதைய இந்திய சூழலில் தனியொரு மனிதர் வர்க்க புரட்சி செய்துவிட முடியாது! கலாம் இடம் கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று ஒதுக்கி தள்ளுவது ஒருதலைபட்சமே!

அப்துல் கனவுகளில் ஒன்று "தூக்கு" கூடாதென்று! இன்றைக்கு மத்திய அரசு அவரின் மறைவுக்கு 'ஓடி ஓடி' அஞ்சலி செலுத்துகிறது!

அவரின் நிறைவேறாக் கனவை நிறைவேற்றுவதே "இறந்தவருக்கு" செய்யும் ஆத்மார்த்தமான அஞ்சலியாக இருக்க முடியும்!

ஆனால் நேற்று


யாக்கூப் மேனனை தூக்கில் போடவேண்டும் என்று மோடி அரசு உச்சநீதி மன்றத்தில் வலுவாக வாதாடி, இந்த நேரம் அனேகமாக யாக்கூப் தூக்கிடப்பட்டு இருக்கலாம்!


தூக்கு வேண்டாமென்று கனவு கண்டவரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதில் தூள் பறக்கிறது ஒருபக்கம்! இன்னொரு பக்கம் அதே சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு தூக்கு! 

இதென்ன முரண்பாடு என்கிறீர்களா? அதுதான் ஆர்எஸ்எஸ்ம், பாஜகவும், நிறுவ நினைக்கிற "இந்துத்துவ பாசிசம்! "

பாசிசம் என்பது மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் வைக்கும் வேட்டு! மத மோதல்களை, ஜாதி மோதல்களை உருவாக்கி, தொழிலாளி வர்க்க புரட்சியை மழுங்கடிப்பது; பாசிசத்தின் பல கூறுகளில் இதுவும் ஒன்று!

ஆஹா ஓகோ என அஞ்சலி ஆராதனையோடு, சத்தமில்லாமல் தூக்கில் போடுவது வேதனையின் வேதனை; கொடுமையிலும் கொடுமை! இதை என்னவென்று சொல்வது? 

ஓ..! இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நம் நாடு எமர்ஜென்சி நோக்கி செல்கிறது என்றாரோ அத்வானிஜி! பாம்பின் கால் பாம்புதான் அறியும் என்பது இதுதானோ?  

கலாமுக்கு செலுத்தும் இதய அஞ்சலியா இது? மோடி அவதாரத்தில் எத்தனை எத்தனை வஞ்சகங்கள் பார்த்தீர்களா?
---------------------------------------------------------------------------------------------------------
"இடதுசாரிகள்" பாதையே!

யாகூப் க்கு தந்த மரண தண்டனையை ஆதரிப்பது மனிதாபிமான மற்றது! எய்தவனிருக்க அம்பை நோவதேன் என்பதுபோல், யாக்கூப்புக்களை உருவாக்கு இந்த சமுதாய அமைப்பைத் தூக்கில் போடுவதே இன்றைய தேவை! அதற்கான பாதை "இடதுசாரிகள்" பாதையே!

இதன் ஒருபகுதி இன்று 30.07.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------
"அரைப்பாசிசம்" 
இன்று 31.07.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் பத்திரிக்கையாளர்கள் அய்யநாதன், வெங்கடேஷ்... இவர்களுடன் நெறியாளர் கார்த்திகேயன்...
சாந்தமான நெறியாளுக்கைக்கு சொந்தக்காரர் கார்த்திகேயன் போலும்..!
நன்று!

இறுதியாக விவாதிக்கப்பட்டது... யாக்கூப் தூக்குப் பற்றி... வெங்கடேஷ் சொன்னார்... அப்படியே அப்பாவிபோல்... 1993ல் நடந்த குண்டு வெடிப்பு அதில் ஏற்பட்ட உயிரிழப்பு எல்லாம் நாடு மறந்துவிட்டது; அதுதான் "அரைச்சிக்கல்" என்றார்.

அது என்னய்யா பெருமகனாரே அரைச்சிக்கல்... அப்புறம் முழுச்சிக்கல்? உமது பாணியில் சொன்னால்... இதற்கு யார்? எது? காரணம்..? அந்த "சிக்கலின் சீமான்" யார்? அத்துவானியும், ஆர்எஸ்எஸ் கும்பலும் அல்லவா? 

அன்று பாபர் மசூதியை இடித்தது, ராமருக்கு கோவில் கட்டவா? ஒரு சுக்கும் கிடையாது; ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ஆள வேண்டும்; அதற்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திருப்பி விட வேண்டும்! இதுதான் பாசிச இட்லரின் தத்துவம்; அதன் இந்திய வாரிகள்தான் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ம்!

அந்த சூழ்ச்சியின் வெற்றி தான் வெங்கடேஷ் சொல்லும் 'அரைச்சிக்கல்'. இதை சரியாக எடுத்து 'உடைத்து' வைத்தார் அய்யநான்; ஆனால் வெங்கடேஷ் வாய் யை இதற்கு திறக்கவே இல்லை! காரணம் அவர் வாயில் பாஜக "கொளுக்கட்டை!"

நேற்று இந்த இந்துத்வாவாதிகளின் ஹாலிவுட் சூப்பர் நடிப்பை பார்த்ததே நாடு! ஒருபக்கம் கலாமுக்கு கலோபர அஞ்சலி! இன்னொரு பக்கம் கலாமின் கனவுக்கு தூக்கு! என்ன கொடுமை இது?  

இத்தனை ஆண்டு கெடந்தது... அப்டி என்ன அதிகாலை விசாரணை... வெங்காயம்... தீர்ப்பு... தூக்கு... அதுவும் பிறந்த நாளில்... நாடு இனி கலாமை நினைவு கூறும் போது... யாக்கூப்பையும் நினைவுகூறும்..! இதன் மூலம் ஆர்எஸ்எஸ் கூற விரும்பும் குறியீடு என்னவேன்று புரிகிறதா? இதுதான் வெங்கடேஷ் அவர்களே "அரைப்பாசிசம்" என்பது! 

ஆட்சியில் இருப்பதால் எவ்வளவு விரைவாக தங்களது பாசிச நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்  கொள்ள முடிகிறது பார்த்தீர்களா? ஜனநாயக சக்திகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த இரு நிகழ்வே சாட்சி அல்லவா?

Sunday, 26 July 2015

(தவிச., விதொச) நேற்று 22.07.15 
சேலத்தில் பிரகடனம்!


இன்று 22.07.2015 சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,செப்டம்பர்-2 அன்று 1000இடங்களில் தமிழ்நாடு முழுவதும் ரயில்-சாலை மறியல் போராட்டத்தில் ஒருலட்சம் பேர் பங்கேற்க செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது. 
தேசநலன் காக்கும் போரில் கரம் கோர்போமென தமிழக கிராமபுற உழைக்கும் வர்க்கம் (தவிச., விதொச) நேற்று 22.07.15 சேலத்தில் பிரகடனம்! 02 செப் 2015 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிகரம் ஆக்குவோம்!

========================================================================

கவுரவக்கொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வா!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருத்தரங்கம்!

சேலம்-24.01.2015.
தலைமை: ஏ.கலிபெருமாள்
சிறப்பு கருத்து: கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர் ததீஒமு
சிபிஐஎம், விடுதலை சிறுத்தை, பகுஜன் சமாஜ், ஆதிதமிழர்பேரவை, மக்கள் தேசம் ஆகிய கட்சிகளின் சார்பிலும் கருத்துரை வழங்கினர்
----------------- ---------------------
காதல்-சாதி-கவுரவம்
தண்டவாளக்கொலை!
---------------------------------------
========================================================================

என்ன நீரேத்தம் பார்த்தீர்களா?

இந்த மத்திய அமைச்சர் ரா(சோ)தா மோகனுக்கு! 
இவன்களை எல்லாம் 'சோட்டால்' அபிசேகம் செய்தால் தப்பாகுமா? 

காதல் தோல்வியால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களாமே..! 

இதை கேட்கவே காது கூசுகிறது; இவனெல்லாம் நாக்கு கூசாமல் இப்படி மக்களையிலேயே பேசுகிறானே..! 

மோடியே! பாஜகவே!உங்கள் பாசிச கோயாபல்ஸ் க்கு எல்லையே இல்லையா? 

இட்லர் உங்களிடம் தோற்றுவிட்டான்!

========================================================================
அருமையோ... அருமை..!

பாஜக ஊழல் தகிடு தத்தங்களை இதைவிட கேலியான சித்திரம் வரைய முடியாது! ஆனால் என்ன செய்வது? மரத்துப்போன ஜென்மங்களாகி வருகிறார்கள் பாஜக உள்ளிட்ட முதலாளித்துவ அரசியல் "வியாபாரிகள்"(வியாபம்)!

========================================================================

தாயே..! தலைவணங்குகிறோம்!

94 வயதில், தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, உழைக்கிறாயா? காய்கறி விற்பனையா? கேட்கவே மெய் சிலிர்க்கிறது! எங்களின் வீரத்தாயே! 
நீடுழி வாழ்க!
=======================================================================

Saturday, 25 July 2015

புரிதலியின்மை என்பதே சரி!

புரிதலியின்மை என்பதே சரி! அதற்காக அறிவின்மை என்பது எப்படி சரியாகும்? அதாவது குடும்பத்தாரையே கடவுள் மறுப்புக்கு கொண்டு வர முடியாதவர்கள் எப்படி ஊரைக் கொண்டு வர முடியும் என்கிற விமர்சனத்தை எப்படி புறம் தள்ள முடியும்?  

குடும்ப சனநாயகம், திணித்தல் கூடாது என்றெல்லாம் பேசினாலும், மேற்படி விமர்சனத்தில் உள்ள அதாவது, "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தைப் பிளந்து வைகுண்டம் காட்டப் போரானாம்" என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது? எனக்கும் இந்த சிக்கல் இருக்கிறது. 

நான் எஸ்எஸ்எல்சி படிக்கும் வரை, பரிச்சை எழுதும்போது மட்டும் கடவுளை கும்பிடுபவனாக இருந்தேன்.  அதற்குமேல் ஐடிஐ மாதிரி 'ட்ரேடு அப்ரண்டீஸ்'  மூன்று வருடம்! இதிலே பரிட்சை இல்லை. அதனாலோ என்னவோ கடவுளை கும்பிடும் எண்ணற்ற அருகியது! அதன்பின் பொதுடைமை புத்தகங்கள் என்ன கடவுள் மறுப்பாளனாக மாற்றிற்று! 

திருமணத்தை சற்றே முற்போக்காக (ஆடி 13 மாலை 5 மணி, சிபிஐஎம் வட்ட
மாநாட்டின் கடைசி நிகழ்ச்சி, தாலி கட்டுவது என்ற ஒன்றைத் தவிர, அந்த தாலியிலும்கூட சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும், வேறெந்த சடங்கு இல்லாமல்) செய்ய இசைவு தந்த என் துணைவியாரை இன்றுவரை, என் குடும்ப உறுப்பினர்களை (ஏறக்குறைய 30 வருடங்களாக) கடவுள் மறுப்பாளராக மாற்ற முடியலையே!

ஆனால் பொதுவுடைமை கருத்துக்களை ஏற்கிறார்கள்; அது இம்மண்ணில் கோலோச்சணும் என்கிறார்கள்! என்ன வினோதம் இது! 

என் குடும்பம் மட்டுமல்ல, இப்படி பல்லாயிரவர் அவர்தம் குடும்பங்கள் இருக்கவே செய்கிறார்கள்! இதுதான் இந்திய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ-சனாதன-சாதிய வாதத்தின் கட்டுமானமும் பிடிமானமும்! 

ஆகவே "கணக்கு" நேர் செய்ய வேண்டியது இந்த கட்டுமானத்தையும், பிடிமானத்தையும்தான்! எப்படி வாதிட்டாலும் இந்த பணிக்கு முதல் கைக்கொடுக்கக் கூடியவர்களாக மிக அருகாமையில் இருப்பவர்கள் குடும்பம் அல்லவா?

ஒரு முகநூல் நண்பர் ஒருவருக்கு இன்று தந்த பதில் பதிவு..! (26.07.2015). குடும்ப உறுப்பினர்களை கடவுள் மறுப்பளராக இருக்க வேண்டும் என்பது அறிவின்மையும், புரிதல் இன்மையும் என்பதே அந்த நண்பரின் அழுத்தமான பதிவு. 

இதற்கு அந்த நண்பரின் பதிலில், "...இன்னும் நிறைய படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும்" என்றார். 

அதற்கு நான் 'நன்றி' என்று பதிவு செய்துவிட்டு, "அதற்கான புத்தங்களையும் சிபாரிசு செய்திட" கோரியுள்ளேன். 

வாய்ப்பிருந்தால் இதற்கு தாங்களும் உதவிடலாமே! நன்றி!

Tuesday, 21 July 2015



காமராஜர் பெருமை இப்போது எடுபடாது!

இன்று15.7.15 PTTV மக்கள் மேடைக்கு..! காமராஜை காங்கிரஸ் சொந்தம்

கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கிறது! பாஜக ஒருவேளை தற்போதைய மாநில தலைவரின் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் சொந்தம் கொண்டாடுவார்களோ? 

பாஜக எதை தின்றால் பித்தம் தெளியும் (ஆட்சியை பிடிக்க முடியும்) என்று அலைந்துக் கொண்டிருப்பது மட்டும் நன்றாக தெரிகிறது! ஆனால் அது நடக்க போவதில்லை! காமராஜர் பெருமையை இப்போது பாடுவது எடுபடாது! 

மதிய உணவு திட்டமும், எளிமையும், அவரின் இதர சிறப்பு அம்சங்களும் இன்றைய இளைஞர்களை கவரும் சூழலில் தமிழகம் தற்போது இல்லையே!


மக்கள் நலன் ஒன்றும் கிடையாது!
இன்று 15.7.15 PTTV நேர்பட பேசுவில் ஒருபகுதி பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது! நன்றி!            

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் மக்கள் நலன் எல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாம் தன் நலன் சார்ந்தே அதன் நிலைபாடு இருக்கும்!  

ஒருவேளை கர்னாடக காங்கிரஸ் "அப்பீல்" செய்திருப்பதனால், காங்கிரஸை 'தாஜா' செய்வதற்காக கூட, தற்போது "எதிர்ப்பு" அவதாரம் எடுத்துள்ளது என்றே தோன்றுகிறது! மற்றபடி மக்கள் நலனும் கிடையாது; மண்ணாங்கட்டியும் கிடையாது!

 "நொந்து நூலாகி" கிடக்கிறது!

சந்தேகமே வேண்டாம் காழ்ப்புணர்ச்சி அரசியல்தான் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது! 

அது இன்று நேற்றல்ல கால காலமாக  திமுக அதிமுக நடத்தும் லாவணி அரசியல் இது! இதனால் பாதிப்பு தமிழக மக்களும், அவர் தம் அறிவு பசியும் தேடலும்தான்! 

நூலகம் எல்லாம் இன்று தமிழகத்தில் "நொந்து நூலாகி" கிடக்கிறது! ஆனால் டாஸ்மாக் கடை மட்டும் டாப் பில் போய்க்கொண்டிருக்கிறது!

இன்று 16.7.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


மனதுக்கு இதமே!
இன்று 17.7.15., PTTV நேர்பட பேசு நிகழ்ச்சி பற்றிய...
 ஃபேஸ்புக் பதிவுக்கு எனது கருத்து!    ஆம்! இந்த விவாதம் மிக அருமையாக சென்றது; தங்களின் இந்த பதிவும் நன்று! நெறியாளர் ஜென்ராமும் பொறுப்பாகவே "லீடு" எடுத்துக் கொடுத்தார்! 

திமுக அப்பாவு அதை ஆதரித்தும், கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, தோழர் சங்கரய்யா குடும்பம், மூதறிஞர் ராஜாஜி குடும்பம் மட்டுமல்ல... தமிழகமே "ஜாதி மறுப்பு" (கலப்பு திருமணம் என்று விவாதத்தில் வார்த்தைகள் விழுந்ததுதான் கொஞ்சம் நெருடல்!) குடும்பங்களாக மாற்ற வேண்டும்; அல்லது மலர வேண்டும் என விவாதம் சென்றது மனதுக்கு இதமே! 

அதுவும் நம் கட்சி தீர்மாணம் விவாதப் பொருளாக்கிய நெறியாளர் ஜென்ராமுக்கு நன்றி!

சைத்தான் வேதம் ஓதுகிறது!
தீண்டாமையின் ஊற்றுக்கண்ணே நீங்கத்தான்..! ஆம்..! மோடியார் ஆர்எஸ்எஸ் என்கிற இந்துமத வெறி ஏற்றும் அமைப்பின் முழுநேர ஊழியர்..! இவர் போய் அரசியலில் தீண்டாமை வேண்டாம் என்று! சைத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதானோ..?

இந்த ஆட்சியின் லட்'சனம்!'

பாருங்க இந்த நாட்டுல எதுக்கெல்லாம் போராட வேண்டியிருக்கு..! ஏன்டா... பொணத்த எரிச்சி தர சாம்பலக்கூடவா ஃப்ராடு..! அட... ஃப்ராடு பசங்கள..! இதுதான் இந்த ஆட்சியின் லட்'சனம்!'




இதுதான் இன்றைய பாமக!

தோழரே வணக்கம் 
இன்று விவாதம் அமைதியாக அர்த்தமுள்ள தாக இருந்தது! 

அதுவும் விவசாயி வாழ்நிலை, அதன் இழிநிலை குறித்த விவாதமும், பாமகவின் பகல் கனவை பற்றிய விவாதமும் அவசியமானதாக இருந்தது! நன்று! 

என்ன... புறம்போக்கு என்ற பொதுவுடமை கட்சிகளும் இருக்கு என்று (விமர்சித்தோ, ஆதரித்தோ) வருவதும் "அவர்களும் இருக்கிறார்கள்" என்பதை கோடான கோடி மக்களுக்கு போகுமல்லவா? 

பாமகவுக்கும் தெரியும் அவர்களின் லெவல்; ஆனால் அமைச்சராக இருந்தபோது அடித்த "மூட்டை" முடைநாற்றம் எடுக்குமுன் 'இப்படி' ஊடங்களில், மக்களிடங்களில் "பேச" வைப்பதன் 'சித்து' வேலைதான் இது! 

மயிரை கட்டி இழுப்போம்; வந்தால் மலை; போனால் மயிர்! இதுதான் இன்றைய பாமக! இது பேரத்திற்கும் என பேச்சும் இருக்கிறது! 

இன்று காலை பொழுது கூச்சலின்றி போனது நன்று! மகிழ்ச்சி! 19.7.15., PTTV.


இருட்டை வென்றதாக இருந்தது!

இலாவி யின்...
இருட்டைத் தின்றவர்கள்
சிறுகதை அறிமுகம்-19.07.2015 சேலம்.

கூட்டம் குறைந்திருந்தாலும், குறையின்றி குதூகலத்துடன் அறிமுகம் செய்த முனைவர்
த.திலீப்குமார் துணைத்தலைவர், மொழித்துறைத்தலைவர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை...

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், தாரைப்பிதா, மதுரபாரதி, நிறைமதி, சேக்அப்துல்லா, லவ் ஓ நாகராஜ் சிலாகிக்க...

எழுத்தாளர் இல.வின்சென்ட் ஏற்புரை நிகழ்த்த, "இருட்டைத் தின்றவர்கள்" நூல் அறிமுக நிகழ்வு இருட்டை வென்றவர்களாக இருந்தார்கள்!


எல்லாம் கண்கொள்ளா காட்சி..!

இன்று 19.07.2015 புதிய தலைமுறை "ரௌத்ரம் பழகு" நிகழ்ச்சி யை தற்செயலாக இரவு 08.30 மணிக்கு பார்க்க நேர்ந்தது!

கள்ளக்குறிச்சி மற்றும் அரக்கோணம் பகுதியில் "பஞ்சமி மீட்பு போர்" களத்தை மிக உணர்வுபூர்வமாக பதிவு "பார் அதிரும்" போராக காட்டியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் உரித்தாக்குவோம்! 

பாரதி அண்ணா முதல் லதா வரையிலான தோழர்களின் பதிவு மற்றும் பஞ்சமி நிலச் சொந்தக்காரர்களின் பதிவு, அதிலும் பெண்கள் மீது தான் பட்டா தரவேண்டும் என்ற பதிவு... 

ஒரு இளம் பெண்ணின் விவசாயம் செய்ய வேண்டமென்ற "வாழ்நாள் ஆசை" நிறைவேற போகுகிறதென்ற கனவைக் கண்களில் தேக்கி வைத்து, மடைத்திறந்த வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது... 

ஓடோடி சென்று செங்கொடியை நட்டது... நட்டிருந்த குட்டுக் கல்லை எட்டி உதைத்தது... அண்டா போட்டு சமைத்து உண்டது... 

தனது உருங்கி போன முகத்தில் "வாட்டம் நீங்கி வளம்" காண போகிறோமென்ற ஆனந்தத்தில் அந்த முதியவர்களின் முக மலர்ச்சி... எல்லாம் கண்கொள்ளா காட்சி..! 

அய்யா..! புதிய தலைமுறை காட்சி ஊடகமே...! மீண்டும் உமக்கொரு நன்றி!

"உயிரைக் குடிக்கும் "விஷ அட்டைகள்!" 

இந்த ஆய்வு அறிக்கை சரியானதா என்று தெரியவில்லை;  

அதாவது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை (ஆண், பெண்) என்பதுதான் சரியான புள்ளி விபரமாக இருக்க வேண்டும். 

அப்படி பார்த்தால் 365 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 48 வீதம் 17520 விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதே சரியான புள்ளி விபரம். 

விவசாயிகள் நலன் காப்பதில் பாஜகவும், காங்கிரஸ்சும்... காமராஜர் மொழியில் சொன்னால் "ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள்" மட்டுமல்ல, விவசாயிகளின் உயிரைக் குடிக்கும் "விஷ அட்டைகள்!"

மதுவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல!

இன்று 20.7.15 PTTV  மக்கள் மேடைக்கு!
மதுவிலக்கு ஒரு பிரச்சனைதான்! ஆனால் அது மட்டுமே பிரச்சனை அல்ல! மதுவிலக்கு பிரச்சனையில் இவ்வளவு வரிந்துக் கட்டும் பாமக உள்ளிட்ட கட்சிகள்... லஞ்ச-ஊழல், விலைவாசி, சட்டம்-ஒழுங்கு, அன்னிய இந்திய முதலாளிகளுக்கு ஆதரவு, கவுர கொலைகள், தீண்டாமை போன்ற கொள்கை சார்ந்த பிரச்சனையில் தூங்கி வழிகிறார்களே...ஏன்? 

ஏனென்றால், இதில் எல்லாம் இவர்களுக்கு இடதுசாரி கட்சிகளை தவிர ஒரே கொள்கைதான்! முதலில் பாமக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து நடத்திக் காட்டட்டும்! இப்படி சொல்வதனால் மதுவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல! 

நத்தம் விஸ்வநாதன் அதிமுக கட்சிக்கும், சொத்துகுவிப்பு வழக்கு தவிர மற்றவற்றில் மக்கள் கவனம் மாறினால் நல்லதுதானே! அதானியிடம் ரூ7.01 இங்கும், வேற்று மாநிலத்தில் ரூ 5, 6 என மின்சாரம் விற்கப்படுகிறதே ஏன் என்றால்... அதற்கு பதில்லை! மதுவுக்கு மட்டும் வக்காலத்து போடுவதன் முடிச்சு இப்பொழுது புரிகிறதா?


Wednesday, 15 July 2015

இடதுசாரிகள் கொள்கை தான் 
பொருத்தமான மாற்று..!

திராவிட கட்சிகளால் தமிழகம் பின்தங்கிவிட்டது என்று அன்புமணி
கூறுவதற்கு அருகதை அற்றவர்.  பாமக ஒருவேளை ஆட்சியில் இருந்து இருந்தால் இதைவிட மோசமாகத் தான் தமிழகம் இருக்கும்!

திராவிட கட்சிகளை விட அன்புமணி கட்சி கொள்கை எந்த வகையில் சிறந்தது என்று விளக்குவாரா?  இவரின் கொள்கை வலதுசாரி மட்டுமல்ல, திராவிட கட்சிகளை விட மோசமான சாதிய வெறி கொண்ட படு பிற்போக்கு கொள்கை! 

இடதுசாரிகள் கொள்கை தான் பொருத்தமான மாற்று; இதன் மூலம் தான் தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போக முடியும்?

10.07.2015 அன்று PTTV க்கு..!


கொள்கை இரண்டு கட்சிக்கும் ஒன்றே!

பேரறிவாளன் விடுதலையா? பிஜேபி அரசிலா? வாய்ப்பே இல்லை! ஒருவேளை கந்தகார்க்கு யாரை யாவது கடத்திக்கிட்டு போனால், அவர் இந்துத்துவா ஆதரவாளராக இருந்தால், விடுதலை கிடைக்கலாம்! 

அதுவும் இல்லாமல் வெளியுறவு கொள்கையில் காங்கிரஸ்சும், பாஜகவும் வேறு வேறு என்று யாரு சொன்னது?  குரல் தான் வித்தியாசமாக ஒலிக்கும்; கொள்கை இரண்டு கட்சிக்கும் ஒன்றே!

11.07.2015 அன்று PTTV க்கு..!



நியாயமான பேச்சு!
மும்மொழித் திட்டம் வந்தால் புரட்சி வெடிக்குதோ இல்லையோ, வைகோ
அவர்களின் பேச்சு நியாயமான பேச்சு!

இலங்கையில் தமிழர்களில் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுவது போல் (அங்கு அந்த அரசு அதை திட்டமிட்டு செய்கிறது; இங்கு அப்படி  செய்வதாக சொல்ல முடியாது; என்றாலும்) இங்கு தமிழகத்தில் தடுக்கி விழுந்தால், இந்தி பேசும் வட மாநில மக்கள் மீது தான் விழ வேண்டும்! 

வந்தவரெல்லாம் இங்கு குடியேறிவிட்டால், புரட்சிக்கு (வைகோ சொல்லும் புரட்சி) வேலையே இருக்காது! அந்தளவுக்கு நீக்கமற பரவி கிடக்கிறார்கள் வட இந்திய சகோதரர்கள்! இதுதான் இன்றைய கள நிலைமை!

இதன் ஒருபகுதி 13.07.2015 அன்று PTTV பதிவேற்றம் செய்துள்ளது!



இளைஞர் சமுதாயத்தைக் காக்க..!
கண்துடைப்பே! கிரிக்கெட் டாஸ்மாக் விட மோசமான போதை! முதலில்
இந்தியாவில் தடைசெய்ய வேண்டிய, இளைஞர் களை பாதுக்காக்க வேண்டுமானால் இந்த விளையாட்டை மன்னிக்கவும் சூதாட்டத்தை தடைசெய்தாலே ஒழிய இளைஞர் சமுதாயத்தைக் காக்கவே முடியாது!

இதன் ஒருபகுதி 14.07.2015 அன்று PTTV பதிவேற்றம் செய்துள்ளது!



பணியும், தேடலும் சிறக்கட்டும்!

தோழரே  (குணா) இரவு வணக்கம். அரசியல், பொருளாதாரம், சித்தாந்தம், கலை, இலக்கியம், விளையாட்டு யாவற்றிலும் புகுந்து துல்லியமாக 'விளையாடுகிறீர்' மிகுந்த அடக்கத்துடன்! மகிழ்ச்சி! பெருமையாக இருக்கிறது! 

இது முகஸ்துதியல்ல; உண்மை; யதார்த்தில் இருந்தே கூறுகிறேன்! தங்கள் பணியும், தேடலும் சிறக்கட்டும்! நன்றி!

14.07.2015 நிகழ்ச்சியை ஒட்டி, என் தனிப்பட்ட இந்த கருத்துக்கு நெறியாளர் தோழர் குணா...  
[7/15/2015, 14:41] Kuna PTTV: உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் இதய நன்றி



டாஸ்மாக்-குண்டுவீச்சு-ரெய்டு
------******-------********--------*****------

இன்று 15.7.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்...
மதுக்கூர் ராமலிங்கம், ஆடிட்டர் பிரபாகர் இவர்களுடன் ஜென்ராம்!

மதுக்கூருடன் டாஸ்மாக் கருத்தில் ஒத்துப்போன பிரபாகர் பெட்ரோல் குண்டு வீச்சில் பாதி அளவுக்கு ஒத்துபோனவர், டீஸ்டா செகல்வாட்  தொண்டு நிறுவனமு மீது சிபிஐ ரெய்டு விசியத்தில்  ஒத்து போகவில்லை! அதில் ஒன்றும் வியப்பில்லைதான்! 


என்றாலும், "ஆர்எஸ்எஸ் சும் தொண்டு நிறுவனம் தானே; அவர்களும் வெளிநாட்டில், பெரிய பெரிய நிறுவனங்களில் துட்டு வாங்குகிறார்களே; அங்கு இந்த ரெய்டு நடக்குமா?" என்ற மதுக்கூர் கேள்வி பிரபாகர் காதில் விழவே இல்லை! பாவம் பிரபாகர் சிபிஐ 'அப்படியெல்லாம்' ரெய்டுபோய்விட முடியாதாம் ஆதாரமில்லாமல்!


ஜென்ராம் அவர்களுக்கு... 
ஏற்க முடியாத கருத்து என்று எச். ராஜா கருத்தை மயில் இறகுவில் தடவி
கொடுக்க முடியாது! மோடியார் ஆட்சிக்கு வந்தப்பின் பாஜக பரிவாரம் உள்ளிட்டு பெரும்பான்மை மத-ஜாதி களைச் சார்ந்தவர்களின் பேச்சு "ஆத்திரம் மூட்டும்" வகையில் தான் உள்ளது என்பதற்கு பெருமாள் முருகனின் துறவரமும், தண்டவாள மரணங்களுமே மிக சமீபத்திய சாட்சிகள் அல்லவா? 

ஆக ஆத்திர மூட்டும் பேச்சு இது இல்லை என்பதற்கு அடையாளம்... குறிப்பிட்ட பேச்சு மக்கள் ஒற்றுமையை  குலைக்காமல் இருக்க வேண்டும் அல்லவா? அதையா எச்.ராசா வகையறாக்கள் செய்து வருகிறார்கள்? இல்லையே!

Monday, 13 July 2015




வேதனையின் விளிம்பில் 
வெள்ளி கொலுசு..!

வெள்ளி கொலுசு மணி; வேலான கண்ணுமணி..!” என்ற பாடல் கேட்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. கொலுசு, மூக்குத்தி, தோடு, அரைஞான் கயிறு, ஒட்டியானம் போன்றவை எத்தனை டிஜிட்டல் உலகம் வந்தாலும் நம்மை விட்டு பிரியாது; அந்தளவுக்கு அது நமது கலாச்சாரப் பண்பாட்டு அணிகலன்களாக மாறி போய்விட்டது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு தான் தங்கம் வைரம் வைடூரியம் போன்றவைகள்! ஆம், நாம் சொல்லுவது சாதாரண குடும்பங்களின் வாழ்நிலை; அதானி, அம்பானி போன்றவர்களின் வாழ்நிலையை அல்ல! இது ஏழைகளின் இதயத்தை குளிர வைக்கும் இந்த வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பு தொழில் இன்று தட்டுத் தடுமாறி, நடமாட முடியாத நிலையில் இருக்கிறது; அதன் தொழிலாளர்களும், அவர் தம் குடும்பங்களும் வேதனையின் விளிம்பில் இருக்கிறார்கள்.

அனைவரின் எதிர்ப்பார்ப்புகளை போல் தான் இந்த வெள்ளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்ப்பார்ப்புகளும் இருந்தது. மோடி வந்தால் ஓடோடி வந்து நமக்கு உதவுவார் என்று! ஆனால் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, தங்களது வாழ்வில் மாற்றம் வரும் என்றிருந்தவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம் தான் பரிசாக வந்துள்ளது; அதற்குள் ஏன் அவசரம் இன்னும் ஆட்சி காலம் இருக்கிறதே என்றுகூட சிலர் வாதிக்கிடக்கூடும்! ஆனால் அதுவரை அடி வயிற்றில் ஈரத் துணியை போட்டுக் கொள்வதா?

இதிலே ஒரு கஷ்டம் என்ன வென்றால் இத்தொழில் குறித்து துல்லியமான புள்ளி விபரங்களை சேகரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது; தொழிலில் பணிபுரிவோர், ஈடுபடுவோர் எல்லாம் தோராயமாகத் தான் சொல்ல முடிகிறது; குறிப்பிட்ட எடையில் வெள்ளி வாங்குவது; அதில் 20% உற்பத்திக்காக எடுத்துக் கொள்வது; அதை ஆபரணமாக்கி மொத்த வியாபாரிகளிடம் தருகிறபோது அது 100% மாக கணக்கிட்டுக் கொள்வது; இதனால் பணம் பரிமாற்றம் என்பது ‘மாய மானாக’ உள்ளது; அது சிலருக்கு மட்டுமே தெரிந்ததாக அதாவது இன்றைய சூழ்நிலையில் ‘ஆன் லைன்’ வர்த்தகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் கீழ்கண்டபடி நடக்கும் வர்த்தகத்தைப் பார்க்கிறபோது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்; அதிலும் சேலம் மாவட்டம், சேலம் ஒன்றியம் மற்றும் மாநகர பகுதிகள் தான் ‘வெள்ளிப் பட்டறை’க்கு முதல் இடம்! இங்கு இத்தொழில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களும் அவர் தம் குடும்பங்களும், இதை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக சுமார் 3 லட்சம் பேர் அன்றாட கூலித் தொழிலாளர்களாகவும், சுமார் 1 லட்சம் சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு சராசரியாக 1.5 டன் ஆபரணங்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அப்படி என்றால் நாளொன்றுக்கு சராசரியாக 1 டன் என்று வைத்துக் கொண்டால்கூட, அதில் 50% (500 கிலோ) வெள்ளி ஆபரணமாக ஆக்கப்படும்போது, அதன் வாங்கிய விலைக்கே கணக்கிட்டால், ரூ18 கோடி நாள் ஒன்றுக்கு புலக்காட்டம் உள்ளது. அது வருடத்திற்கு கணக்கிட்டால், ரூ6570 கோடி வரவு-செலவு நடக்கிறது சேலம் மாவட்டம் சேலம் ஒன்றியம், சேலம் மாநகரம் ஒருபகுதியில் மட்டுமே நடக்கும் இத்தொழில் மூலம் என்றால், அது 100% மும் சேர்த்தால், அது இன்னொரு மடங்கு சேர்ந்து வரவு-செலவு நடக்கிறது என்று அர்த்தம். இந்த தொழில்தான் தற்போது சூறாவளி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

சில்வர் என்றழைக்கப்படும் உலோகம்தான் வெள்ளி. இது தங்கம் போல் தன்னைத்தானே யாருக்கும் பயன்பாட்டு பொருள் அல்ல. தங்கத்தில் செம்பு கலந்தால்தான் அது ஜொலிக்கும். அதுபோல் வெள்ளியிலும் செம்பு, துத்தநாகம், காட்மியம் என்கிற உலோகங்கள் தேவையான அளவு கலக்கிறப்போது தான் இதுவும் ஜொலிக்கிறது. ‘பார்’ என்று அழைக்கப்படும் சுத்த வெள்ளி  (99.9%) வாங்குவர்; அதில் குறிப்பிட்ட விகிதம் செம்பு, துத்தநாகம், காட்மியம் கலப்பர். அதன்பின் இது ஆபரணமாக வருகிறபோது 16 படிகளை அது கடந்து வருகிறது. அதாவது—

1. பார் 2. உருக்குதல் 3. கம்பி உருவாக்கல் ) 4 கன்னி கோர்த்தல் 5. லூஸ் ஆக்கல் 6. சலங்கை (முத்து) ஆக்கல் 7. பூ வைத்தல் 8. அரும்பாக்கல் 9. ஜதையாக்கல் 10. அர மெருகு, கருப்பு மெருகு (கருப்பு கலராக இருப்பதை சல்பர், சைனைட், காஸ்டிக் சோடா, சோப்பு ஆயில் போன்றவை கலந்து வெண்மை ஆக்கல்) 11. பட்டை தீட்டுதல் 12. கலர் வைப்பது (எனாமல்) 13. மிஷின் பாலீஷ் (100% வெண்மை ஆக்கல் 14. சீர் செய்வது 15 பொடி வைத்தல் 16 தரச்சான்று பெறுதல் என பல கட்டங்களை அது கடந்துதான் கடைக்கு கொலுசாகவோ, அரைஞான் கொடியாகவோ வருகிறது. உடலில் அணியும் அணிகலன்கள் பல்வேறு ரசாயன கலவைக்களை உட்கொண்டே வந்து நம் உடல்களில் ஒட்டிக்கொள்கிறது; அது அதன்பின் தன் வேலைகளை உடலில் காட்டி வருகிறது. உணவில் மட்டுமே விஷமில்லை; உடையிலும், ஆபரணங்களிலும் இருக்கிறது ரசாயன விஷங்கள் என்பதற்கு இதில் கலக்கப்படும் ரசாயன கலவைகளே சாட்சி!

இவற்றில் 2 கட்டத்தில் மட்டுமே (லூஸ், ஜதை) இத்தொழிலில் ஈடுபடும் 3ல் 2 பகுதியினர் உள்ளனர். இதில் தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடி தொழிலாளர் களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கி உள்ளது. என்றாலும் உற்பத்தி யாளர்கள் தரப்பில், ”எங்களுக்கு மட்டுதான் நஷ்டம்; கூலி பெறு வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் தரப்பில், ”அப்படி ஒன்றும் கிடையாது எங்களுக்கும் கூலியில் பிடித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்கள்.

உற்பத்தியாளர்களுக்கு என்ன பாதிப்பு? அதாவது லூஸ் செயின் பட்டறையில் 1கிலோ செயின் செய்து கொடுத்தால் 20 கிராம் (2%) வெள்ளி கிடைக்கும்; அப்படியென்றால் ரூ36,000க்கு 1கி லோ வெள்ளி விற்கிறபோது 2% வெள்ளியால் ரூ720 வருமானம் கிடைக்கிறதென்றால், விலை குறையும் போது, அது ரூ600 ஆகவோ அல்லது ரூ500  ஆகவோ குறைந்து விடுகிறது; ஆனால், “லேபருக்கு நாங்கள் அப்படி குறைத்து தர முடியாது; ரூ36,000 விலையில் வாங்கும் போதும், அது ரூ30,000 மாக குறைந்த போதும் லேபருக்கு நாங்கள் ரூ400தான் தருகிறோம்; ஆனாலும் இது போதுமானது என்று கூறமுடியாது; கட்டட வேலைக்கு சென்றால்கூட ரூ500-600 கிடைக்கிறது; அதற்கு போய்விடுகிறார்கள்; அதனால் இங்கு லேபர் பற்றாக்குறையும் கடுமையாக இருக்கிறது; இதற்குமேல் எங்களால் கூலி உயர்த்தியும் தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். “அந்த ரூ400 கூலிக்கூட வருடத்தில் எல்லா நாட்களும் தருவதில்லை; பாதி நாட்களுக்கும் குறைவாகத் தான் வேலை தருகிறார்கள்; கூலியிலும் ஏற்றம் இறக்கம் இருக்கு” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

ஆனால் எந்த கஷ்டமும் இல்லாமல் லாபமாக தொழில் செய்பவர்கள் கடைவியாபாரிகளே! “கடை வியாபாரிகள் இவ்வண்ணம் ஏற்றம், இறக்கத்திற்கு தகுந்தாற்போல் ஆபரணங்களை கூட்டிக் குறைத்து விற்பதில்லை; வியாபாரிகள் ‘செய்கூலி சேதாரம்’ என்று சொல்லி விலையை குறைக்காமல் விற்று விடுகிறார்கள் லாபத்திற்கு” என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். இது உண்மை!

இதன் இயங்குதளம், வர்த்தக பரிமாற்றம் எப்படி இருக்கிறத்தென்றால், இடத்திற்கு இடம் சற்று வித்தியாசப் படுகிறது. சேலத்தில் 1 கிலோ வெள்ளி வாங்கி வருகிறார்கள் என்றால், அதில் 8% அளவில் (அதாவது சுமார் 1 கிலோ ஆபரணம் செய்தால் 60 கிராம் முதல் 80 கிராம் வரை) உற்பத்தியாளர்களுக்கு கமிசன்; இது ஆபரணாகி போகிறபோது 80% வெள்ளி; 20% இதர உலோகங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 100% மாக வியாபாரிகளிடம் விற்பனைக்கு போகிறது. உற்பத்தியாளர்கள் இந்த 8% வெள்ளியை எடுத்துத்தான் இவர்கள் ஆபரணத்தில் சேர்க்கும், அல்லது ஆபரணம் உருவாக்க தேவைப்படும் இதர பொருட்களை வாங்கிக் கொள்வது, கூலி தருவது, (அதாவது கட்டியை உருக்குவது முதல் 16 மட்டங்களுக்கும் கூலி கழித்தல் வரை) அடுத்து “அல்லக்கைத், தொல்லக்கைகளுக்கு” அழுவது (இது குடிசைத்தொழில் என்பதால் லைசென்ஸ் ஏதுமில்லை) போன்றவற்றை செய்தாக வேண்டும்; இதையும் தாண்டித்தான் இதில் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கூலி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தொழிலுக்கு நெருக்கடிக்கு காரணம்— வெள்ளி விலை திடீரென்று குறைவதும், கூடுவதும் தான்! வெள்ளி வாங்கி வரும்போது இருந்த விலை, அதை ஆபரணமாக்கி விற்கும் போது குறைந்து விட்டால், உற்பத்தியாளருக்கு நட்டம்; கூடினால் லாபம்! ஆபரங்களின் விலையை நிர்ணயம் செய்வது அரசு அல்ல; பங்கு சந்தை பகவான்கள்! அந்த பங்கு சந்தை பகவான்கள் பெரும்பாலும் கார்பரேட் கனவான்கள்! கார்பரேட் கனவான்கள் ஆட்சியாக மாறிவிடும் மோடி ஆட்சியென்று, இந்த வெள்ளி தொழில் சிறு உற்பத்தியாளர்கள் கனவு கண்டு இருப்பார்களா? என்று தெரியாது! இந்த வெள்ளித்தொழில் போல்தான் அனைத்து சிறு தொழில்களும் இன்றும் சிக்கிச் சீரழிந்து வருகிறது; இந்த விலை இறக்கத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது;  நீங்கள் யூகிப்பது சரியே; ஆம்! வெள்ளி தங்குதடையற்ற இறக்குமதியே!

வெள்ளி உற்பத்தியாளர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 13வது இடம்; முதல் இடம் மெக்சிகோ; இரண்டாவது இடம் பெரு; மூன்றாவது இடம் சீனா! இந்த நாடுகள்தான் இறக்குமதி செய்து தள்ளுகிறார்கள். வெள்ளி பயன்பாடு இந்தியா தான் முதலிடம்! வெள்ளியாகவோ, ஆபரணமாகவோ தங்கு தடையற்ற இறக்குமதியும், ஆன் லைன் வர்த்தகமும் தான் இந்த நெருக்கடிக்கு காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் கூறும் கூற்றாக இருக்கிறது!

கூலிக்கு வாங்கி வந்து தொழில் செய்யும் அரிசிபாளையம் வி.வெங்கடேஷ் கூறுகிறார்—  

“நானு எங்க மொதலாளிக்கிட்ட கூலிக்குத்தான் வாங்கிட்டு வந்த தொழில் செய்றேன்; ஆன் லைன் வர்த்தகம் தான் காரணம்; ஒருத்தரு ஆன் லைனில வெள்ளியை உட்காந்த இடத்தில வாங்கிறாரு; அதை கால் மணி நேரத்தில அவரு அதை இன்னொருத்தன் தலையில லாபம் வச்சி கட்லன்னா, அந்த வெள்ளி அவன் வீட்ல டோர் டெலிவரி ஆகிவிடும்; அப்டி ஆகாம இருக்க அல்லது மேலும் கால நீடிப்பு செஞ்சிக்க, அதுக்கு அவன் கமிசன் கொடுத்து அழுவனும்; இப்படி இவங்க பண்ற கூத்துத் தான் எங்க தலையில வந்து எறங்குது இடியா; இத அரசாங்கம் தலையிட்டு சரி பண்ணலன்னா, நாங்க சாவ வேண்டியதுதான்; விவசாயி தற்கொல மாதிரி வெள்ளி பட்டற தொழிலாளி தற்கொலன்னு இனி செய்திதான் வரும்” என்கிறார்.


அரியாக்கவுண்டன்பட்டி காமராஜ் நகர் சிறு உற்பத்தியாளர் எம்.மூர்த்தி சொல்கிறார்—  

நாங்க இந்த தொழிலுக்கு ஏன்டா வந்தமின்னு இருக்குது; இதல நா சிறு வயசில இருந்து இருக்கிறதால வேற தொழிலும் எனக்கு தெரியாது; அதனால இத உடவும் முடில; வெள்ளி வெல ஒரு லெவல்ல இருந்தாத்தான் தொழில் பண்ண முடியும்; இல்லீன்னா முடியாது; கூலிக்காரங்களுக்கு பிரச்சன இல்ல; வியாபாரிக்கும் பிரச்சன இல்ல; நடுவுல நாங்க மாட்டிகிட்டு முழிக்கிறோம்; எங்களுக்குத்தான் பிரச்சன; மெயின் காரணம் தொழில் நெருக்கடிக்கு இறக்குமதிதான்; இறக்குமதிக்கு ஒரு கட்டுபாடு வேணும்; அத மோடி அரசும், நம்ம லேடி (அம்மா) அரசும் செய்யனும்; அதே மாதிரி ஆன்லைன் வர்த்தகத்தில இருந்து இத எடுக்கனும் (விதிவிலக்கு தரனும்); எங்களுக்கு மார்ஜன் 20% இருந்து ஒயத்தி 30%மாக கொடுக்கணும்; இது குடிசை தொழிலிங்கிறதால ஏராளமான தொல்ல; முனிசீப்புல இருந்து யாராரோ வந்து எங்கல புடுங்கி எடுக்கறாங்க; சேலத்தில உள்ள வியாபாரிங்கக்கிட்ட வித்தா தப்புச்சிக்கலாம்; கர்னாடகா, ஹைதராபாத் அங்க, இங்கன்னு கொண்டு போனா போற வழியில சேலத்துலயும் சரி; வெளி மாநிலத்திலயும் சரி; எந்த பாதுகாப்பும் இல்ல; வழியல போலிஸ் லைசென்ஸ்ச கொடு, அதக்கொடு, இதக்கொடுன்னு அடிச்சே பாதிக்குப்பாதி புடுங்கிக்கிறாங்க; ஆனா மொதலாளிங்க டன்னு கணக்குல கொண்டு போறாங்க அவங்க போலீசு கண்டுக்கிறதே இல்ல; எங்க பொழப்புதான் நாயி பொழப்பா போச்சி!
என்றார்! விட்டால் அழுது விடுவார் போலிருந்தது!

இது குறித்து சிஐடியு மாவட்ட நிர்வாகியும், இத்தொழிலில் அனுபவருமான பி,ராமமூர்த்தி கூறுகிறார்---  

“இது வந்துங்க நச்சு புடிச்ச வேலங்க; குடும்பமே சின்னது பெரிச்சின்னு பாடுப்பட்டாத்தா நாலு காசு பாக்க முடியுமுங்க; இந்தியாவிலேயே இங்க தாங்க இந்த தொழில் இருக்குது; எல்லா தொழிலும் மாதிரி தான் இதலேயும் நெருக்கடிங்க; மத்திய அரசின் கொள்கை தான் இதுக்கு காரணம்; அத மாத்தாம இத (நெருக்கடிய) மாத்த முடியாது; மாநில அரசு நெனச்சா இந்த தொழில பாதுகாக்கலாம்; மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கலாம்; நாங்களும் தொழிலாளர்களையும், சிறு உற்பத்தியாளர் களையும் பாதுக்காக்கிற போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்; இதுல ஒரு 4 லட்சம் குடும்பம் இருப்பாங்க; சேலம் மாநகரத்தில் இது முக்கியமான தொழிலு மட்டுமல்ல வாழ்வாதார பிரச்சன; மாவட்ட ஆட்சியர் இப்பதான் புதுசா வந்திருக்கிறாரு; அவரும் அரசு கவனத்துக்கு கொண்டு போய், நெருக்கடி தீர வழி காணனுமின்னு கேட்டுக்கிறேன்!” என்றார்


இறக்குமதிக்கான காரணம் உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்ததே. ஆம், 1927ஆம் ஆண்டு உற்பத்தி 18,73,924 டன்; 2012 ஆம் ஆண்டு உற்பத்தி 3,28,000 டன். இதற்கான மைன்ஸ் (சுரங்கம்) ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத், சிங்பூம், கர்னாடகா மாநிலம் ரெய்ச்சூர் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவுக்கான காரணம் சரியாக தெரியவில்லை; இருந்தாலும் உலகமய கொள்கையே காரணம்.

உதாரணமாக சேலம் மாவட்டத்தில் ‘மேக்னசைட்’ என்கிற கனிமம் உற்பத்தி செய்யும் மைன்ஸ் இருக்கிறது; உலகமய கொள்கை அமலாகுவதற்கு முன் தொன்னூறுகளில் 7 ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்து வந்தனர். ஆனால் தற்போது 900 பேருக்குள் தான் வேலை செய்கின்றனர். மைன்ஸ்சில் மேக்னசைட் இல்லை என்பதால் அல்ல; இந்த ஆட்குறைப்பு! இங்கு உற்பத்திக்கு ஆகும் செலவு, தொழிலாளர் நலன் சட்டங்கள் போன்ற ‘தொல்லைகள்’ இல்லாமல், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ‘மேக்னசைட்’க்கு விலை குறைவாக பெற முடிகிற காரணத்தினால், இந்த மைன்ஸ்சில் படிப்படியாக ஆட்களை குறைத்தும், அவுட் சோர்சிங் முறைக்கு மாறினாலும், உற்பத்தி குறைக்கப்பட்டு விட்டது; இதுதான் நாட்டில் உள்ள அனைத்து ‘கனிம மைன்ஸ்’களின் நிலமைகளும்!

ஆகவே வெள்ளியை இறக்குமதி செய்யும் பன்னாட்டு முதலாளிகள் குழுமங்களே விலையை தீர்மாணிக்கிறார்கள். அவர்களின் நலன் சார்ந்தே அது தீர்மாணிக்கப்படுகிறது. இதிலே “இறக்குமதி, இறக்குமதி” என்று கூறுகிறபோது, இத்தொழில் ஈடுபடுவோர் எல்லோரும் ஒத்த குரலில் கூறுகிறார்கள்... “சீனா தான் இறக்குமதி செய்து எங்க பொழப்பைக் கெடுக்கிறது” என்று! பொதுவாக அரசின் கொள்கை தான் காரணம் என்பதற்கு பதிலாக, இந்திய ஊடங்களும் சரி, உள்ளூர் மேளங்களும் சரி சீனா எதிர்ப்பையே கக்குகின்றன.


ஆனால் இந்த வெள்ளி தொழில் விசயத்தில் இறக்குமதியில் ‘பெரிய அண்ணனாக’ மெக்சிக்கோ இருக்கிறது; அதை வசதியாக மறைத்துவிட்டு, சீனா மீது ஏன் வன்மத்தை விதைக் கிறார்கள்? என்று தான் தெரியவில்லை; அதிலும் அரசியல் தான்! கம்யூனிச எதிர்ப்புக்கு துரும்பாக எது கிடைத்தாலும் அதை பயன் படுத்தப் படும் குறுகிய (சின்ன)புத்தி; அதுவே சீனா எதிர்ப்பாளர்களின் உத்தி! சீனாவாக இருந்தா லென்ன? யாராக இருந்தா லென்ன? இந்திய பாரம்பரிய தொழில்களை அழிக்க விழைவோர்களை எதிர்த்து நாட்டைக்காப்பதே இன்றைய தேசபக்த பணி; அதைத்தான் இந்திய இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது.

சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் நடந்து முடிந்த சிபிஐ(எம்) 21வது அகில இந்திய மாநாட்டின் தீர்மாணம் கூறுகிறது— முறைசாராத்தொழில் துறையில் பணிபுரிவோரில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான்; அவர்களின் நிலைமைதான் தினக் கூலிகளாக, சமூக பாதுகாப்பு இல்லாதவர்களாக இருப்பது நெஞ்சத்தைப் பதைக்க வைக்கிறது; இதர வேலை நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மோசமானதாக உள்ளது!” என்கிறது. இடம் பெயர்ந்தவர்களின் நிலைமையை இவ்விதம் விளக்கினாலும், ஏறக்குறைய இதுதான் இடம் பெயராதவர்களின் நிலைமையும்கூட! (தமிழ்நாட்டில் (சேலம்) இருந்து சென்று ஹைதராபாத் மற்றும் ரெய்ச்சூரில் ஆயிரக்கணக்கில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் கூடுதல் செய்தி!)

லட்சக்கணக்கான ஏழை எளிய நடுத்த மக்களின் வாழ்வாதாரத்தை  அவலநிலையில் இருந்து மீட்க மத்திய மாநில அரசுகள் எடுக்குமா? எடுக்கவில்லையென்றால் எடுக்க வைக்க வேண்டும்! அந்த அளவுக்கு இத்தொழிலில் உள்ளவர்கள் ஆரம்பம் முதல் அனலில் அல்லாடுவது போல், அனைவரின் மனங்களிலும் ‘அனல்’ ஜுவாலை விட்டு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது!
-பி.தங்கவேலு.

22.07.2015 (இன்று) தீக்கதிரில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது; நன்றி.

Thursday, 9 July 2015

மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது..!


வியாபம் விவகாரம் பாஜக விற்கு பின்னடைவு மட்டுமல்ல, மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது!

நீதி மன்றம் என்று ஒன்று இல்லையென்றால், தேசத்தை கொள்ளையர் களிடமிருந்து (குமாரசாமி நீதி மன்றங்களை தவிர்த்து) காப்பாற்ற முடியாது போலிருக்கு!

முந்தைய ஆட்சியும் (காங்கிரஸ்), இன்றைய ஆட்சியும் (பாஜக) ஊழலில் ஒன்றே என்பதை பாமர மக்களுக்கு இது உணர்த்தி இருக்கிறது!

இன்று 09.07.15 PTTV நேர்பட பேசு...க்கு!

சபாஷ்..! மனுஷ்..!

PTTV இன்று 9.7.15  நேர்பட பேசுவில்...! 
எங்கும் வியாபித்துள்ள மபி "வியாபம்" பற்றிய விவாதத்தில் எழுத்தாளர் மனுஷ்புத்திரன் அடித்தாரே ஒரு அடி..!  செம அடி!

பாஜக சார்பில் வந்த வித்துவான்கள், "காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்க வில்லையா?" என்றார்கள்; அதற்கு மனுஷ், "அப்படியென்றால் பிஜேபி எதற்கு? அதை கலைத்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்துக் கொள்ளுங்கள்!" என்றார்!

அதையும் தாண்டி விவாதம் சூடான போது, "நீங்க (பாஜக) யாருன்னு தெரியாதா? கொலைக்காரக் கட்சி; மோடி ஆட்சியை வாஜ்பேயே பதவி விலக சொன்னாரே; குஜராத்தில் மோடி கொன்று குவித்தபோது...!" என்று ஆக்ரோஷமாக கூறியது மிகுந்த துணிச்சலே..! சபாஷ்..!

Wednesday, 8 July 2015

வரவேற்க தக்கதல்ல!

இதன் ஒரு பகுதி இன்று  7.7.15 PTTV  நேர்பட பேசுவில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. நன்றி!    

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடாதது உள்நோக்கம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வரவேற்க தக்கதல்ல! ஆகையால் மத்திய அரசு உடனடியாக வெளியிட்டு தன்னிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை பறைச்சாற்ற வேண்டும்! செய்யுமா?


ஓ..

ஓ..! தமிழ்நாடெங்கும் வட மாநில இந்தி பேசும் தொழிலாளர்கள் அன்றாடம் காச்சிகளாக (தினக்கூலிகளாக) திரும்பிய பக்கமெல்லாம் இருப்பதைத் தான், "இந்திய பொருளாதாரத்தோடு இந்தி மொழியும் வேகமாக வளர்கிறது" என்கிறாரோ?